கமலா தாஸ் கவிதை
புழுக்கள்
அந்திப்பொழுதில்
ஏரிக்கரையில்
காதல் புரிந்த கண்ணன்
அவளைக் கடைசியாய்ப் பிரிந்து சென்றான்.
செத்தவள் போல் கிடந்தாள் ராதா
அன்றைய இரவு கணவனின் கரங்களில்.
அவன் கேட்டான்
என்ன தவறானது
எனது முத்தத்தில் மனம் இல்லையா அன்பே?
அவள் சொன்னாள்
இல்லை. அப்படி எதுவும் இல்லை.
ஒரு எண்ணத்தைத் தவிர
புழுக்கள் கடித்தால்
பிணத்துக்கு என்ன?
தமிழாக்கம்: மதுமிதா
மதுமிதா கவிதை
இலக்கு நோக்கி
இந்தப் பிணைப்பு வேண்டாம்
இனியும் பாதுகாப்பு வேண்டாம்
அகண்ட வானில்
அந்தப் பறவை போல் மிதந்து
இறகசைத்து
லட்சியத்திற்காக பறக்க வேண்டும்
காற்றுப் பெருவெளியில்
இலக்கு நோக்கி