ப்ரியங்களுடன் ப்ரியா–25

th6

தைராய்டு

World Thyroid Day / May 25, 2016

உலக தைராய்டு தினம் / மே 25, 2016

th2

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா  இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல..

நான் ரொம்ப குறைவா டையட் உணவு தான் சாப்பிடறேன்.. ஆனாலும் உடம்பு வெயிட் போட்டுடுது.. யோகா வாக்கிங் எல்லாம் போறேன் ஆனாலும், உடம்பு மட்டும் ஏறிக்கொண்டே போகிறது என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம்.. அதற்கு மாற்றாக, வேறு சிலரோ ஒல்லிப் பிச்சான்களாக இருப்பார்கள். எப்போ பார்த்தாலும் எதையாவது சாப்டுட்டே இருக்கா ஆனால் பாரு எவ்வளவு சாப்பிடாலும் உடம்பு வரவே இல்ல ரொம்ப ஒல்லியா வீக்கா இருக்கான்னு  சொல்லுவாங்க..

th7

இதுக்கெல்லாம் என்னங்க காரணம் ??

தைராய்டு தான் ..

தைராய்டு என்றால் என்னங்க ?? அதை எப்படி  பிரியா தெரிஞ்சுக்கலாம்னு  நீங்க கேட்பது புரியுதுங்க … கொஞ்சம் கவனமா படிங்க இதை .

30 வயதை தாண்டும் நமது நாட்டு பெண்களுக்கு  30 முதல் 45 சதவிதம் வரை தைராய்டு பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது ..

th4

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.

நம் உடலில் உள்ள தைராய்டு (Thyroid Glands) சுரப்பிகள்தான் நம் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன..நம் அன்றாட வாழ்க்கை முறை மாற்றங்களால் தான் தைராய்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. நம் கழுத்தில் உள்ள நாளமில்லாச் சுரப்பி நம் உடல் இயக்கத்திற்க்கு தேவையான பணிகளை செய்கிறது.. பொதுவாக நம் உடலில் அயோடின் குறைபாட்டினால் தான் தைராய்டு பிரச்சனை வருகிறது.. இந்த நோய் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கிறது..

நாளமில்லாச் சுரப்பிகளுள் மிக முக்கியமானது தைராய்டு சுரப்பி. இதில் சுரக்கும் தைராக்சின் எனும் ஹார்மோன், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது.

th3

ஆரம்ப அறிகுறிகள் :

மோசமான தசை தொனி (தசைத் தளர்ச்சி)

களைப்பு

குளிர் தாங்கமுடியாமை, குளிரை உணர்தல் அதிகரித்தல்

உளச்சோர்வு

தசைப்பிடிப்புக்கள் மற்றும் மூட்டு வலி

மணிக்கட்டு குகை நோய்

முன்கழுத்துக் கழலை

மெலிதல், விரல்நகங்கள் நொறுங்குதல்

மெலிதல், முடி நொறுங்குதல்

வெளிரிய தன்மை

குறைவான வியர்வை

உலர்ந்த, அரிக்கும் தோல்

எடை ஏற்றம் மற்றும் நீர்ப்பிடிமானம்

குறை இதயத் துடிப்பு (குறைவான இதயத்துடிப்பு வீதம் – நிமிடத்திற்கு அறுபது துடிப்புகள்)

மலச்சிக்கல்

வெகுநாளான அறிகுறிகள் :

மெதுவான பேச்சு மற்றும் தொண்டை கட்டி, குரல் உடைதல் – மெல்லிய குரலையும் கேட்க முடிதல்

வறண்ட வீங்கிய தோல், குறிப்பாக முகத்தில்

கண் புருவங்களின் வெளிப்பகுதி மெல்லியதாதல் (சைன் ஆப் ஹெர்டோக்ஹி)

இயல்பற்ற சூதகச் சுழல்கள்

குறைவான உடல் அடிப்பகுதி வெப்பநிலை

குறைந்த பொதுவான அறிகுறிகள் :

பழுதடைந்த நினைவுத்திறன்

பழுதடைந்த புலனுணர்வு செயல்பாடு (தெளிவற்ற மூளை) மற்றும் கவனமின்மை

குறைந்த மின்னழுத்த சமிக்ஞைகளிலும் ECG மாற்றங்களுடன் குறைந்த இதயத்துடிப்பு வீதம். குறைவான இதய வெளியீடு மற்றும் குறைந்த சுருங்கு திறன்.

இரத்தசை சர்க்கரைக் குறைவு எதிர்ப்பு(அல்லது இரவு உணவு)

மந்தமான அனிச்சைகள்

முடியுதிர்தல்

அனீமியா ஏற்படுத்தும் பழுதான ஹீமோகுளோபின் தொகுப்பு (குறைந்த EPO அளவுகள்), பழுதான குடல்சார்ந்த இரும்புத்தாது மற்றும் பொலிக்கமில உறிஞ்சும் தன்மை அல்லது பித்தபாண்டுலிருந்து வரும் B12 குறைபாடு

விழுங்குவதில் சிரமம்

ஆழமில்லாத மற்றும் மெதுவான சுவாச அமைப்புடன் மூச்சுவிடுதலில் சிரமம்

தூக்கம் நேரம் அதிகரிப்பு

உறுத்தும் தன்மை மற்றும் மனநிலை நிலைத்தன்மையின்மை

பீட்டா-கரோட்டின்[15] விட்டமின் A ஆக மாற்றப்படும் மோசமான செயலால் தோல் மஞ்சளாதல்

குறைவான GFR உடன் மந்தமான சிறுநீரகச் செயல்பாடு.

அதிகரித்த வடிநீர் கொழுப்பு

கடுமையான உளப்பிணி (மிக்ஸெடிமா மேட்னெஸ்) என்பது தைராய்டு சுரப்புக் குறைக்கு ஒரு அரிதான அறிகுறியாகும்.

சுவை மற்றும் மணம் உணர்திறன் குறைவு (அனோஸ்மியா)

Th1

தைராய்டு பிரச்சனையை ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம்.. அவற்றின் அளவை பொருத்து ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரு வகைப் படுத்தலாம்.. பலருக்கு Goiter எனப்படும் தைராய்ட் அளவு பெரியதாகி  கட்டியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு தைராய்டு கான்சேர் அளவுக்கு வந்து இருக்கிறது. முதலில் எல்லாம் எல்லாருக்கும் பிரஷர் , சுகர் பிரச்சனைகள் மட்டுமே இருந்தன. இப்போ ஃபுல் ஹெல்த் செக்கப் செய்யப்போகும் எல்லாருக்குமே பிரஷர் ஷுகரோடு தைராய்டும் இருப்பதாக ரிசல்ட் வருகிறது. T3, T4, TSH என்ற ஹார்மோன்கள் சுரப்புத்தான் இதற்கெல்லாம் காரணம்..

ரத்தத்தில் TSH அளவு அதிகமாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு எனப்படும்..

T3,T4 ன் அளவு அதிகமாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு என்கிறார்கள்..

th9

தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும். அதேபோல், தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை ஹைப்போ தைராய்டிஸம் என்பர். எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதிப்பு அதிகம்..

iodized உப்பு சேர்த்து கொள்ளுவது  தைராய்டு குறைபாடுகள் ஒரு சிலவற்றை தவிர்க்க உதவும். 40 வயதுக்கு மேலே பெண்கள் புல் செக் அப்  செய்து கொள்ளுவது நல்லது..

th8

ஹைப்போ தைராய்டு

இரத்ததில் தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவில் சுரப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.. இது பொதுவாக

வயது பெண்களையும் பாதிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும், உடல் தளர்ச்சி,சோர்வு, அதிக தூக்கம், முடி உதிர்தல், மறதி,தலை வலி, கை,கால்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், குறைந்த குளிரைக்கூட தாங்க முடியாத தன்மை, முறையற்ற மாத விலக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும்..

தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப், போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பிற்க்கு அயோடின் அவசியம். ஆனால் இவை தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்ச விடாமல் தடுக்கும்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளுட்டன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளுட்டனானது, கோதுமை, பார்வி போன்ற தானியங்களில் இருக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்..

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால்,  அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பாஸ்ட் ஃபுட் உணவுகள் மட்டுமின்றி, எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை, தைராய்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்ட உடனேயே உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கால்சியமானது தைராய்டிற்காக எடுத்து வரும் மருந்துகளின் சக்தியைக் குறைத்துவிடும். எனவே பால் பொருட்களை மருந்து மாத்திரைகள் எடுத்த சில மணிநேரங்கள் கழித்து எடுக்க வேண்டும்.

தைராய்டு பிரச்சனை இருந்தால், அது ஹைப்போவாக இருக்கட்டும் அல்லது ஹைப்பராக இருக்கட்டும், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

th5

ஹைப்பர் தைராய்டு

இரத்தத்த்இல் தைராக்சின் அதிக அளவில் சுரப்பதால் ஹைப்பர் தைராய்டு ஏற்படுகிறது.. பசி அதிகமாக இருக்கும், அடிக்கடி சாப்பிட்டாலும் உடல் மெலிந்து கொண்டே போகும், கை-கால்களில் நடுக்கம் இருக்கும்,சில சமயங்களில் உடல் முழுவதும் நடுங்கும்,காரணம் எதுவுமின்றி கோபம் வரும், அடிக்கடி மலம் கழிக்க வேண்டியிருக்கும்,

தூக்கமின்மை,நாடித் துடிப்பு அதிகமாக இருக்கும்,மாதவிலக்குப் பிரச்னைகள்,கால் வீக்கம், மூட்டுவலி, ஞாபக சக்தி குறைவு, வேலைகளில் ஈடுபாடற்ற தன்மை தோன்றும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களால் முதலில் கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டு, அதில் அழற்சி ஏற்பட்டு, ஹைப்பர் தைராய்டு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள், ஜாம், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மாவுப் பொருட்கள் போன்றவற்றை தங்களின் உணவில் சேர்ப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும், உங்களுக்கு உணவில் இனிப்புச்சுவை வேண்டுமானால், தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் மாவைத் தவிர்த்து, தானியங்களை உட்கொள்ள ஆரம்பியுங்கள்.

கழுத்தில் கட்டி ஏற்பட்டால்…:

கழுத்தில் தைராய்டு சுரப்பி உள்ள பகுதியில் சிறிய அளவில் கட்டி ஏற்பட்டால் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஏனெனில் தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் நிலையில் வீக்கமும் விஷக் கட்டியும் ஏற்படும். இது நச்சுக் கழலை ஆகும்.

ஆரம்ப நிலையில் வலி இருக்காது. திடீரென கட்டி பெதாக வலிக்கத் தொடங்கும். சில சமயங்களில் பேச்சு நரம்பு பாதிக்கப்பட்டு, பேச்சுத் திறன் பறி போகவும் வாய்ப்பு உண்டு. எனவே ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கும் நிலையில் எளிதாகக் கட்டுப்படுத்தி விடலாம்.

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், உணவில் இஞ்சி, மஞ்சள், பட்டை போன்றவற்றை அதிகம் சேர்த்து வர, அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். அதே சமயம் ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றில் கொய்ட்ரஜன் இயற்கை வடிவில் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்க்கும் போது, தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கும்.

வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, அதிகாலையில் சிறிது நேரம் சூரியக்கதிர்கள் சருமத்தின் மேல் படும்படி வாக்கிங் மேற்கொள்வது ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

ஒவ்வொருவரும் தினமும் முயற்சிக்க வேண்டும். அதற்கு தியானம், நல்ல பாட்டுக்களை கேட்பது, நண்பர் அல்லது குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பது என்று ஈடுபட வேண்டும்.

பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்க புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது.

நாம எவ்வளவு தான் கோடி கோடியா சம்பாதிச்சாலும் இழந்த உடல் நலனை மட்டும் எப்போவுமே திரும்ப பெற முடியாது ,,

அதனால சரியான உணவு முறை,  உடற்பயிற்சி முறை என நம் உடம்பையும் மனசையும் நாம சரியாய் வைத்து கொண்டால் வருமுன் காத்து நம்மை நாமே பேணலாமே…

வாழ்க வளமுடன் !

  • ப்ரியா கங்காதரன்

IMG-20151106-WA0049

 

ப்ரியங்களுடன் ப்ரியா–20

குளிர்

winter2..

நீ…நான்…

பின் நமக்கான குளிர் …

நீயும் நனைய நானும் நனைய 

நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து

நடுங்கியது குளிர் ..

மழை குளிரை  மட்டும் கொணர்வதில்லை

சில நேரங்களில் காதலையும் …

குளிர் உன் அருகாமையில்

அருமையாகவும்

தூரத்தில் அவஸ்தையாகவும் ..

சிறுமழை, பெருமழை

எதுவும் குளிரை  மட்டும் 

கொண்டுவருவதில்லை

உன் நினைவுகளையும் சேர்த்தே ..

நீ மழையாக

நான் துளியாக

மெல்ல பொழியட்டும்

குளிர் சாரல் …

நம் உலகில்

நான்

நீ

பின், நமக்கான குளிர்…

குளிர் காலம்… உடலின் உட்புற செல்களையும் உறைய வைக்கும் குளிரையும்,, நெருப்பில்லாமலேயே புகைய வைக்கும் பனியையும்   சூழ்ந்து கொண்டு, இந்த பருவத்திற்கே உரிய அழகுடன் மிளிரும் காலம்… ஏழைகளும்  இலவசமாக ஏசியை அனுபவிக்கட்டும் என பெருந்தன்மை காட்டும் இயற்கை.. பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் பழையகாலத்தைப் போல முன்பனி கொட்டத் தொடங்கி இருக்கிறது. குளிர்காலம் என்றால் என்ன என்பதே மறந்து போய் விட்ட போது, காலம் தான் இன்னும் இருப்பதை இப்போது உணர்த்தி இருக்கிறது..குளிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும்…

.

என் சிறு வயதில் குளிர்காலத்தில் காலையில் எழுந்திருக்கவே பிடிக்காது.. அதிலும்  படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே, சூடான காப்பியின் நறுமணத்துடன் கண்ணை மூடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடிக்கும் சுகமே தனிதான்..காப்பியை குடித்து விட்டு மறுபடியும், கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும்.. யாராவது எழுப்பினால் நேரே செல்வது சமையலறைதான்.. பாட்டி வீட்டில் விறகடுப்புதான்.. அடுப்பின் முன்னால் அமர்ந்து கொண்டு, ஊதுகுழலால் நெருப்பை என்று ஊதிவிட்டு, லேசாக எழும் புகையை சுவாசித்துக்கொண்டே, உள்ளங்கைகளை நெருப்பின் முன்னர் நீட்டி குளிர் காய்வது மிகவும் பிடிக்கும்.

வீட்டின் வெளியில் வந்து பேசும் போது, புகைபிடிக்காமலே எல்லோருடைய வாயிலிருந்தும் புகை வருவதை பார்க்க  வேடிக்கையாக இருக்கும். வெறும் விரல்களை வாயில் வைத்து, புகை பிடிப்பதைப்போன்று  அக்கா,, அண்ணன் களுடன் சேர்ந்து செய்ததும் உண்டு.

கடவுளின் தேசத்தில்  நானிருந்த வீட்டின் பின் புறத்தில் பலா மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்து இருக்கும், சுற்றிலும் செடிகள் இருந்தாலும்  அந்த  மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து கம்பிரமாய் இருக்கும் ,, குளிர் காலங்களில் பாட்டி பேச்சை கேட்க்காமல் ஆட்டம் போட்டு திட்டு வாங்கி பலா  மரத்தடியில்   உக்காந்து அதோட இலையை கன்னத்தில் வைத்து உரசும் போது சவரம் செய்யாத அப்பாவின் 5 நாள் தாடை  முடியின் சொரசொரப்பும் கத கதப்பும் எனக்கு கிடைக்கும் ..   அந்த மரத்தின் கீழே வந்து உட்கார்ந்தவுடன் எங்கிருந்தோ வந்து குதித்து என் மனத்தை வானத்தில் மிதக்கும் மேகக்கூட்டங்களைப் போல இலேசாக்கி எல்லையற்ற கற்பனைகளுக்கூடாக எட்டமுடியாத உலகங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றுவிடும் ..

குளிர் அதிகமாக இருக்கும்  நாட்களில், வைக்கோல்போரை கொஞ்சம் அள்ளிக்கொண்டு வந்து போட்டு . வைக்கோல் போரைக்கொளுத்தி, அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக வைக்கோல் போரை எரித்து குளிர்காய்ந்ததையும் மறக்கத்தான் முடியுமா..? உள்ளங்கைகளை பரபரவென தேய்த்துக்கொண்டே, நெருப்பில் கை வைப்பதும், பின்னர் அப்படியே கன்னத்தில் வைத்து குளிர்காய்வதும் குளிருக்கு  எவ்வளவு இதமாக இருக்கும் தெரியுமா..?

நம் ஊரில் எப்பொழுதும் வெயில் காலம் . மழைக் காலம், குளிர் காலம் என்று காலநிலை மாறி,மாறி வந்தாலும், பெரும்பாலான நாட்கள் வெய்யிலிலும், வியர்வையிலும் தான்.. குளிர்காலம்… மனதுக்கும் உடலுக்கும் குளிரூட்டக் கூடிய காலம் தான். இதோ குளிர்காலம் தொடங்கிவிட்டது…ஆனாலும்,பனிக்காலம் தொடங்கும் போதே நமது தலை முதல் கால் வரை ஒவ்வொருவிதமான தொல்லைகள் ஏற்படுகின்றது.கொஞ்சம் கவனமாக இருந்தால் எந்தவித பிரச்சனையும் இன்றி பனிக்காலத்தையும் ரசிக்கலாம்.

winter1

குளிர்காலத்தை சமாளிப்பது எப்படி :

குளிர் காலத்தில் நாம் உண்ணும் உணவு நிறைய ஊட்டச்சத்து நிரம்பியவையாக இருக்கவேண்டும்.

இதன் மூலம், குளிர் காலங்களில் ஏற்படும் ஜல தோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக உடல்வளத்தை பெறலாம். குளிர்காலம் தொடங்கி விட்டதால், அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய நேரம் இது.. கம்பளிகளையும், ஸ்வெட்டர்களையும் எடுத்து தயாராக வைத்திருங்கள். வெளியே பனியில் செல்ல நேர்ந்தால் முக்கியமாய் குழந்தைகளுக்கு காதுகளை மூடும் குரங்குக்குல்லா போட வேண்டும். பெரியவர்கள் மப்ளர் கட்டிக் கொள்ளலாம். தலை காது வழியே பனி விரைவில் உடலுக்குள் சென்று பிரட்சனை தரும். ஆகவே இப்படிச் செய்வது வரும்முன் காப்பது போலாகும்..

.

பனிக்கால பராமரிப்பு:-

இந்த குளிர்காலத்தில் சருமமும் தலைமுடியையும் வறண்டு போகச் செய்யும். பனிக்காலம் வந்து விட்டாலே உடலில் ஒரு வறட்சித் தன்மையும் வந்து விடுகிறது. சருமம் வறண்டு போகாமல் இருக்க கிரீம்கள் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன்பாக இலேசாக எண்ணை தடவிக் கொண்டு குளித்தால் குளித்த பின் தோலில் வறட்சியால் வரும் சுருக்கங்கள் தவிர்க்கப்படும்.

சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறும், சிறிதளவு தேனும் கலந்து குடிக்க புத்துணர்ச்சியாய் இருக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தின் உள்சூடு பாதுகாக்கபடும். கால்பாதங்கள் வெடித்து விடுவது பனிக்காலங்களில் சகஜம். இதற்கு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைத்து நீரில் உப்பு சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து. 15 நிமிஷம் கழித்து ப்யூமிக்ஸ் கல்லில் நன்கு தேய்க்கவும். பிறகு பாதங்களை அழுந்தத் துடைத்து லேசாக க்ரீம் தடவவும். பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் நல்லது அது வாசிலைனுக்கு சமம். தோலுக்கு சிறந்த பாதுகாப்பை தரும்.

உதடுகளுக்கு அவ்வப்போது சிறிது வெண்ணை பூசவும். வாசிலைன் அல்லது உதடுகளுக்கென்றே உள்ள

பிரத்தியேகக் க்ரீம்களையும் பயன்படுத்தலாம்.

பாதாம்

பாதாம் பருப்பு  பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.  இது சர்க்கரை நோய்க்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும். வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்திற்கும் சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவாகும்.

தேன்

இந்த குளிர்காலங்களில்  தேனை சேர்த்து கொள்ளுவது நல்லது . இது ஜீரண சக்தியை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

ஒமேகா 3

கொழுப்பு அமிலங்கள் இந்த ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்த ஒன்றாகும். மீன்களில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது குளிர்காலங்களில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவும்

இதில் அதிக அளவில் ஜிங்க் நிறைந்துள்ளதால் உங்கள் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். இந்த வெள்ளை ரத்த அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் தான் நாம் பலவகை நோய்களிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றோம்.

இஞ்சி

அதிக மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.

வேர்க்கடலை

குளிர்காலங்களில் பிராண வாயுவின் அளவு குறைவாக இருக்கும். அதனால், இந்த குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும், இந்த வேர்க்கடலைகளை உணவில் சேர்த்துக் கொள்லலாம். இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுவகைகளில் ஒன்றாகும்.

winter4

குளிர் காலத்தில் நோய்களைத் தடுக்கும் முறைகள்

எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கி விடலாம். ஆனால் மழையையும், குளிரையும் தாங்க முடியாது. குளிர்காலத்தில் தான் உடல் பலவீனமானவர்களுக்கு பாதிப்புகள் வரும்.

தும்மல், அலர்ஜி, ஆஸ்துமா, தோல் பாதிப்பு, ரத்த அழுத்தம், காலில் வெடிப்பு, காய்ச்சல், கை-கால் மூட்டு வலி, முழங்கால் வலி என அனைத்து விதமான உடல் கோளாறுகளும் எட்டிப் பார்க்கும். குறிப்பாக ஆஸ்துமாவுக்கு குளிர்காலம் தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக் குழாய் சுருங்கி மூச்சு விட முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும்.

அவர்கள் கோடை காலத்தைப் போல் நினைத்து வெளியில் சென்று வர முடியாது. டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் எச்சரிக்கையாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் இதய பாதிப்பு உள்ளவர்களையும் குளிர்காலம் சிரமப்படுத்தும். காரணம் குளிர் காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி விடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குளிர்காலத்தில், பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். ரத்தத்தில் முக்கியமாக உள்ள கார்டிசால் சுரப்பது குறையும்.

வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும். இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது. குளிர் காலத்தில், அதிகாலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால் ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும் மாறுபடும். அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவு குறையும்.

அந்த காலகட்டத்தில், வைரஸ் தொற்று நோய் மூலம் இதய பாதிப்புள்ளவர்களுக்கு பிரச்சினை வரலாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக, டாக்கடர் சொல்படி நடப்பதே நல்லது. அறுபது வயதை கடந்தவர்கள் குளிர் காலத்தில்அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை `மூட்டை’ கட்டி வைக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக்கூடாது.

அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக் கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் குளிரை தடுக்க முடியாது. ஆனால், இதய பாதிப்பை தவிர்க்க சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வெயில் வந்தவுடன் செய்யலாம். காய்கறிகள், பழங்கள், அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம். அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும். பெரும்பாலானவர் களுக்கு தூங்கி எழுந்ததும் கை-கால்களில் மூட்டு வலி இருக்கும். அவர்கள் எழுந்ததும் சுடு நீரில் கை, கால்களை வைக்க வேண்டும். படுக்கை அறையின் வெப்ப நிலை சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

குளிரை தாங்கும், போர்வை, கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை உடலில் தேய்க்கலாம். குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால் ஏற்படும் ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பசை இழப்பை ஈடு செய்ய உதவும்.

மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும். வெதுவெதுப்பான சுடுநீரை பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் பெருபாலா னவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை உதடு வெடிப்பு, இதற்கு, பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண் ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.

தோல் வறட்சி உள்ளவர் கள் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம். கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் யூரியா மற்றும் ஆண்டிபயாட்டிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். காலுறைகளை தவறாது இரவு முழுவதும் அணிந்தால் கால்வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும். உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் போன்றவைகளை அதிகமாக சாப்பிடலாம்.

தேவைப்படுவோருக்கு ஏ வைட்டமின் கலந்த மாத்திரைகளும் கொடுக்க வேண்டும். குளிர் சிறுவர்கள், குழந்தைகளையும் பாதிக்கும். அவர்களுக்கு ஐஸ்கிரீம், மற்றும் குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்க கூடாது. குழந்தைகள் தூங்கும் போது கைகள், கால்களில் ஷாக்ஸ் அணிந்து கொள்ளச் செயலாம்.

குளிர் தாங்கும் ஆடைகளையும், படுக்கைகளையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் தும்மல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவதை தடுக்கலாம். குளிர்காலத்தில் நம் உடல் நலனை பாதுகாக்க பொதுவான சில வழிமுறைகள்:- வெளியில் போகும் போது காதுகளை ஸ்கார்ப் அல்லது காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெது வெதுப் பாகவும் உலர்ந்தும் இருக்கும்.

தொற்று ஏற்பட வழியில்லை. சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுவதை தடுக்க பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். குளிர் காலத்தில் வயதான வர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். உங்கள் உடம்பை ஸ்வெட்டர் போட்டு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ளவும். சளியை வெளியேற்றுவதற்காக அடிக்கடி மூக்கை வேகமாக சிந்த வேண்டாம்.

இப்படி செய்வது காதுகளை கடுமையாக பாதிக்கும். சளித்தொற்று காதுகளை தாக்கும். குளிர் காலத்தில் நீச்சல் வேண்டாம். குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். மருத்துவரின் வழிகாட்டு தல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும். சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும்.

குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும். அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் காது, மூக்கு போன்றவற்றில் குளிர்காற்று உட்புகாமல் இருக்க தகுந்த கவசங்கள் அணிந்து கொண்டு செல்லலாம். இவற்றையெல்லாம் கடைப்பிடித்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.

இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.

இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்..

winter5

நீ…நான்…

பின் நமக்கான குளிர் …

நீயும் நனைய நானும் நனைய

நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து

நடுங்கியது குளிர் ..

மழை குளிரை  மட்டும் கொணர்வதில்லை

சில நேரங்களில் காதலையும் …

குளிர் உன் அருகாமையில்

அருமையாகவும்

தூரத்தில் அவஸ்தையாகவும் ..

சிறுமழை , பெருமழை

எதுவும் குளிரை  மட்டும்

கொண்டுவருவதில்லை

உன் நினைவுகளையும் சேர்த்தே ..

நீ மழையாக

நான் துளியாக

மெல்ல பொழியட்டும்

குளிர் சாரல் …

நம் உலகில்

நான்

நீ

பின், நமக்கான குளிர்

– ப்ரியா கங்காதரன்

IMG_20151029_123940

பேலியோ டயட் – உண்மையா? உதாரா?

உணவியல் நிபுணரும் மருத்துவருமான தாரிணி கிருஷ்ணனும் பேலியோ குழுவைச் சேர்ந்த சங்கரும் விவாதிப்பதன் வீடியோ வடிவம்…

(குங்குமம் டாக்டர் அக்டோபர் 1-15, 2015 இதழில் இதன் சுருக்கமான வடிவம் வெளியாகியுள்ளது)

ப்ரியங்களுடன் ப்ரியா – 9

முதுகு வலி… ஏன்? எப்படி? தீர்வுகள்..! 

back pain 2

பறவைகள் எல்லாம்  பறந்து போக 

பாட்டி வைத்த மரத்தில் முதுகு சாய்த்து 

ஓய்வாக மிதக்கும் ஒற்றை மேகத்தை வெறிக்க 

இன்னும் வலிக்குதாம்மா என்ற 

அன்னையின் குரலில் 

வலுக்கட்டாயமாய் என் சிறகுகளைப் 

பிடுங்கி ஆரவாரம் செய்த முதுகுவலி 

புறமுதுகிட்டுச் சிதறுகிறது 

மெல்ல மெல்ல… 

லாரம் வைத்து  பரபர சமையல், ஸ்கூல், ஆபீஸ் வழியனுப்பல்கள் முடிந்து வாகனப் பயணம். அலுவலகத்தில் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்ததில் இருந்து ஷட்-டவுன் பண்ணும் வரை  சேரில் சுழன்றபடி வேலை. ‘சும்மா இருக்கேன்’ என்ற வார்த்தையை இப்போது மைக்ரோ ஒலி வாங்கி வைத்துக் கேட்டாலும் கிடைக்காது. எல்லோரும் எப்பொழுதும் பிஸி. உடல் என்ற மெஷினில் எங்காவது வலிக்கும் வரை அப்படி ஒரு மெஷினைப் பயன்படுத்துகிறோம் என்ற உணர்வுகூட மிஸ்ஸிங். வீட்டுப் பொறுப்புகள் முடித்து அக்கடா என்று ரிமோட்டைத் தட்டி வீட்டு சோபாவில் அமரும் இரவு 11 மணிக்கு முதுகு வலி பின்னியெடுக்க, சரியாக தூக்கம் பிடிக்காமல் விடிகிறது அடுத்த காலை. நம்மைப் போன்ற பெண்களுக்கும்  முதுகு வலிக்கும் அவ்வளவு நெருக்கம்!

ஏன் வருகிறது முதுகு வலி ?

நம் உடல் இயக்கத்தில் எலும்பு, நரம்பு, ஜவ்வு ஆகிய மூன்றுக்கும் முக்கியப் பங்கு உண்டு. இந்த சிஸ்டத்தில் பிரச்னை வருவதுதான் உடல் நோயாகிறது. ஜவ்வு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் பேக் பெயினை உருவாக்கும். அளவுக்கு அதிகமான எடையைக் குனிந்து தம் கட்டித் தூக்குவதால் வரலாம். தொப்பை பெரிதாகிக் கொண்டே போகும் போது அதை தாங்கிக் கொண்டிருக்கும் முதுகு எலும்பு வளைகிறது. இதனாலும் பேக் பெயின் வரும். 30 வயதைத் தாண்டிய பலரும் பேக் பெயின் பேஷன்ட்தான். கூன் போட்டு உட்கார்ந்தபடி பலமணி நேரம் இருப்பதும் இப்பிரச்னையை உருவாக்கும். பின்புறம் குறைந்த அளவு சாய்வு மற்றும் சாய்வே இல்லாத சேர்களை பயன்படுத்துவதும் பேக் பெயினை உருவாக்கும்.

முதுகு வலியின் முதல் அறிகுறிக்கு அதிக பரிசோதனை தேவைப்படாது. ஆறு மாதங்களுக்கு வலி தொடர்ந்தாலோ, கால் தசைகள் வலுவிழந்தாலோ, செயலற்றுப் போகும் போதோ, சிறுநீர், மலம் வெளியேறுவதில் கட்டுப்பாடு குறைந்தாலோ, சிறுநீருடன் ரத்தம் சேர்ந்து வெளியேறினாலோ, தலைவலியுடன் வாந்தியும், வந்தாலோ அவசியம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தொடக்க நிலையில் எக்ஸ்ரே பரிசோதனை எடுக்கப்படும். என்ன பிரச்னை உள்ளதென்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறியலாம். சில நேரங்களில் ரத்தப் பரிசோதனையும் செய்ய வேண்டி வரும். பெரும்பாலான முதுகுவலிகள், சில நாட்களிலேயே மறைந்து விடும். எனவே, வலி ஏற்பட்ட உடனேயே மருத்துவரிடம் செல்வதை விட, சில நாட்கள் பொறுத்திருந்து வலி நீடித்தால் மருத்துவரிடம் காண்பிக்கலாம்.

back pain 3

முதுகு வலிக்கும் நமக்கும்  அப்படி என்ன நெருங்கிய உறவு?

பொதுவாக முதுகு வலி  பெண்களுக்குத்தான்  அதிகம் வருகிறது. பூப்பு எய்திய பின்னர் பீரியட்ஸ் டைமில் எலும்புகளில் வலி பின்னியெடுக்கும். எலும்புகளின் வளர்ச்சிக்காக அந்தக் காலத்தில் உளுந்துக் கஞ்சி, உளுந்தங்களி உணவில் சேர்க்கப்பட்டது. ஆனால், இப்போது இருக்கிற டீன்ஏஜ்கள் உளுந்துக் கஞ்சி என்றால் ‘உவ்வே’ சொல்கிறார்கள்.  இதையெல்லாம் சேர்க்காவிட்டால் இளம் வயதிலேயே பேக் பெயின் இலவசமாகக் கிடைக்கும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. குழந்தைப் பேற்றின் போது இடுப்பு எலும்புகள் விலகிக் கொடுத்து,  பின்னர் பழைய நிலைமைக்குத் திரும்பும். அந்த சமயத்திலும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்க உளுந்து சார்ந்த உணவுகள் அவசியம். 35 வயதுக்கு மேல் எலும்பு தேய்மானம் ஆரம்பமாகும். அப்போது கால்சியம் மற்றும் புரதச்சத்துள்ள உணவுகள் மூலமாக எலும்புக்கு வலு சேர்க்கலாம். நாற்பது வயதுக்கு மேல் உணவில் கேழ்வரகு, பாசிப் பருப்பு, வெந்தயக்கீரை, சோயா பீன்ஸ் ஆகியவற்றை கட்டாயம் சேர்க்க வேண்டும்.

காரணங்கள் 

முதுகெலும்புக் கோளாறுகள் இடுப்புப் பிடிப்பைத் தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும். இதனால் ஸியாடிகா (Sciatica) ஏற்படும். இதர முதுகெலும்புக் கோளாறுகளும் இதற்கு முக்கியக் காரணங்கள். அதிக எடை தூக்கி நடப்பது, ஓடுவது, மாடிப் படிகள் ஏறுவது ஆகியவை வலியை அதிகமாக்கும்.

ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்புப் பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம். சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும். ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவற்றையும் காரணங்களாகச் சொல்லலாம்.

எலும்புக்கு பிடித்த டயட்

கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் எலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். சில குழந்தைகள் பால் குடிப்பதைத் தவிர்க்கும். பால் பிடிக்காத குழந்தைகளுக்கு மில்க் ஷேக் மற்றும் ஐஸ்க்ரீமாக கொடுக்கலாம். பால் மற்றும் பால் பொருட்கள் சார்ந்த உணவுகளை குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும்… நாமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் எலும்பு உறுதிக்கும் வளர்ச்சிக்கும் கால்சியம் சத்துடன் வைட்டமின் டி சேர்க்கவும். உணவில் கிடைக்கும் கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் கிடைக்கிறது. குட்டிக் குட்டி மீன் முட்களில் கால்சியம் இருக்கிறது. அதை அப்படியே மென்று சாப்பிடும் போது உடலுக்கு கால்சியம் கிடைக்கும். வெஜிடபிள் ஆயிலில் வைட்டமின் டி உள்ளது. சோயா பீன்ஸ் ஆயிலையும் பயன்படுத்தலாம்.

milkfish

தீர்வு என்ன?

உங்கள் வேலை நேரம், வேலையின் தன்மை ஆகியவற்றைக் கண்காணித்து பேக் பெயின் வருவதற்கான தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளவும். கொஞ்ச நேரம் நடப்பது, சிறிய ஓய்வு என வழக்கத்தை மாற்றிக் கொள்ளவும். உங்கள் டயட் சார்ட்டை செக் பண்ணவும்.  எலும்புகள் வலுப்படுவதற்கான உணவுகளைச் சேர்க்கவும். வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டில் உள்ள அத்தனை பொறுப்புகளையும் தங்களது தோள்களில் சுமப்பதற்கு பதிலாக கணவர், குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் ஓய்வு கிடைப்பதுடன் பேக் பெயின் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். தொப்பை விழாத அளவுக்கு வெயிட்டை மெயின்டெய்ன் செய்வது ரொம்ப முக்கியம்.

சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை வீட்டில் செய்யலாம்.

உதாரணம்: நன்றாக நிமிர்ந்து படுக்கவும். படுத்த நிலையில் முட்டியை மடக்காமல் உடலை மேலே தூக்கவும். படுத்த நிலையில் நிலத்தில் இரண்டு கால்களையும் மடக்கி இடுப்பை மட்டும் மேலே தூக்கவும். இதே போல் குப்புறப் படுத்த நிலையில் தலையை மேலே தூக்குவது, இடுப்பையும் வயிற்றையும் மேலே தூக்குவது ஆகிய பயிற்சிகள் ஒவ்வொன்றையும் ஐந்து முறை செய்வதன் மூலம் பேக் பெயினால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

heels

முடிந்த வரை ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். பேக் பெயின் உள்ளவர்கள் குப்புறப் படுத்து உறங்குவதைத் தவிர்க்கலாம். மல்லாந்துபடுப்பதை விட ஒருக்களித்துப்படுப்பதே நல்லது. உடல் என்னும் இயந்திரம் ஒழுங்காக வேலை செய்தால்தான் சந்தோஷச் சிகரங்களில் சறுக்கி விளையாட முடியும். உடலை கவனித்தால் உற்சாகமாக வலம் வரலாம்.

வீட்டு வைத்தியம்

  • விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.
  • 5 பூண்டு பற்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணெயில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.
  • புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.
  • சூடான நல்லெண்ணை + உப்பு சேர்த்து மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாகச் செய்யவும்.
  • விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணை 1 டீஸ்பூன் + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 டீஸ்பூன் – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.
  • ‘வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 டீஸ்பூன் வீதம் எடுத்துக் கொள்ளவும்.

ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தீர்வுகள்…

  • முதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்புப் பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.
  • இடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.
  • முன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.
  • மருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.
  • ஒரு நாள் எண்ணெயை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சைதான் கடிவஸ்தி.
  • உணவு கட்டுப்பாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த-வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இதர வழிகள் 

  • முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.
  • குப்புற படுக்கக் கூடாது.
  • நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்துக்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.
  • நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இருக்காமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள். உங்கள் பணியின் காரணமாக நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுகளையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.
  • இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.
  • ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.
  • ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயற்சி செய்யுங்கள்.
  • படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஓரத்துக்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.
  • நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

walking

  • பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.
  • தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.
  • தரையிலுள்ள பொருட்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பிறகு தூக்குங்கள்.
  • கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். தவறினால் அது முதுகு வலியில் போய் முடியலாம்.
  • உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.
  • பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
  • முதுகு வலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்றுதான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வரக் காரணம் மலச்சிக்கல். இதைத் தவிர்க்கவும்.

உணவு முறை

குளிர் உணவு / பானங்களைத் தவிர்க்கவும். ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை தவிர்க்கவும். பழைய உணவுகளை தவிர்க்கவும். கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் ஆகியவற்றைத் தவிர்க்கவும். எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும். இரண்டு டீஸ்பூன் சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலைப் பருகவும். இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியைக் குறைக்கும். இஞ்சியும் மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்…

உணவு முறைகளிலே முதுகு வலியை நாம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

வைஷு என்னிடம் ‘‘ஏம்மா உன் பாட்டிக்கு 80 வயசு வரை முதுகு வலி இல்லை. என் பாட்டிக்கு 55 வயசு வரை முதுகு வலி இல்லை. உனக்கு இப்போவே வந்திரிச்சு. எனக்கும் சீக்கிரம் வந்துடுமா?’’ என்று கேட்டாள். அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் யோசித்தால் புரியும்… என் பாட்டி, அம்மா காலத்து உணவு முறைகள் இப்போது இருக்கின்றனவா? இல்லை. அதுதான் காரணம். சரியான உணவு முறைகளை நாமும் பின்பற்றி நம் செல்லங்களுக்கும் கற்றுக் கொடுத்து முதுகு வலியைப் புறமுதுகிடச் செய்வோம்!

பறவைகள் எல்லாம்  பறந்து போக 

பாட்டி வைத்த மரத்தில் முதுகு சாய்த்து 

ஓய்வாக மிதக்கும்  ஒற்றை மேகத்தை வெறிக்க 

இன்னும் வலிக்குதாம்மா என்ற 

அன்னையின் குரலில் 

வலுக்கட்டாயமாய் என் சிறகுகளைப் 

பிடுங்கி ஆரவாரம் செய்த முதுகுவலி 

புறமுதுகிட்டு சிதறுகிறது 

மெல்ல மெல்ல…

– ப்ரியா கங்காதரன் 

p2

***

ப்ரியாவின்பிறபதிவுகள்

ப்ரியங்களுடன்ப்ரியா – 1

ப்ரியங்களுடன்ப்ரியா – 2

ப்ரியங்களுடன்ப்ரியா – 3

ப்ரியங்களுடன்ப்ரியா – 4

ப்ரியங்களுடன்ப்ரியா – 5

ப்ரியங்களுடன்ப்ரியா – 6

ப்ரியங்களுடன் ப்ரியா – 7

ப்ரியங்களுடன் ப்ரியா – 8

Image courtesy:

http://medflicks.com

http://cdn.womensunitedonline.com

http://www.mineravita.com

http://www.captureimagery.co.uk

http://grigoletti.blogspot.in/

http://www.barkhamofficefurniture.co.uk

http://www.active.com

உலக தாய்ப்பால் வாரம் – ஆகஸ்ட் 1-7

breastfeed-benefits

தாய்ப்பாலின் மகத்துவம், அதைக் குழந்தைக்குப் புகட்டும் விதம், பயன்கள் எல்லாவற்றையும் குறித்து செட்டிநாடைச் சேர்ந்த டாக்டர். ஏ.முத்துசாமியும், ரோட்டேரியன் இந்திரலேகா முத்துசாமியும் இணைந்து BPNI அமைப்பின் சார்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கை இது…

டந்த 1992ம் ஆண்டு முதல் நாங்கள் தீவிரமாக தாய்ப்பால் ஊக்குவிப்பில் பணியாற்றி வருகிறோம். அரசும் 6 மாதங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளித்துள்ளது. பல சட்டதிட்டங்களையும் இயற்றியுள்ளது. ஆனாலும் 40.5% தாய்மார்கள்தான் குழந்தை பிறந்த முதல் 60 நிமிடங்களுக்குள் தாய்ப்பால் தருகிறார்கள். 46.8% தாய்மார்கள்தான் ஆறு மாதம் முடிய தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள்.

இந்தப் பின்னடைவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமானவை…

  1. மருத்துவத்துறை அலுவலர்கள் தாய்ப்பால் ஊட்டுவதற்கு போதிய ஆதரவு தராததும், அக்கறை எடுக்காததும்.
  2. குழந்தை உணவு/பால்பாட்டில் தயாரிப்போரின் அதி தீவிர வியாபார/விளம்பர உத்திகள். மருத்துவமனையிலிருந்து வெளிவரும் தாய் தன் குழந்தையுடன் பால்பவுடர் டின் மற்றும் பால்புட்டியுடன் வரும்போது மருத்துவத்துறை சாராத நம்மால் எப்படி அந்தத் தாயை தாய்ப்பாலூட்ட ஊக்குவிக்க முடியும்? ‘தாயின் மார்பை வற்றவைக்க ஒரு புட்டி, ஒரு நாள் போதும்’ என்கிறது மருத்துவ ஆய்வு.

ஆகவே, உங்கள் முழு அழுத்தமும் கவனமும் மருத்துவ சேவை தரும் இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். முளையிலேயே கிள்ளாமல் விருட்சமான பின் வெட்டுவதும், தும்பை விட்டு வாலைப் பிடிப்பதும் சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. சிசுவின் தூய்மையான உணவுக்குழாயை (Virgin Intestine) முதல் உணவாக விலங்கின் பாலைக் கொடுத்து பாழ்படுத்திய பின்பு நாம் செய்யும் எந்தப் பணியும் பூரண பலனைத் தராது.

breast-feeding_0

தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை

அதைத் தருவது தாயின் கடமை, அதற்கு

உதவுவது மருத்துவமனையின்/சமுதாயத்தின் கடமை.

இதில் மாற்றுக்கருத்து எங்கிருந்து வருகிறது?

பலர் இது நடைமுறை சாத்தியமற்றது என்பார்கள். அப்படியானால் இதை, பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருபவர்களும் நடைமுறைபடுத்தச் சொல்லும் அரசும், BPNI, WHO, UNICEF, IAP போன்ற அமைப்புகளும் பொய் சொல்கிறார்களா?

நீங்கள் செய்ய வேண்டியது சில செயல்பாடுகளே…

  1. மகப்பேறு/சிசு/சிறு குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று அங்கே, ‘சிசு மற்றும் சிறு குழந்தைகளின் உணவு பற்றிய தேசிய வழிகாட்டுதல்களை’ நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யுங்கள். அங்கு எழுதப்பட்ட வழிகாட்டுதலை யாவரும் படிக்கும் இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
  2. எங்கெல்லாம் புகைப்பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் ‘பால்புட்டிகள், டின் உணவு வகைகள் தடைசெய்யப்பட்டுள்ளன’ என்ற அடையாளச் சின்னங்களை, வாசகங்களை ஒட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
  3. உங்கள் நகரை ‘பால்பாட்டில் இல்லா நகரமாக்க’ ஏற்பாடு செய்யுங்கள். பால்பாட்டில்களின் தீமையை விளக்கி அதை உபயோகிப்போரிடமிருந்து ஒரு சிறு தொகை/அன்பளிப்பு கொடுத்து வாங்கி பின் ஒரு விழா நடத்தி அவற்றை அழியுங்கள்.
  4. சினிமா/தொலைக்காட்சிகளில் பால்புட்டிகளைக் காண்பிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது. அது பற்றி அவர்களுக்கு தெரிவியுங்கள்.
  5. விளம்பரம்.

பரிசுகள்: இவற்றை நடைமுறைப்படுத்த ஆகஸ்ட் 1 முதல் நான்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பின் உங்கள் அறிக்கையை மின் அஞ்சல் மூலம் 1.12.2015க்குள் எனக்கும், மாவட்ட தலைவருக்கும், பி.பி.என்.ஐக்கும் அனுப்புங்கள். சிறந்த முதல் மூன்று சங்கங்களுக்கு பரிசுகளும், பங்குபெறும் சங்கங்களுக்கு சான்றிதழ்களும் மாவட்ட மாநாட்டில் வழங்கப்படும்.

நல்வாழ்த்துகள்.

என்றும் சமூக சேவையில்,

பி.கு.: தயவு செய்து குழந்தை உணவு/பால்புட்டி நிறுவனங்களிடமிருந்து எந்த உதவியும் பெறாதீர்கள். அப்படிப் பெற்றிருந்தால் உங்கள் அறிக்கை செல்லத்தக்கதாகாது.

Dr. அ. முத்துசாமி                Rtn. இந்திரலேகா முத்துசாமி

BPNI ஒருங்கிணைப்பாளர்         R.C. of கும்பகோணம் சக்தி

*** 

breast feeding 1

சிசு மற்றும் சிறு குழந்தைகளின் உணவு பற்றிய தேசிய வழிகாட்டுதல் – 2010.

இந்த மருத்துவமனையில் தாய்ப்பாலே சிறந்த குழந்தை உணவு என்று உணர்ந்து, குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுக்கும் சுகாதாரமான பழக்கத்தை ஆரம்பித்து, பின் கீழ்க்கண்ட பத்து சிசுநேயக் கொள்கைகளைக் கடைபிடிப்பதன் மூலம் தாய்ப்பால் கொடுப்பதைக் காப்பாற்ற, ஊக்குவிக்க மற்றும் உதவ துணைபுரிகிறோம்.

  1. இந்த மருத்துவமனைக்கு எழுத்துப்பூர்வமான தாய்ப்பால் கொள்கைகள் உள்ளன. இவை, இங்குள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
  2. இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அனைத்துப் பணியாளர்களும் சிறப்பு பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
  3. கருவுற்றிருக்கும் எல்லாத் தாய்மார்களுக்கும் தாய்ப்பாலூட்டும் நன்மைகளையும், எப்படி தாய்ப்பால் ஊட்டுவது என்றும் விவரமாகத் தெரிவிக்கிறோம்.
  4. சுகப்பிரவத்தில் பிறந்த குழந்தைக்கு அரை மணிக்குள்ளும், சிக்கலான பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு ஒரு மணிக்குள்ளும் தாய்ப்பால் கொடுக்கிறோம்.
  5. தவிர்க்க முடியாத காரணங்களால் தாயும் சேயும் பிரிய நேரிட்டால், எப்படி தாய்ப்பால் கொடுப்பது, பின் எப்படி தொடர்ந்து தருவது என்று காண்பித்துத் தருகிறோம்.
  6. மருத்துவக் காரணங்களைத் தவிர, வேறு எந்த காரணத்துக்காகவும் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவோ, தண்ணீரோ கொடுப்பதில்லை.
  7. தாயும் சேயும் ஒரே அறையில் 24 மணி நேரமும் ஒன்றாக இருக்க வாய்ப்பும் வசதியும் செய்து தருகிறோம்.
  8. குழந்தை அழும்போதெல்லாம் தாய்ப்பால் தர ஊக்குவிக்கிறோம்.
  9. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாட்டில், ரப்பர், நிப்பிள், சூப்பான் போன்றவை கொடுப்பதில்லை.
  10. தாய்ப்பால் ஊக்குவிப்போர் குழுக்களை அமைத்து தாய்மார்கள் மருத்துவமனையிலிருந்து வெளிவரும்போது அக்குழுக்களின் ஆலோசனையைப் பெற ஊக்குவிக்கிறோம்.

தயவுசெய்து இந்த வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த உதவுங்கள். 6 மாதங்கள் முடிய தாய்ப்பால் மட்டுமே போதும். பின் இரண்டு வயது முடியும் வரையோ அல்லது அதற்குப் பிறகுமோ வீட்டு இணை உணவுடன் தாய்ப்பால் தரவேண்டும்.

பணிக்குச் செல்லும் தாய்மார்கள் தொடர்ந்து தாய்ப்பால் தரும் முறை

இது மிகவும் சுலபமானது. பணிக்குச் செல்ல மூன்று வாரங்கள் இருக்கும்போதே திட்டமிட வேண்டும். முதல் வாரத்தில் தானே எப்படி தாய்ப்பாலை பீச்சி எடுப்பது, பாதுகாப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள். கையால் பீச்சி 250 மி.லி. பாலை ஒரு தடவை சுலபமாக எடுக்கலாம். ஒரு மார்பில் குடிக்கும்பொழுது மறு மார்பில் பீச்சி எடுப்பது சுலபமானது. பீச்சியபால் அறை வெப்பத்தில் 8 மணி நேரமும், குளிர்சாதனப்பெட்டியில் 24 மணி நேரமும் கெடாமல் இருக்கும்.

இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் கீழே கண்ட அட்டவணைப்படி, பீச்சிய பாலை கப் அல்லது ஸ்பூன் மூலம் புகட்ட வேண்டும். இத்திட்டத்தை உங்கள் வேலை நேரத்துக்கேற்பவும், குழந்தையின் தேவைக்கேற்பவும் மாற்றிக் கொள்ளலாம். பணியிடத்தில் 4 மணிக்கு ஒரு முறை பாலை பீச்சி எடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து புகட்டலாம்.

பணிக்குச் செல்லும் முன் அன்றைய தேவைக்கான பாலை தனித்தனி கப்களில் எடுத்து, நேரத்தை குறித்து வைத்துச் செல்ல வேண்டும்.

(சித்திரம் மட்டுமல்ல, பால் எடுப்பதும் கைப்பழக்கம்தான்).

பால் புகட்டும் நேரம் நாள் 1-3 நாள் 4-6 நாள் 7-9 நாள் 10-12
7:30-9:30

காலை

பீச்சி எடுத்த தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால்
10:30-12:30
காலை
தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால்
1:30-3:30

மதியம்

தாய்ப்பால் தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால்
4:30-6:30

மாலை

தாய்ப்பால் தாய்ப்பால் தாய்ப்பால் பீச்சி எடுத்த தாய்ப்பால்

‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே… அவர் நல்லவராவதும், நலங்கெட்டு வாழ்வதும் தாய்ப்பால் கொடுப்பதிலே.’

மேலும் தொடர்புக்கு: Dr.A. முத்துசாமி

99, ரயில்நிலையம் சாலை, செட்டிநாடு – 630 102.

Email: a_muthuswami@yahoo.com.

தாய்ப்பால் அளிப்பது தொடர்பான தகவல்களுக்கு… www.bpni.org இணையதளத்தைப் பார்க்கவும்.

Image courtesy:

http://www.empowher.com

http://topnews.ae

http://www.nancymohrbacher.com

ப்ரியங்களுடன் ப்ரியா – 5

நினைவோ ஒரு பறவை…

விழியும் மொழியும் அறியா வண்ணம்

லகுவாய் இதயம்  நுழைந்து

எந்த நொடியில்  என்னை மறந்தேன் ?

எந்த வினாடியில் நீ என்னுள் நுழைந்தாய் ?

வீசும் சாரலில்  நடுக்கத்துடன் உன் தோளில் சாய

நாளையை மறந்து இந்த வினாடிகள் நம் சொந்தமாயின … 

Scanning of a human brain by X-rays

யிர்களின் படைப்பிலே அற்புதப் படைப்பாக அமைந்தது மானுடப் பிறவி. வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத பகுத்தறியும் திறன், மனித இனத்துக்கு மட்டுமேயான ஒரு சிறப்பு! அதிலும், எண்ணிலடங்கா நிகழ்வுகளையும், அனுபவங்களையும் பதிவாக்கி வைத்து, தேவையான வேளைகளில் பயன்படுத்தும் நினைவாற்றலைக் கொண்ட மனிதனின் மூளை பிரமிப்புக்குரியதே! மறதி ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியதுதான்.

மறதிநோய் (Dementia – என்பது ‘சிதைவடையும் மனம்’ என்ற பொருள் கொண்டதாகும்) ஒரு தீவிரமான உளவியல் குறைபாடாகும். இது நிலைத்ததாகவோ, அதாவது மூளையில் ஏற்படும் காயத்தினால் உருவாவதாகவோ அல்லது வளரக்கூடியதாகவோ இருக்கலாம். அல்லது, உளவியல் செயல்பாடுகளில் நீண்டகாலமாக ஏற்பட்ட பாதிப்பு அல்லது குறைபாட்டால் உடலானது இயல்பான முதுமையடைதலில் இருந்து அதிகரித்த அளவில் முதிர்வது ஆகியவற்றால் விளையலாம்.

ஒ‌ன்று, ப‌த்து, நூறு எ‌ன்ற வ‌ரிசை‌யி‌ல், ஒ‌ன்று என்ற எ‌ண்‌ணுக்கு‌ப் ‌பிறகு 18 பூ‌ஜ்ய‌ங்க‌ள் வ‌ந்தா‌ல் அத‌ற்கு ‘கு‌‌யின்டி‌லிய‌ன்’ எ‌ன்று பெய‌ர். அதுபோ‌ல் இர‌ண்டு கு‌யி‌ண்டி‌லியன் அள‌வுக்கான செய்திகளை நமது மூளை‌யி‌ல் ப‌திவு செ‌ய்து வை‌க்க முடியு‌ம் எ‌ன்பதுதா‌ன் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளி‌ன் கண்டு‌பிடி‌ப்பாகு‌ம்.

‘நினைவாற்றல்’ அல்லது ‘ஞாபக சக்தி’ எனப்படுவது தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும்போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் அறிவாற்றல் மிக்கவனாக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும்.

மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒருநிலைப்படுத்தலுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மனதை எந்தளவுக்கு ஒருமுகப்படுத்தி ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது மனதிலே பதிகின்றது. வேறு விதமாக கூறுவதாயின் நாம் ஒன்றுக்கு மேலான வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும்போது. கவனம் சிதறடிக்கப்பெற்று, அவை மனதிலே சிதறல்களாக பதிவாகின்றன. அதனால் நாம் அவற்றை தேவைப்படும் போது உடனடியாக நினைவுக்குக் கொண்டுவர  முடிவதில்லை.

brain cells

நினைவாற்றலின் வகைகள்

  1. குறுகிய கால நினைவாற்றல்

நமது மூளையில் அத்தனை தகவல்களும் தொடர்ந்து சேமித்து வைக்கப்படுவதில்லை. அவசியமான காலத்துக்கு மட்டுமே அந்தத் தகவல்கள் மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்தத் தகவல்கள் மறக்கப்பட்டுவிடுகின்றன. இது ‘குறுகிய கால நினைவாற்றல்’ எனப்படும்.

  1. நீண்ட கால நினைவாற்றல்

மனதை மிகவும் கவர்ந்தவை, அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவை, நாம் செய்யும் தொழிலுக்கு தேவையானவை மூளையில் நீண்ட கால நினைவுகளாகப் பதிந்து விடுகின்றன.

மூளை பல செய்திகளையும் தகவல்களையும் சேமித்து வைத்துள்ளது. அவற்றுடன் புதிய தகவல்களையும் சேர்த்துப் பாதுகாக்கிறது. பல ஆண்டுகளாக அந்தத் தகவல்கள் வெளிக் கொணரப்படாமல் போனால் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன.

நீண்ட கால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலவேளை சிரமப்படுவது அதனாலேயாகும். நீண்ட காலத்தின் பின்னர் நாம் சந்திக்கும் நபரின் அல்லது சிறுவயது நண்பரின் பெயர் ஞாபகத்துக்கு வராமல் இருப்பதை (ஆனால் அவரின் பெயர் நுனி நாக்கில் இருப்பது) இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

ஆரம்பநிலை அறிகுறிகள்

  1. மொழித் திறனில் தடுமாற்றம்
  1. ஞாபகக் குறைவு, குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள்
  1. நேரம், காலத்தைப் பாகுபடுத்த இயலாமை
  1. எப்போதும் செல்லும் பாதையை மறப்பது
  1. முடிவு எடுப்பதில் சிரமம்
  1. ஒரு செயலைச் செய்ய ஆர்வம் இல்லாமை
  1. சோகம், கோப உணர்ச்சிகளை அதிகப்படியாக வெளிப்படுத்துதல்
  1. பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல்.

இடைநிலை அறிகுறிகள்

நோய் தீவிரமடையும்போது பிரச்னைகளும் அதிகமாகும். அதனால் தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமப்படுவார்கள்.

  1. மறதி அதிகமாகும். குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள், உறவினர்களின் பெயர்கள்
  1. துணையில்லாமல் தனித்து வாழக் கஷ்டப்படுவார்கள்
  1. தன்னையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்
  1. கடைத் தெருவுக்குச் சென்று திரும்ப இயலாது
  1. குளிக்க, கழிவறைக்குச் செல்ல என எல்லாவற்றுக்கும் குடும்பத்தினரைச் சார்ந்திருப்பார்கள்
  1. தான் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருப்பார்கள்.

இறுதிநிலை அறிகுறிகள்

இந்த நிலையில், நோயாளி முற்றிலுமாகக் குடும்பத்தினரைச் சார்ந்தும், உடல் பாகங்களை இயக்க இயலாத நிலையிலும் இருப்பார். மறதி மிக அதிகமாகவும் உடல்நலக் குறைவும் காணப்படும்.

  1. தானாக உணவு உட்கொள்வதில் சிரமம்
  1. உறவினர், நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம். தன் குழந்தைகளையேகூட மறக்க நேரிடலாம்
  1. குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்
  1. தானாக நடக்க இயலாது
  1. தெரிந்த பொருள்களை அடையாளம் சொல்ல முடியாது
  1. புரிந்துகொண்டு செயல்பட முடியாது
  1. சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இருக்காது
  1. தான் யார் என்பதே மறந்துவிடும்.

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு தேவையான மனோநிலை 

Brain-Science-Leadership

01.தன்னம்பிக்கை

நினைவாற்றல் தொடர்பில் நமக்கு தன்னம்பிக்கை அவசியமாகும். நினைவாற்றல் என்பது மூளையின் திறமையாகும். இதனை பயிற்சியாலும் முயற்சியாலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை அவசியமாகும்.

02.ஆர்வம்

ஒரு விஷயம் தொடர்பான ஆர்வமும் அவ்விஷயம்  தொடர்பில் ஞாபக சக்தி ஏற்படக் காரணமாக அமையும்.

03.செயல் ஊக்கம்

தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விஷயங்கள் நன்றாக பதியும்.

04.விழிப்புணர்வு

மனம் விழிப்பு நிலையில் இருந்தால் நமது கவனமும் ஒருமைப்பாடும் மிகச் சிறந்ததாக இருக்கும். இதற்கு யோகாசனம்,தியானம், சமய வழிபாடுகள் துணை புரியும்.

05.புரிந்து கொள்ளல்

புரிந்து கொண்ட விசயங்கள்  மனதில் பதியும்.

  1. உடல் ஆரோக்கியம்

நினைவாற்றலை அதிகரிக்க செய்ய வேண்டியவை

  1. மனதை ஒரு நிலைப்படுத்துதல்

யோகாசனம், தியானம், சமய வழிபாடுகளில் ஈடுபடல் போன்றவை மூலமாக ஆரோக்கியமான மூளைகளில் தகவல்களை குடியேற்றம் செய்வதன் மூலம் சிறந்த நினைவாற்றலைப் பெற முடியும்.

dhyanam

  1. உடற்பயிற்சி
  1. மூளைக்கு பயிற்சி வழங்குதல்

குறுக்கெழுத்துல் போட்டி, எண்புதிர், அயல் மொழிகளை கற்றல் போன்றன சில உதாரணங்களாகும்.

  1. போஷாக்கான உணவு (குறிப்பாக காய்கறிகள், பழவகைகள்)
  1. போதியளவு உறக்கமும் ஓய்வும்
  1. முதிய வயதிலும் ஏதாவது பணிகளை செய்தல்

வயதாக ஆக நினைவாற்றல் குறைவடையும். பணியில் ஈடுபட்டிருப்பவர் ஓய்வு பெற்ற பின் விரைவில் நோய்களுக்கு ஆளாவது இயற்கை. தொடர்ந்து ஏதாவதொரு பணியில் ஈடுபட்டிருந்தால் மூளைக்கு வேலை கிடைக்கும். நினைவாற்றலோடு ஆரோக்கியமும் மேன்மை அடையும்.

  1. உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்துதல் வேண்டும்.
  1. மருத்துவ ரீதியில் துளசி இலையை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடிப்பது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
  1. அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வருதல் வேண்டும்.

10.தூதுவளை கீரையை குழம்பு மற்றும் பொரியல் செய்து வாரத்துக்கு ஒரு தடவை சாப்பிட்டு வந்தால் மூளைக்கு வலிமை கிடைக்கும்.

  1. பசுமையான வில்வ இலையை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் ஞாபக மறதி நீங்கி நினைவாற்றல் அதிகரிக்கும்.

சாதாரணமாக விஞ்ஞானிகள் புலன் ஞாபக சக்தியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.

  1. நினைவுகள் ஒரு சில கணங்களுக்கு நிற்கும்.
  2. புலன் ஞாபகம் (Sensory Memory). ஏறத்தாழ அரை மணித்தியாலம் மட்டுமே நிற்கும் குறுகிய கால ஞாபகம் (Short Term Memory).
  3. நீண்ட காலமாக நிற்கும் நீண்ட கால ஞாபகம் (Long Term Memory) என மூன்றாகப் பிரிக்கிறார்கள்.

உண்மையில் இந்த மூன்று ஞாபகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மனித உடலில் சகல புலன்களில் இருந்தும் வருகின்ற நரம்பு கணத்தாக்கங்கள்  மில்லி செக்கண்டில் நினைவில் நிற்கும். அந்த நினைவில் சிறிது ஊன்றிக் கவனம் செலுத்தும் போது அவை ஏறத்தாழ 30 செக்கண்ட்ஸ் வரை நிலைத்து நிற்கும். இந்த நேரத்துக்குள் மீண்டும் ஒருமுறை அது பற்றி நினைத்தால் அது நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும் ஞாபகத்துக்குள் சென்று பதியும்.

Angle shot of book shelf with big collection

ஓரு நூலகத்தில் பலவிதமான புத்தகங்கள் உள்ளன. ஆனால், அந்தப்புத்தகங்கள் ஒழுங்கான முறையில் அடுக்கி வைக்கப்படவில்லை. இதனால் நமக்குத் வேண்டிய புத்தகத்தை உடனே கண்டுபிடிக்க இயலாது. தேவையான புத்தகத்தை எளிதான முறையில்கண்டறிவதற்கு ‘புத்தகப்பட்டியல் அடங்கிய குறிப்பேடும் (Catalogue) அவசியம் தேவை.’

இந்த நூலகம் போலவே நமது மூளையும் ஒரு ‘ஒழுங்கில்லாத நூலகம்’ (Dis-Organised) ஆகும். தேவையான புத்தகங்களை எளிதில் கண்டுபிடிக்க உதவும் குறிப்பேடு போல, மூளையில் குவிந்து கிடக்கும் தகவல்களையும் எளிதில் நினைவில் கொள்ள நமது மூளைக்கு நன்கு பயிற்சி கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட செய்திகளை, குறிப்பிட்ட நேரத்தில் நினைவில் கொண்டுவரும் ‘நினைவாற்றல் கலையை’ வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நினைவாற்றலை வளர்த்துக் கொள்வதற்கு பலவழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘தொடர்பு ஏற்படுத்துதல் முறை’ (ASSOCIATION) ஆகும். பொதுவாக நமது மூளையில் சேமித்து வைத்திருக்கின்ற தகவல்களை புதிதான தகவல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கின்றபோதுதான் நாம் கற்ற பாடம் நினைவில் நிற்கிறது. அறிவைப் பெருக்குவதற்கு  ‘தொடர்புப்படுத்துதல்’ மிகவும் உறுதுணையாக அமையும்.

மறதியும் நல்லதே!  வஞ்சம், பொறாமை, கடுஞ் சொல் பேசுதல், துரோகம், பொய் இவற்றை அருகில் நெருங்க விடாமல் மறப்பதும் நல்லதே.

மறதியின் உண்மை பொய்

அறியும் உரைகல் இல்லாததால் –

மறதி மனிதக் காட்டில் மழைதான்.

சில நேரங்களில் பல துரோகங்களை மன்னிக்க வைப்பதும் மறதிதான்.

தீயவற்றை மறப்போம். நல்லதையே நினைப்போம்.

விழியும் மொழியும் அறியா வண்ணம்

லகுவாய் இதயம்  நுழைந்து

எந்த நொடியில்  என்னை மறந்தேன் ?

எந்த வினாடியில் நீ என்னுள் நுழைந்தாய் ?

வீசும் சாரலில்  நடுக்கத்துடன் உன் தோளில் சாய

நாளையை மறந்து இந்த வினாடிகள் நம் சொந்தமாயின. 

– ப்ரியா கங்காதரன் 

DSC01519

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

ப்ரியங்களுடன் ப்ரியா – 3

ப்ரியங்களுடன் ப்ரியா – 4

Image courtesy:

http://www.geneticsandsociety.org

http://cdn.theatlantic.com/

http://seapointcenter.com

http://www.tracis.info

http://savingcase.com/

VITILIGO IS BEAUTIFUL – a photo documentary

Hello!

As a team of photographers, we bring out our maiden attempt at a photo documentary – VITILIGO IS BEAUTIFUL, for a social cause. Vitiligo is a chronic skin disease characterized by portions of the skin pigment. This documentary would tell more about their vision, thoughts, actions and goal.

We are very happy to present a photography exhibition in connection with the cause at SPACES, Besant Nagar on World Vitiligo Day (June 25) and it would be a great honor to have you for the inauguration. Kindly consider this as a personal invitation and grace the inauguration with your presence.

Team Discover

vitiligo

ப்ரியங்களுடன் ப்ரியா – 3

picture of happy mother with baby over white

எனக்கான 

குழந்தைகளின் கவிதைகளும்

குழந்தைகளுக்கான 

எனது  கவிதைகளும்

முத்தங்களாலேயே

எழுதப்படுகின்றன… 

வாழ்வின் முக்கியமான வளர்ச்சி, குழந்தைப் பருவத்தில்தான் நிகழ்கிறது. குழந்தை பிறக்கும்போது தலையின் சுற்றளவு 35 செ.மீ. இருக்கும். இது குறிப்பிட்ட வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து குழந்தையின் ஒரு வயதில் 45 செ.மீ. ஆகிறது. ஐந்து வயதாகும்போது தலையின் சுற்றளவு 50 செ.மீ. இருக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். காரணம், வளர்ந்த மனிதனின் தலை சுற்றளவு 50 செ.மீ.தான். ஐந்து வயதுக்கு மேல் தலைச்சுற்றளவும், மூளையின் புற வளர்ச்சியும் அதிகரிப்பதில்லை. அறிவு மற்றும் சுற்றுப்புற சூழல் தூண்டுதல்களால் மூளையின் செயல்திறன் மட்டுமே அதிகரிக்கிறது. எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைப் பருவத்தில் சத்துணவு மிக மிக அவசியம்.

baby sleep

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே 6 மாதங்கள் வரை கொடுக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான தாய்க்கு, சராசரியாக ஒரு நாளைக்கு 850 மி.லி. அளவுக்கு பால் சுரக்கிறது. இதற்காக ஒரு தாய்க்கு 600 கலோரி அளவுக்கு சக்தி தேவைப்படுகிறது.  ஆக, சத்தும் சக்தியும் உள்ளத் தாய்க்குத்தான் முழுமையான தாய்ப்பால் சுரப்பு இருக்கும். பிரசவித்த முதல் மூன்று அல்லது ஏழு நாட்களுக்கு தாயின் மார்பகத்தில் நல்லக் கொழுப்பு அதிகமுள்ள சீம்பால் (Colostrum) சுரக்கிறது. இந்தச் சீம்பால் மிகவும் இனிப்பாகவும் ருசியாகவும் இருக்கும். இதைப் பிறந்த குழந்தைக்குக் கொடுக்கும் போது, கருவறையில் சிசுவாக இருந்து குடித்த பனிக்குட நீர் அசுத்தங்களை வெளியேற்றி, வயிறு மற்றும் குடலைச் சுத்தமாக்கி, குழந்தைக்கு  நல்லப் பசியை உண்டாக்குகிறது. இதன் பின்னர் தாய்ப்பால் ஊட்டும் போது, குழந்தைக்கு முழுமையான செரிமானம் மற்றும் முழுமையான சத்து கிரகிப்பு நிகழ்ந்து விரைவாக வளர்தல் நிகழ்கிறது. எனவே, பாட்டில் பால் வேண்டவே வேண்டாம்.

6ம் மாதம் 

ஆப்பிளின் தோலை சீவி, குக்கரில் வேக வைத்து, சிறிது நெய் சேர்த்துக் கொடுக்கலாம். சத்து மாவு, கோதுமை , ஜவ்வரிசி, ராகி கூழ் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது… குழந்தைக்கு ஒரு புது உணவைக் கொடுத்தால் குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்கு வேறு எந்தப் புது உணவையும் அறிமுகப்படுத்தக் கூடாது. அப்போதுதான் அந்த உணவால் எதாவது அலர்ஜி ஆகிறதா என்று நாம் அறிய முடியும். முதல் நாள் மிகவும் கொஞ்சமாகவும் அடுத்த நாள் அளவை சற்றுக் கூட்டியும் தர வேண்டும்.

Happy baby laying on belly

7, 8ம் மாதங்களில்…

ஒரு வேளை கூழ், ஒரு வேளை பருப்பு சாதம், பால் சாதம், ஆப்பிள், வேகவைத்து மசித்த கேரட், உருளைக்கிழங்கு, ரொட்டி பால் சேர்த்து, உப்பு பிஸ்கெட் ஊற வைத்துக் கொடுக்கலாம். வெறும் பருப்பு சாதமாகக் கொடுத்து குழந்தையை கொடுமை செய்யாமல், அதற்கென தனியாக சமைத்து கொடுக்கவும். பருப்புடன் , கேரட் , கீரை, ஒரு வெங்காயம், சிறிய தக்காளி துண்டு எல்லாம் குக்கரில் குழைய வேக வைத்து கொடுக்கலாம். பசும்பாலை அறிமுகப்படுத்தவும்.

9 ,10ம் மாதங்களில்… 

இட்லி, தோசை, சப்பாத்தி, முட்டை போன்றவற்றைத் தரலாம்.

11, 12ம் மாதங்களில்… 

நம் வீட்டு நார்மல் சாப்பாட்டை குழந்தைக்குப் பழக்கப்படுத்தவும். உணவைக் கொடுக்கும் நேரம் ரொம்ப முக்கியம். இரண்டு வேளை திட உணவு அதிகம் கொடுத்தால் ஜீரணம் ஆகாது. பதிலாக இந்த அட்டவணையை கடைப்பிடித்துப் பாருங்கள்.

அட்டவணை

காலை

7:00 மணிக்கு குழந்தை எழுந்தால், எழுந்தவுடன் பசும்பால் அரை டம்ளர்.

8:00 மணி – குளிக்க வைக்கலாம். இந்தப் பழக்கமும், toilet பழக்கமும் பினனால் உங்கள் குட்டி பள்ளி செல்லும் போது பயன்படும்.

8:30 – காலை உணவு – திட உணவாக இருக்கட்டும்.

10:30 – ஒரு ஜூஸ் அல்லது சூப் கொடுக்கவும். அல்லது ஒரு பழம்.

மதியம்

12 :00 – திட உணவு.

4:00 மணிவரை எதுவும் தேவை இல்லை. பிறகு பால் கொடுக்கலாம். கூட இரண்டு பிஸ்கெட் அல்லது ஒரு ரொட்டித் துண்டு.

இரவு

7:30 மணிக்கு முழு திட உணவு கொடுக்கவும்.

9:00 மணிக்கு மீண்டும் பால்.

baby 3

குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான ஈர்ப்பு குறையும். இந்தக் காலகட்டமும் இரண்டாம் உலகப் போரும் ஒன்று. (அம்புட்டு போராட்டம் நடக்கும்).

நாம்தான் பொறுமையாக குழந்தைகளுக்கு அவர்களின் மனநிலை அறிந்து பிடித்தவற்றை, பிடித்த சூழலில் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போதே சாப்பாட்டின் அருமையையும் சேர்த்து ஊட்ட வேண்டும்.

உணவு விளையும் முறைகள்… சாப்பாடே கிடைக்காமல் இருக்கும் குழந்தைகள்.  எல்லாவற்றையும் சொல்லி உணவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் உணவின் மீது ஒரு மரியாதையை குழந்தைகள் உணர்வார்கள். உணவை வீண் செய்யக் கூடாது என்ற எண்ணமும் சேர்ந்து வளரும்.

சிந்தாமல் சாப்பிடச் செய்வது ஒரு கலை 

வைஷு குழந்தையாக இருக்கும் போது ஒரு முறை சொன்னேன்… ‘சிந்தாமால் சாப்பிடு வைஷு’ என்று.

‘பாப்பான்னாலே சிந்திதான் சாப்பிடும். இது கூட தெரியாதா உனக்கு மக்கு அம்மா’ என்று ஒரு போடு போட்டாள். அதுதான் குழந்தைகள். அவர்கள் உலகம்  விசித்திரமானது. சாப்பாட்டில் விளையாடுவார்கள். விளையாட்டை சாப்பாடு ஆக்கிவிடுவாகள்.

இந்தக் காலத்தில் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுவதனால், அவர்களுக்கு துரித உணவுகளின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதால், மற்ற நேரங்களில் துரித உணவு மீது ஆர்வம் போகாது. இதனால் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உடல் எடைக் கூடுவதை தவிர்த்திடலாம்.

முடிந்த வரை ஒரு குறிப்பிட்ட வயது வரை உங்கள் நேரங்களை குழந்தைகளுடன் செலவு செய்யுங்கள். அது அவர்களின் மனதுக்கும் நல்லது… உடல் நலனுக்கும் நல்லது.

குழந்தைகள் தானே சாப்பிட ஆரம்பித்த பிறகு ஏற்படும் மன மாறுதல்கள்…

  1. குழந்தையின் சக்தி உருவாக உணவு மாற்றப்படுகிறது: குழந்தை தன் கையால் அள்ளிச் சாப்பிடும் போது அதன் கை வழி சக்தியால் உணவை அதன் உடல் உள் தன்மைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் உணவு சுலபமாக செரித்து கிரகிக்கப்படுகிறது.
  1. பசித்தால் மட்டுமே சாப்பிடுகிறது: குழந்தை பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுகிறது. இதனால், மண்ணீரல் செரிமானம் சிறப்பாக நிகழ்கிறது.  மாவுச்சத்தின் உடனடி சக்தி குழந்தைக்கு கிடைத்து சுறுசுறுப்படைகிறது.
  1. பசியின் அளவுக்கு மட்டுமே சாப்பிடுகிறது: குழந்தை தன் இயல்புக்கு சாப்பிடுவதால் பசியின் அளவுக்கு மட்டுமே சாப்பிடுகிறது. இதனால், முழுமையான செரிமானம் நிகழ்ந்து போதுமான  சக்தியும் தரமான சத்தும் கிடைக்கப் பெற்று ஆரோக்கியமாக வாழ்கிறது.
  1. உணவு மட்டுமே வீணாகிறது: குழந்தையின் விளையாட்டால் உணவு சிந்தப்பட்டாலும், குழந்தை, பசிக்கு சாப்பிடுவதால், குழந்தையின் ஆரோக்கியம்  கெடுவதில்லை. உணவு வீணானால்  பரவாயில்லை. குழந்தை வீணாகக்கூடாது.  இது கொஞ்சம் வருத்தம்தான்… உணவு வீணாவதில். ஆனால், எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.
  1. பசிக்கு சாப்பிடுகிறது: பசிக்கு சாப்பிடப் பழகுவதால், பசியைத் தீர்க்கும் உணவுக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் நோய் வசம் சிக்காமல் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
  1. சுயமாகச் செயல்படக் கற்றுக் கொள்கிறது: தானே உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கமானது சுயமாக செயல்படுவதற்கு அற்புத வாய்ப்பாக அமைகிறது. இதனால், குழந்தையின் தன்னம்பிக்கை வளர்கிறது.
  1. ஒழுக்கம் வளர்க்கப்படுகிறது: சுய ஒழுக்கம் வளர்க்கப்படுவதால் மேம்பாடு நிகழ்கிறது.

எதையும் சுயமாக செய்யப் பழக்கப்படுத்தப்படுவதால், அவரவர் பொறுப்பு உணர்த்தப்பட்டு, உறவு நிலை மேம்படுத்தபடுகிறது. இதனால், எதிர்பார்ப்பற்ற அன்பு நீடிக்கிறது.   ( நன்றி: டாக்டர் அனுராதா கிருஷ்ணன் – கோவை)  உங்கள் குழந்தை தானாக சாப்பிட வேண்டுமாயின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து  சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் சரியாக எல்லா வகை உணவுகளையும்  ஆரோக்கியத்துக்காக சாப்பிடுவதை முன்னுதாரணமாக நம் குழந்தைகள் எடுத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.  இவ்விதமாக நாம் கையாளும் போது நாம் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். சிறுகச் சிறுகத்தான்  நம்  குழந்தைகள் மாறுவார்கள். நாம் நல்ல முன்னுதாரணமாக இருக்கும் வரை நம் குழந்தைகளும் கண்டிப்பாக  நல்ல வழிமுறைகளுக்கு வருவார்கள்.

எனக்கான 

குழந்தைகளின் கவிதைகளும்

குழந்தைகளுக்கான 

எனது  கவிதைகளும்

முத்தங்களாலேயே

எழுதப்படுகின்றன … 

pri2

  • ப்ரியா கங்காதரன்

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

sunlight3

அது ஒரு வெயில் காலம்…

ஓடு பிளந்து பாயும்
மின்சாரத்தைப் போல
வெயிலாயுதம் தாக்குகிறது…

கண்ணாடித் துகள்களென
வெம்மையின் பிம்பங்கள்

தொடர்ந்து வரும் பெரும்புழுதி
பாதங்களின் சுவடுகளை
காகிதங்களெனக் கிழித்து வருகிறது…

கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் முன்பு கொஞ்சம் வெயிலின் நன்மைகளையும்  பார்போம்…

சூரியக் கதிர்  நம்மை பொறுத்த வரை. தலைமுடி காய வைக்க, துணி காய வைக்க, பெயின்ட் காய வைக்க, மின்சாரம் கிடைக்க, தாவரங்கள் ஸ்டார்ச் தயாரிக்க, நெல் மற்றும் தானியங்களை காய வைக்க, உலர்த்த, அதிகமாக உள்ள தண்ணீர் வற்ற, உப்பளத்தில் உப்பு தயாரிக்க, பூக்கள் மலர மற்றும் நேரத்தைக் கணக்கிட இப்படிப்பட்ட விஷயங்களுக்கு மட்டும்தான் என்று நாமே நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்.

daylight 1

நமது  உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் 90 சதவிகித `வைட்டமின் டி’ சத்து சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதால்தான் கிடைக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. நாம் எப்பொழுதுமே வெயிலில் அதிக நேரம் நிற்க விரும்புவதில்லை. இதனால்தான் சுமார் 12 கோடி மக்கள் உலகம் முழுவதும் `வைட்டமின் டி’ சத்து குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

பூமியில் அனைத்து இயக்கமும்  சூரிய ஒளி மூலமே! சூரிய ஒளி மட்டும் பூமிக்குக் கிடைக்காவிட்டால் எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது. சூரியனிலிருந்து பூமி மீது விழும் சூரிய ஒளியில் அதாவது வெயிலில் நமக்கு எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை.

சூரியனிலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்கள். பலவிதமான மின்காந்த கதிர்களாகத்தான் (எலெக்ட்ரோ மேக்னெடிக் ரேடியேஷன்) பூமியின் மீது வந்து படுகிறது. இந்த மின்காந்தக் கதிர்கள் அவற்றின் வீரியத்துக்கேற்ப அவற்றின் சக்திக்கேற்ப பலவிதமாக பிரிக்கப்படுகின்றன.

sunlight 2

அதிக வெயிலை,  ‘சுட்டெரிக்கும் சூரியன்’ என்றுதான் நாம் சொல்வோம். அந்த சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள்

1). எக்ஸ்ரே கதிர்கள்

2). அல்ட்ரா வயலெட் சி, பி, ஏ கதிர்கள்

3). இன்ஃபிராரெட் கதிர்கள்

இவை மூன்றும் நம் கண்களுக்குத் தெரியாது. நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய வெயிலும்(4) சூரிய ஒளிக்கதிரே!

ஆக சூரியக்கதிர்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பூமியைத் தாக்கும் அல்ட்ரா வயலெட் கதிர்களின் வீச்சு விண்வெளியிலுள்ள வாயுக்களாலும், மாசு படலத்தினாலும், மற்ற தடுப்புச் சக்திகளினாலும் தடுக்கப்படாவிட்டால் அது பூமிக்கு வந்து சேரும்போது மனிதர்களின் சருமத்தை மிகவும் பாதிக்கும்.

இதைத்தான் நாம் `சன் பர்ன்’ அதாவது வெயில் சுட்டெரிக்கிறது என்று சொல்வோம். அதே போல மனிதர்களின் தோலிலுள்ள பிக்மென்ட்ஸை (மனிதன் கறுப்பா, சிவப்பா என்று காட்ட உதவுவது இதுதான்) பாதித்து தோலின் இயற்கையான நிறத்தை மாற்றிவிடும். நான் ஏற்கனவே சொன்னபடி சூரிய ஒளிக்கதிர்களிலுள்ள அல்ட்ரா வயலெட் `பி’ கதிர்கள்தான் ஓசோன் படலத்தை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதே கதிர்கள்தான் உடலில் `வைட்டமின் டி’ உருவாகவும் மிக மிக உதவியாக இருக்கின்றன. பத்து சதவிகிதம் ஓசோன் மண்டலம் குறைந்தால் சுமார் இருபத்தைந்து சதவிகிதம் சரும புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருக்கிறது. இத்தனை கோடி கிலோ மீட்டரை நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.

அவ்வளவு தூரத்திலிருந்து வரும் சூரியனின் வெப்பத்தை நம்மால் தாங்க முடியவில்லை. சூரிய ஒளியினால் நம் உடலுக்கு நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. சூரிய ஒளியின் மூலம் நமது உடலுக்கு `வைட்டமின் டி’ கிடைக்கிறது. சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா வயலெட் `பி’ கதிர்கள் நமது உடலின் மீது படும்போது தோலிலுள்ள கொழுப்பு பொருள் உருகி ரசாயன மாற்றம் ஏற்பட்டு `வைட்டமின் டி’ ஆக மாறி உடலுக்குள் செல்கிறது.

உடலில் தோலின் பாகம் எவ்வளவு வெயிலில் படுகிறதோ அவ்வளவு `வைட்டமின் டி’ அதிகமாக உருவாகி உடலுக்குள் சேருகிறது.

வெயிலும் நல்லதே!

கோடைக் காலம் என்பது இயற்கையின் பரிசு. கோடையில்தான்  மண்ணில் உள்ள கிருமிகள் அழிகின்றன. இதனால் பயிர்  நிலங்களில் விளையும்  பயிர்கள் நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடுகின்றன.

கோடை வெயில் நம் வீட்டு செல்லங்களுக்கு குளிர்மழைபோல் தோன்றும். காரணம் வெயிலின் கடுமை அறியாமல் விடுமுறைகளில் விளையாடும் அற்புதப் பருவம் அல்லவா அது.

உடல், இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்துவிடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாடு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும் வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன.

மேலும், அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும். வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில் கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

sunlitht

இந்த தருணத்தில் தான் நமக்கு  உடலில் பலவகையான பாதிப்புகள் தோன்றும். பனிக்காலம் முடிவடைந்து கோடை வரும்போது உடலானது சில மாற்றங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இழக்கிறது.

கோடைக் காலத்தில் அதிகாலை  எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது.

உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. நாம் உடுத்தும் துணிகளும் நம் மனநிலையை தீர்மானம் செய்யும் காலமே கோடை காலம்.

வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாகும். அதிக நீர் அருந்த வேண்டும். விட்டு  விட்டு நீர் அருந்துவது நல்லது.

– ப்ரியா கங்காதரன் 

IMG-20150610-WA0017

 

 

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

Image Courtesy:

https://nationaldaycalendar.files.wordpress.com

http://inhabitat.com/i

http://data.hdwallpapers.im/

http://berniesiegelmd.com

விலாமிச்சை வேரும் மருத்துவ குணங்களும்!

water-pot

வெயில் நாட்களில் மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அந்த மாதிரி  குடிக்கும்போது இன்னொன்றையும் செய்தால் பலன் அதிகம். ‘விலாமிச்சை வேர்’ என்றொரு வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி சுத்தப்படுத்தி, லேசாக நசுக்கி, நல்ல காட்டன் துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி அதைத் தண்ணீர் பானையில் போட்டு வைத்து விடவேண்டும். இதனால் தண்ணீர் நறுமணத்துடனும், குளிர்ச்சியாகவும், நல்ல மருத்துவகுணம் நிறைந்ததாகவும் இருக்கும்.

vilamichai verr

இதன் மருத்துவ குணத்தை ‘அற்புத சிந்தாமணி’ என்ற நூலில் உள்ள பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. அது குளிச்சியையும் நறுமணத்தையும் தருவதோடு மட்டுமல்லாமல் என்னென்ன வியாதிகளையெல்லாம் குணப்படுத்துகிறது என்று பட்டியலே போட்டிருக்கிறது.

‘‘மேகம் விழியெரிச்சல் வீறிரப் பித்தமொடி

தாகமத மூர்ச்சை பித்தஞ்சார் மயக்கம் –- சேகஞ்

சிரநேரமிழவயேகுஞ் செய்ய விலாமிச்சக்

கெரி கிரமு மின்றென்றிசை.’’

– அற்புத சிந்தாமணி.

இதனால் மேகநீர் கண் எரிவு, உதிரபித்தம், தாகம், மூர்ச்சை, பித்தம், அதனால் ஏற்படும் மயக்கம், கோபம், தலைவலி, தீச்சுரம் போகுமாம்.

வெயில் காலங்களில் மண்பானை வாங்கி தண்ணீர் வைத்து பயன்படுத்துபவர்கள் சிலர் அதன்மீது பெயின்ட்டையும் வேறு சில பல வண்ணக்கலவைகளையும் அலங்காரம் என்ற பெயரில் அடித்து விடுவார்கள். இதன் மூலம் மண்பானையில் தண்ணீரை எதற்காக வைத்துப் பயன்படுத்துகிறோம் என்ற தத்துவத்தையே மாற்றிவிடுகிறார்கள்.

மண் பானையின் மேல் உள்ள நுண்துளைகள் அடைபடக்கூடாது. இதன்மூலம் உட்செல்லும் காற்று ஆவியாக மாறும்போது தண்ணீரில் உள்ள வெப்பம் தணிந்து தண்ணீர் குளிர்விக்கப்படுகிறது. இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தி நம் பண்டைய தமிழர்கள், இரண்டடுக்குக் கொண்ட மண்ணால் செய்யப்பட்ட பானைகளில் தண்ணீரை ஊற்றி வைத்து, குளிர்சாதனப் பெட்டி போல் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது போன்ற மண்பானைகள், கெடிலம் ஆற்றங்கரையில் அகழ்வராய்ச்சியின் போது கிடைத்துள்ளது. நம் பண்டைய நாகரிகம் ஆரோக்கியம் குறித்தான முன்னோரின் அக்கறைக்குச் சான்று.

– ‘மாங்குடி’ மும்தாஜ்.

Image courtesy:

http://www.maligairaja.com

https://fieldpoppy.files.wordpress.com