நாளை இறந்துவிடுவீர்கள் என்றால் எப்படி வாழ்க்கையை வாழ்வீர்களோ அப்படி வாழுங்கள்! நீண்ட நாள் வாழ்வீர்கள் என்றால் எப்படிக் கற்றுக் கொள்வீர்களோ அப்படி கற்றுக் கொள்ளுங்கள்!
– மகாத்மா காந்தி.
இன்னும் மீதமிருக்கும் அழகான விஷயங்களைப் பற்றி யோசிக்கிறேனே தவிர, நான் எல்லா துன்பங்களையும் நினைத்து குழப்பிக் கொள்வதில்லை.
– ஆன் ஃபிராங்க்.
வாழ்க்கையின் முடிவுரைதான் முதுமை.
– எமிலியா பார் (இங்கிலாந்து நாவலாசிரியர்).
திருமண வாழ்வில் மகிழ்ச்சி என்பது முழுக்க முழுக்க தற்செயலானதே!
– ஜேன் ஆஸ்டன் (ஆங்கில நாவலாசிரியர்).
நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை. எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.
– புத்தர்.
வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட, இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது.
– ஹெலன் கெல்லர்.
நம்பிக்கை கடவுளையும் அசைக்கும்; பயம் எதிரியையும் செயல்பட வைக்கும்.
– ஜோயல் ஆஸ்டீன்.
இன்றைய தினத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நேற்றைய தினத்தை நீங்கள் ஆராய வேண்டும்.
– பியர்ல் எஸ்.பக் (அமெரிக்க எழுத்தாளர்)
இதயம் எல்லாக் காலத்திலும் கொஞ்சம் கூட அனுபவம் இல்லாததாகவே இருக்கிறது.
– ஹென்றி டேவிட் தோரே.
காதல் போரைப் போன்றது. எளிதாக ஆரம்பித்துவிடலாம்… நிறுத்துவது மிக கடினம்.
– ஹெச்.எல்.மென்கென் (அமெரிக்க பத்திரிகையாளர்).
Image courtesy:
http://files.abovetopsecret.com/
மேலும் படிக்க…
வாழ்க்கையின் முடிவுறைதான் முதுமை.. முடிவுறை நீளாது இருக்க வேண்டும்.அன்புடன்