ஷர்மிளா ராஜசேகர்
‘இந்தியாவை ஆண்ட மன்னர்களின் ஆட்சியின் கீழ் உள்ள இடங்களின் வரைபடங்கள்’னு மேப் பார்க்கும் போது எல்லாத்துலேயும் தமிழ்நாடு மட்டும் விட்டு வளைஞ்சு போயிருக்கும். சின்ன பிள்ளையில் நினைச்சுருக்கேன்… ‘ஏன் தமிழ்நாட்ட மட்டும் பிடிக்காம விட்டுட்டாங்க’ன்னு. இப்போ புரியுது… யாருமே தமிழ்நாட்டுக்கு வராமதான், நம்ம மக்களுக்கு குறுகிய மனப்பான்மை அதிகமா இருக்கு!!
உலகம் முழுதும் ஃபேஸ்புக் மூலம் பெரிய பெரிய புரட்சியெல்லாம் அரங்கேற, இங்க உள்ள மனுஷங்க புத்தி மட்டும் ஓடிப்போன டீச்சர் கிட்டேயும், ரெண்டு பேரை லவ் பண்ணின பொண்ணுன்னு சொல்லி திட்டவுமே முழு ஒத்துழைப்பு கொடுக்கறாங்க. இதில் என்ன விஷயம்னா இவங்க ஷேர் பண்ணின படங்கள் எதுவுமே உண்மையானது இல்லை. ஒரு விஷயத்தை பேசும் போது ஆயிரம் முறை வேணாம்… அட்லீஸ்ட் ஒரு முறையாச்சும் ஆராய்ந்து கூடவா பார்க்கக் கூடாது.. என்ன ஒரு மோசமான குறுகிய புத்தி!
எங்கோ ஒரு செய்தி வெளியில் வர, அதற்குப் பொருத்தமாக ஏதோ ஒரு பெண்ணின் படத்தை எவனோ வெளியிட, செம்மறியாட்டு கூட்டம் போல கூட்டம் கூட்டமாக பகிரும் அறிவிலிகள்… இப்படிப் பகிரும் போது கிண்டல் செய்யும்போது மற்றவர்கள் மனதில் இவர்கள் மேல் உள்ள மரியாதையும் போய் விடும் என்பது கூட தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான்.
இப்படியாக அடுத்த தலைமுறையை பாழாக்கி விடுவதில் ஒவ்வொருவரும் பங்கெடுத்துக்கொண்டிருப்பதை அறியாமல், யாரையோ குறை சொல்வதாக நினைத்து தங்கள் வாரிசுகளின் மனதில் விஷத்தை தூவிக்கொண்டு இருக்கிறது இன்றைய தலைமுறை. எங்கே மோசமான செய்திகள் கிடைக்கும் என்று அலையும் கூட்டம்…
ஒரு பெண், கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி புகட்டி ஒரு கிராமத்தையே மாற்றியதாக ஒரு செய்தி… அதைப் பகிர, அதற்கு நல்ல வாழ்த்து சொல்ல ஒருவரும் இல்லை. ஆனால், தவறான செய்திக்கு முண்டியடித்துகொண்டு அறிவுரை சொல்லும் அறிவில்லாக் கூட்டம்…
நல்லது செய்யாவிட்டாலும் அடுத்த தலைமுறையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி விட்டுடாதீங்க. அதில் உங்க பிள்ளைங்களும் இருப்பாங்க…
***
நேத்து ஒரு கோயிலுக்குப் போனோம் போற வழி பயங்கற ரிமோட் ஏரியா. ரோடு சரியில்ல. மக்கள் விறகு வெட்டி தலையில தூக்கிட்டு போறது… குடத்தை தூக்கிட்டு நடந்தே போறதெல்லாம் பார்த்தேன்.
.
காடு மாதிரி ஏரியா, அங்கேயும் கூட ரோட்டு மேலயே ஒரு டாஸ்மாக். குடிக்க பத்து பேர். அடடடா… நம்ம கவர்ன்மென்ட்ட அடிச்சுக்கவே முடியாது. மக்கள் மேல எவ்ளோ பாசம்? எது இருக்கோ இல்லையோ பேசிக் நீட் இருக்கு!!!
***
பெண்ணை கேவலப்படுத்துவது மட்டுமே ஆண்மை என்று சொல்லிக் கொடுத்தது யாராக இருக்கும்?
வஞ்சம் இல்லாதிருத்தல், கோபம் கொள்ளாமை, புறம் பேசாமை, தவறை மன்னித்தல் இதுதான் ஆண்மை.
இன்றைக்கு இன்னொரு பெண்ணை பற்றின செய்திதான் இங்கே! அம்மா பொண்ணே எங்கே இருந்தாலும் சீக்கிரம் செத்துடு… அப்போதான் நீ நல்லவளாம் எல்லோருக்கும் நிம்மதியாம்!
***
வாசிக்க…