உடல் உறுப்பு தானம் – ஒரு விழிப்புணர்வுப் பார்வை

O 2

உறுப்பு தானம் என்பது: நாம் உடல் உறுப்புகளை (இறந்த அல்லது உயிருடன் இருக்கும் நபரின் உடலில் இருந்து) அறுவை சிகிச்சை மூலம், தேவைப்படும் நபருக்கு பொருத்தி, அவர் இயல்பான வாழ்க்கை வாழ உதவும் ஓர் உயர்ந்த முயற்சி. தானம் செய்பவர் ‘டோனர்’ என்றும் தேவைப்படுபவர், ‘ரெசிப்பியன்ட்’ என்றும் குறிக்கப் படுவார்கள்.

எந்த உறுப்புகளை தானம் செய்யலாம்?

கண், சிறுநீரகம், தோல், எலும்புகள் / எலும்பு மஜ்ஜை, இதயம் போன்றவை அதிக அளவு தேவைப்படும் உறுப்புகள். இவற்றில் சிறுநீரகம் மற்றும் உடல் திசுக்கள் போன்றவற்றை டோனர் உயிருடன் இருக்கும்போதே தானம் செய்யலாம்.

யாரெல்லாம் தானம் செய்யலாம்?

நாம் அனைவரும், வயது ஜாதி மத பேதமின்றி உறுப்பு தானம் செய்யலாம். (எனினும் புற்று நோய், HIV +ve போன்ற பாதிப்பு உள்ளவர்கள், உறுப்பு தானம் செய்ய இயலாது)

தேவை
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும், ஆயிரக் கணக்கான மக்கள், பொருத்தமான உடல் உறுப்பு கிடைக்கப் பெறாமல், இறக்கின்றனர்.

புள்ளி விவரம்…

1,50,000 பேர் சிறுநீரகம் வேண்டி பதிவு செய்துள்ளனர், ஆனால், வெறும் 5,000 பேர் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளனர்.

1,00,000 பேர் கண்/கருவிழி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனினும், அதற்கேற்ற டோனர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

50,000 பேர் இதய நோயினாலும், 2,00,000 பேர் கல்லீரல் மற்றும் குடல் நோயினாலும் இறக்கின்றனர்.

இயற்கையான மற்றும் விபத்தின் மூலம் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், உறுப்பு தானம் வேண்டி காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது.

மறுவாழ்வு மலருமா?

உறுப்பு தானம் தேவைப்படுபவருக்கு, இது கிட்டத் தட்ட மறு வாழ்வு போன்றது.  பொருத்தமான உடல் உறுப்பு கிடைக்கப் பெற்றவர், இதன் மூலம் பிறரைப் போல இயல்பான வாழ்க்கை வாழ முடியும்.

எதிர்பாராத விபத்து போன்ற அசம்பாவிதத்தில், தம் அன்புக்குரியவரை இழந்தாலும், அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம், பலர் உயிர் வாழ்கின்றனர் என்பது, டோனர் குடும்பத்துக்கு ஓர் ஆத்மார்த்தமான திருப்தியை அளிக்கிறது. மேலும், தானம் பெற்ற குடும்பத்தினரும் இதன் அருமையை உணர்ந்து இருப்பதால், தாங்களாகவே முன் வந்து உறுப்பு தானத்துக்கு பதிவு செய்கின்றனர்.

எவ்வாறு தானம் செய்வது?

  • டோனர்-ஆக முதல் படி, உறுப்பு தானம் செய்வதற்கு பதிவு செய்து கொள்வது. அதன் விபரங்களை உங்களின் சுற்றம், நட்பு மற்றும் உறவினர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.
  • இப்படிப் பதிவு செய்து கொள்வது, டோனருக்கு, இதைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலையும், அவருடைய அர்ப்பணிப்பையும் மேம்படுத்துகிறது.
  • பதிவு செய்து கொள்வதால், மருத்துவர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்களுக்கு தேவையான நேரத்தில் தொடர்பு கொள்வது எளிதாகிறது. இது நேர விரயத்தைத் தவிர்க்கிறது.
  • எங்கு சென்றாலும், தங்களின் டோனர் கார்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். தங்கள் சட்டைப் பையில் / பர்ஸில் இந்த கார்டு எப்போதும் இருப்பது அவசியம்.
  • தங்களின் குடும்பத்தினருக்கு உங்கள் விருப்பத்தைத் தெரியப் படுத்துங்கள். நெருங்கிய உறவினரின் அனுமதி இல்லையேல், உறுப்பு தானத்தை செயல்படுத்த இயலாது.

டோனர்-ஆகப் பதிவு செய்து கொள்ள கீழ்க்கண்ட சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அணுகலாம்.
Mohan Foundation (www.mohanfoundation.org)

Shatayu- A Gift of Life (shatayu.org.in/)

Gift your organ Foundation (www.giftyourorgan.org/)

Gift a Life (giftalife.org/)

டோனர்-ஆக இன்றே பதிவு செய்வோம்.. இறந்தும் பலர் வாழ்வில் புத்தொளி கூட்டுவோம்!

– வித்யா குருமூர்த்தி

o 1

Image courtesy:

http://c1.thejournal.ie/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s