ப்ரியங்களுடன் ப்ரியா–24

தரையில் விளையாடிய காலம் மறந்து
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் …

game4

கூட்டாளிய சேத்துகிட்டு 
பச்சக் குதிரை தாண்டி சகதி மண் மன்னர்களாய் 
சடுகுடுவாடி 
மன  சைக்கிள் ஏறி 
போகததேசம் போய் வந்து 
சலிக்காமல்  சோர்வாகி 
வீடு சேர்ந்து 
கோலி குண்டும் கில்லி 
தட்டியும் ஆயுதமாய் 
கபடி கபடி என பாட்டு 
பாடி  
சரடிழுத்து பம்பரம் சுத்தும் 
கைகள் அதை கண்டு 
உற்சாகமும் பம்பரமாய் 
சுத்தும் ! 

Game2

பெண் குழந்தைகள் எல்லாம் 
பாண்டி ஆடும் ! இல்லை 
கால்கள் பாடியே ஆடும் ! 
பல்லாங்குழியில் முத்திட்டு 
தொட்டாங்கல்லில் 
கைகள் தாளமிடும் ! 

game9
எழூரு எழுகடல் தாண்டி 
ஒழிஞ்சிருக்கும் 
முட்டையெடுக்க 
கண்ணா மூச்சியாடும் 
அதற்கு கண்ணனையே 
துணையாக தேடும் 
என அத்தனையும் இரையானது 
இந்த சின்னஞ்சிறு அலைபேசியின் அகோரப்பசிக்கு…
கையளவு திரையில் காரே ஓட்டலாம் 
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே 
தொலைத்தவைகளை தேடி 
மீண்டுமொரு பால்யம் வேண்டி …

Game1

வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்றாற் போன்று ஓடிக்கொண்டேயிருக்கிறோம் இயந்திரம் போல…

இளைப்பாற சற்று அமரலாம் என்று நினைக்கும் போது துரத்தி வரும் வாழ்க்கையை வெல்ல மீண்டும் ஓட்டம் என வட்டமாகி போன பின்னர் மறந்து போன பால்ய விளையாட்டுகள் எல்லாமே கானல் நீர் ஆகி விட்டது…

பெண்ணுரிமை போற்றிய மகாகவி பாரதியை ரசிக்கும் நாமே

ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் வரியை மறந்து போனோமா அல்லது கடந்து போனோமோ என்று தெரியவில்லை…

இப்போ இதை படிக்கிற எத்தனை பேர் நம்ம குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் விளையாட அனுப்புறோம் ??

இல்லை பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி சொல்லி குடுத்து இருக்கோம் ??

Game3

நம்ம  குழந்தைகளுக்கு நாகரிக உலகில் விளையாட கூட நேரமில்லீங்க… புழுதித் தெருக்களில், புரண்ட நாம்தான் இன்னைக்கு  குழந்தைகளை கான்கிரீட் ரோடுகளில் பாதம் பதியாமல் செருப்போடும், வாகனத்துடன் தான் நடத்துகிறோம்..

விலைமதிப்பிட முடியாத பண்பாட்டுப் பொக்கிசங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம். ஒருகாலத்தில் கிராமத்துச் சிறுவர்களும், சிறுமிகளும் விளையாடிய விளையாட்டுக்கள் கூட சமூக அக்கறை சார்ந்ததாக இருந்தது. உழைப்பவர்களின் செல்வத்தை ஏகாதிபத்தியத்தின் வலிய கரங்கள் கவர்ந்து கொள்ளும் காரியம் காலகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கேரளாவில் நான் பாட்டி வீட்டில் இருந்த போது  பள்ளியில் இருந்து நேராக வீட்டுக்கு வந்த உடன் பையை  ஒரு மூலையில் போட்டுவிட்டு தோட்டத்திற்கு   விளையாட சென்று விடுவேன் !

நிறைய  விளையாட்டுக்கள் விளையாடுவோம்
ஓடிபிடிப்பது, மறைந்து விளையாடுவது , உப்புமூட்டை , மணலில் வீடு கட்டுவது , கோலி , பல்லாங்குழி, திருடன் -போலீஸ் ,பரம பதம், கண்ணாமூச்சி , சிறிய சாமான்களை வைத்து  சோறு பொங்குதல் , போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடுவோம்.

game11

இதில் ஒவ்வொரு  விளையாட்டும்  நம் வாழ்க்கையின் ஒரு உணர்வை வெளிபடுத்தும் ..
ஓடிபிடிப்பது –  ஓட்ட பயிற்சி , உப்புமூட்டை – வலிமை சேர்க்கும் , மணல் வீடு – சோறு பொங்குதல்  போன்றவை சிறுவர்களுக்குள்ள ஒற்றுமையை உணர்த்தும், பல்லாங்குழி – சேமிப்பு மற்றும் எண் கணக்கின் அவசியத்தை உணர்த்தும் , . மேலும்  இரவில் ஒரு விளையாட்டு விளையாடுவோம்  அதன் பெயர்  கூட்டாஞ்சோறு   அதாவது ஒவ்வொருவரும் அவரது வீட்டில் செய்த உணவை, அனைவரும் எடுத்துகொண்டு யாருடைய  வீட்டிலாவது  வைத்து பகிர்ந்து உண்ண வேண்டும் !  தினம் ஒரு வீடு வீதம் , ஒவ்வொரு வீடாக சென்று சாப்பிட வேண்டும் ! இந்த விளையாட்டில் விட்டுகொடுத்தல் , சகோதரத்துவம் , போன்ற பண்புகளை  வளர்க்கும்.

நொண்டி,பச்சை குதிரை, மேடு பள்ளம், கில்லி, தாயம், பரமப்பதம், தட்டாங்கல், ராஜா ராணி, பம்பரம், பட்டம் என நாம் மறந்து போன, மறைந்து போன குழந்தைப் பருவ விளையாட்டுகள் ஏராளம்.

game5

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் ஆன்ட்ராய்டு யுகம் நமது நாட்களை களவாடிக் கொண்டது. கூகிள் ப்ளே ஸ்டோரில் தொடுதிரையை கீறியவாறு விளையாடிக் கொண்டிருகிறோம் தன்னந்தனியாக. ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விளையாட்டு என சீர்படுத்தி, அதில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று வகைப்படுத்தி நம்மவர்கள் இதிலும் புத்திசாலித்தனத்தை ஆழமாக பதித்தவர்கள்.

கடைசியாக இந்த விளையாட்டை எல்லாம் விளையாடி மகிழ்ந்தவர்கள் 1990 முன்னர் பிறந்தவர்களாக தான் இருக்க முடியும். 21 ஆம் நூற்றாண்டு நாளுக்கு நாள் மாற்றத்தை பரிசளித்து, நமது நினைவுகளை பேரழிவுக்குள்ளாக்குகிறது. மாற்றம் மட்டுமே மாறாதது என்ற போதிலும். இந்த அதிவேக மாற்றங்கள் கொஞ்சம் ஏமாற்றமும் அளிக்கின்றன…

game7

வீட்டு வாசலிலிருக்கும் 60 வால்ட் பல்ப் வெளிசத்தில் கிச்சுக் கிச்சு தாம்பலாம்….கிய்யான் கிய்யான் தாம்பலம் என்று மணலை குவித்து குச்சியை ஒளித்து வைத்து விளையாடுவோம்..

இன்று எங்கே தொலைந்து போனது அந்த கேளிக்கைகளும் சந்தோசங்களும்…?

இப்படி எல்லாத்தையும் தொலைசிட்டு நம்ம பிள்ளைங்களுக்கு வேற எதை சேர்த்து வைக்க போறோம் ?

முதலில் பிள்ளைங்க மனநிலையை நாம்தான் மாற்றனும்.

விளையாட்டில் வியர்வை வெளியேறினால் உடம்புக்கு என்னன்னா நன்மைகள் என்று நாம்தான் சொல்லி குடுக்கணும்..

அவங்களை விளையாட அனுமதிக்கணும்.

game10

இவ்வாறான விளையாட்டுக்கள் இப்போது அழிய காரணம் புத்தகசுமை,நேரமின்மை , நகரமயமாதல், என ஒரு புறம் இருந்தாலும்  சிறுவர்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசை என நிறைய  வந்தபின் தான் குழந்தைகள் பள்ளி விட்டவுடன்   குழந்தைகளுக்கான அலைவரிசை , வீட்டு பாடம் , சாப்பாடு , தூக்கம்  என அவங்க  வாழ்க்கையே மாறிக்கிடக்கிறது ! இதற்க்கு பின்னால் வரும் தலைமுறையை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது.

இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டை ஆரம்பிப்போம்!

game8

தரையில் விளையாடிய காலம் மறந்து 
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்..

கூட்டாளிய சேத்துகிட்டு 
பச்சக் குதிரை தாண்டி சகதி மண் மன்னர்களாய்
சடுகுடுவாடி 
மன  சைக்கிள் ஏறி 
போகததேசம் போய் வந்து 
சலிக்காமல்  சோர்வாகி 
வீடு சேர்ந்து 
கோலி குண்டும் கில்லி 
தட்டியும் ஆயுதமாய் 
கபடி கபடி என பாட்டு 
பாடி  
சரடிழுத்து பம்பரம் சுத்தும் 
கைகள் அதை கண்டு 
உற்சாகமும் பம்பரமாய் 
சுத்தும் ! 

game6

பெண் குழந்தைகள் எல்லாம் 
பாண்டி ஆடும் ! இல்லை 
கால்கள் பாடியே ஆடும் ! 
பல்லாங்குழியில் முத்திட்டு 
தொட்டாங்கல்லில் 
கைகள் தாளமிடும் ! 
எழூரு எழுகடல் தாண்டி 
ஒழிஞ்சிருக்கும் 
முட்டையெடுக்க 
கண்ணா மூச்சியாடும் 
அதற்கு கண்ணனையே 
துணையாக தேடும்…

என அத்தனையும் இரையானது 
இந்த சின்னஞ்சிறு அலைபேசியின் அகோரப்பசிக்கு 
கையளவு திரையில் காரே ஓட்டலாம் 
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே 
தொலைத்தவைகளை தேடி 
மீண்டுமொரு பால்யம் வேண்டி …

  • ப்ரியா கங்காதரன்

IMG_20160117_163128

ப்ரியங்களுடன் ப்ரியா–23

ஆதலினால்…
மலரை  விட 
மென்மையானவன் அவன்…
தரையில் பாயும்  வேரை விட 
உறுதியானவன் அவன்…
செல்ல  சண்டையை  
சிறு  புயலாய்  செய்பவன் அவன்…
 ஊடல் கொண்டே 
என்னை உளற வைப்பவன் அவன்…
எனக்கு  முகவரி
அளிப்பவன்  அவன்…
தாயின் தழுவல்களை 
போல கதகதப்பானவன் அவன்…
அடக்காது என்னை ஆனந்தமுடன் 
ரசிப்பவன்  அவன்…
மென்மையான பெண்மையை 
உணர்ந்தவன் அவன்…
நட்பு சுடரேற்றி  என் தனிமை 
இருளை விரட்டியவன் அவன் …
என் ரகசியம் அனைத்தையும் 
தன் ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..
காதோர நரையின் பின்னும் 
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல கோவங்களை 
சிரிப்புடன்  எதிர்கொள்பவன்  அவன்…
என் சின்னச் சின்ன தேடலை  கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீராய்  
உடனிருப்பவன் அவன்…
என்  புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
கனவிலும்  என்னை
மறக்காதவன் அவன்…
தூறல்  கண்ட மண்  போல்
மணமானவன் அவன்…
என்னை  சுமக்கும்
மற்றொரு  உயிரானவன் அவன்..
எனக்கே எனக்கு  அழகானவன் அவன்…
எனக்கு  மட்டும் முழுமையானவன் அவன்…
 காதல் சொல்லி தந்தவன்  அவன்…
 என்னை எனக்கே  அறிமுகப்படுத்திய உயிரானவன் …
அவனே நானாக 
நானே அவனாக ..
அவனில் தொலைந்தே …
ஆதலினால் காதல் செய்வீர் …
l4
காதலர் தினத்திற்கு  வாழ்த்து சொல்ல காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை…. அனைவருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். காதல் அழிவது இல்லை….. இரு இதயங்கள் இணைகின்ற நாள்..உண்மையான காதலினை ஏற்று கொள்வதில் தவறு ஏதும் இல்லை..
காதல் என்றுமே காதலிக்க படும் என்பதில் எந்த ஒரு மாற்றுகருத்தும் இல்லையென்றாலும் ஊரோடு ஒத்து வாழ் நிகழ்வில் இந்த ஒரு நாளும் திருநாளாக மாறியதே ..
என் பள்ளி .. கல்லூரி கால கட்டங்களில் காதல் என்பது ஒரு மிக பெரிய பாவ செயல் போல ஒரு மாய தோற்றம் இருந்தது உண்மைதான் ,,
இப்போ இருப்பது போல எந்த ஒரு தகவல் தொழில்நுட்பமும் மிகுதியாக இல்லாத காலங்களில் என்னோட கல்லூரி தோழர்களின் காதல் பயணங்களை இப்போது நினைத்து பார்த்தாலும் சிரிப்பும் சந்தோசமும் என்னை சுற்றி வந்து விடும் ,,
காதல் கடிதங்கள் … ரோஸ் வாங்கி கையில் வச்சுக்கிட்டு காத்திருப்பது ,,, கடைக்கண் பார்வைக்கு காலையில் இருந்தே காத்திருப்பது …
வார இறுதியில் கோவிலில் சந்திக்க வாரத்தின் முதல் நாளே திட்டமிடல் …  செமஸ்டர் லீவ் 60 நாளையும் தினமும் சபிச்சே கழிச்சது ,,’
அந்த 60 நாளும் அவங்க அவங்க காதலி / காதலன் வீடு . தெரு பக்கம் சுத்துவது … அவன் / அவ வீட்டுக்கு போன் செஞ்சு வேற யாரவது எடுக்கும்
பொழுது பூமியே பிளந்து விடுவது போல உணர்வு …
எல்லோரும் சேர்ந்து ஒரு படம் போக ஒரு மாசமா திட்டம் போட்டும் கடைசியில் மாறி விடுவது ,,
ஹா ஹா ,,, இப்படியே கழிந்து போன எங்கள் கால கட்டங்களை ஒப்பிடும் பொழுது இன்றைய தலைமுறை ரொம்ப குடுத்து வச்சவங்க …
விரல் நுனியில் காதலை வைத்திருக்கிறார்கள் …
வாட்ஸ் அப் … ஐமோ ..FB .. கால் … என 24 மணிநேரமும் காதலும் கையுமாக கலந்து இருக்காங்க ,, அது எவ்வளவு சந்தோசமோ அதே அளவு
கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் சிலரும் இருக்கிறார்கள் என்பதும் கொஞ்சம் வருத்தம் கலந்த உண்மைதான் …
எங்க வீட்டில் படத்துக்கு போகலாம் என்று சொன்னால், வீட்டிலே ஒரு தணிக்கை குழு கூடி அந்த படத்தில் காதல் காட்சிகள் இருக்கா ?? போக கூடிய படமா என்று ஒரு பெரிய ஆலோசனையே   நடந்து எல்லாம் இருக்கு ,,,
இப்போ நடுவீட்டிலே எல்லா கண்றாவியும் வந்திரிச்சு நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ..
நம்மதான் எல்லாத்தையும் சரி செஞ்சு நமக்கான சரியான பாதையை தேர்வு செய்து போகணும்…
l6
காதல் எப்போவுமே தேன்தான்…. இயற்கை சுவையில் என்றுமே திகட்டாது  …
காதலையும் ஒரு வியாபார வணிக நோக்கமாக்கி பணம் சம்பாதிக்க வலி செய்தது இந்த நாகரிக வளர்ச்சி என்றும் கூட சொல்லலாம்.
காதலர் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14ம் நாள் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இது காதலைப் புனிதப்படுத்தும் தினம் என்று காதலர்கள் சொல்ல, இது ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் பாய்ந்திருக்கும் மேல் நாட்டு விஷம் என்று இன்னொரு தரப்பினரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. மற்ற தினங்களிலெல்லாம் பரிசுகளோடும் வாழ்த்துக்களோடும் முடிந்து போகும் கொண்டாட்டம் காதலர் தினத்தில் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கிறதோ..? எனும் அச்சம் சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே உண்டு..
காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடவில்லை எனில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.
l8
நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல்,  கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது.  டிஸ்கோதே, இரவு விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கென்று குத்தகைக்கு விடப்பட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் மழைகாளான்கள் போல் தோன்றி மறையும் காதலாக உள்ளன..
காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை.
பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ….
கம்ப ராமாயணத்தில் கம்பரின் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகு சேர்ப்பதாய் தான்  இருக்கிறது . காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது. அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் இருக்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பது தான் உண்மை..
l2
காதலர் தினம் தோன்றிய வரலாறு..
கி.பி இருநூறாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த மன்னன் கிளாடியஸ் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். இவருடைய  ஆட்சி காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.
மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது..
ரோமில் பிப்ரவரி மாதம் என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம், வசந்த காலத்தின் ஆரம்பம் தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.எனினும் வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக இருந்திருக்கிறது..
சீனர்களிடம் ‘ஏழின் இரவு’ என்று சொல்லப்படும்  இந்த காதலர் தினம் ஏழாவது மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள்..
l1
1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல், அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்திலும் ‘நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் வருகிறது..
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும், பூக்கள் கொடுப்பதும், சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது..
காதலர் தினக் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய்,  அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள். நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது. இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் புலப்படும்.
அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 180 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் க்கு அடுத்தபடியாக காதலர் தினம் அமெரிக்காவில் மிகப் பிரபலம்..
l3
ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள சுமார் முப்பதாயிரம் நகைக்கடைகளில் சுமார் மூன்று பில்லியன் மதிப்புள்ள நகைகள் இந்த கொண்டாட்டக் காலத்தில் மட்டுமே விற்கப்படுகின்றனவாம். சுமார் 36 மில்லியன் இதய வடிவ சாக்லேட் பெட்டிகள் காதலர் தினத்துக்காக மட்டுமே விற்பனையாகின்றன என்பது கூடுதல் தகவல்..
காதல்  எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நொடியாவது தீண்டாமல் போவது இல்லை…
ஒவ்வொரு நொடியும் உணர்ந்து சுகித்து ரசித்து வாழுவோம்.
l9
காதலை காதல் செய்து ,,,
ஆதலினால் காதல் செய்வீர் …
மலரை  விட 
மென்மையானவன் அவன்…
தரையில் பாயும்  வேரை விட 
உறுதியானவன் அவன்…
செல்ல  சண்டையை  
சிறு  புயலாய்  செய்பவன் அவன்…
 ஊடல் கொண்டே 
என்னை உளற வைப்பவன் அவன்…
எனக்கு  முகவரி
அளிப்பவன்  அவன்…
தாயின் தழுவல்களை 
போல கதகதப்பானவன் அவன்…
அடக்காது என்னை ஆனந்தமுடன் 
ரசிப்பவன்  அவன்
மென்மையான பெண்மையை 
உணர்ந்தவன் அவன்…
நட்பு சுடரேற்றி  என் தனிமை 
இருளை விரட்டியவன் அவன் ..
ரகசியம் அனைத்தையும் 
ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..
காதோர நரையின் பின்னும் 
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல கோவங்களை 
சிரிப்புடன்  எதிர்கொள்பவன்  அவன்…
என் சின்னச் சின்ன தேடலை  கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீராய்  
உடனிருப்பவன் அவன்…
என்  புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
கனவிலும்  என்னை
மறக்காதவன் அவன்…
தூறல்  கண்ட மண்  போல்
மணமானவன் அவன்…
என்னை  சுமக்கும்
மற்றொரு  உயிரானவன் அவன்..
எனக்கே எனக்கு  அழகானவன் அவன்…
எனக்கு  மட்டும் முழுமையானவன் அவன்…
 காதல் சொல்லி தந்தவன்  அவன்…
 என்னை எனக்கே  அறிமுகப்படுத்திய உயிரானவன் …
அவனே நானாக 
நானே அவனாக ..
அவனில் தொலைந்தே …
– ப்ரியா கங்காதரன்
IMG_20160117_163128

ப்ரியங்களுடன் ப்ரியா–21

நம்பிக்கையுடன் தொடர்வோம்!

dawn

இந்த ஆண்டு இனிய ஆண்டே!

 

நேற்றும் இன்றும் 
மாறிவிடாத 
தவமொன்றின் வலிகளாய்

மேகங்கள் மெய்வருத்தத் 
தருங் கூலியென 
பெய்யென பெய்த 
பெருமழை தாண்டி

இதோ 
நமக்கான  விடியல் 
தன் கதவுகளை 
திறக்கிறது…

கனவுகளால் 
கட்டமைக்கப் பட்ட 
ஒவ்வொரு நாளும் 
நமக்கான  பறவையே

தேட முடிவெடுத்த பின் 
தொலைதலில் 
பயம் கூடாது…

வெல்ல  தொடங்கிய பின் 
தொடுவானம் தூரம் 
என்பதில் 
மூச்சு மட்டுமே வாங்க முடியும்…

எல்லாம் முடியும் 
என்பதாகவே பேசட்டும் 
கண்களும் காலமும்…

புதிய வருடமும் 
புதிதாக பிறக்கும் குழந்தையும் 
வளர்க்கும் கைகளும் 
வாழும் வாழ்கையும் 
தீர்மானம் செய்வது போல

நீண்டு கிடக்கும் நீலவானம் 
மௌனமாய் புன்னகைக்கிறது
இரு கரம் நீட்டி நம்மை வரவேற்கிறது.

பொதுவா ஒவ்வொரு வருட தொடக்கத்தையும் சந்தோசமா வரவேற்போம். இத்தனை வருஷம் இயற்கைக்கு எதிராக நாம் செய்த எல்லாவற்றிக்கும் ஒரே வாரத்தில் இயற்கை தந்த பதிலால் கொஞ்சம் இல்லை நிறையவே வேதனையுடன் இந்த வருடத்தை தொடங்கி இருக்கிறோம்.

முன்னாடி எல்லாம் புதுவருஷம் என்றால் காலையிலே சீக்கிரமா எந்திரிச்சு கோவிலுக்கு போயிட்டு அப்பா அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கி ஆண்டை தொடங்கிய காலம் கடந்து, வருடம் விடிந்துதான் படுக்கை செல்லும் அளவிற்கு நாம் முன்னேறி இருக்கிறோம்.

2015…

மனிதம் தழைய செய்த மழை வெள்ளம்

அக்னிசிறகு நாயகன் அப்துல்கலாம் ஐயா மறைவு

இப்படி இரண்டு பெரிய நிகழ்வை இந்த ஆண்டு கடந்தோம்.

ஒவ்வொரு வருடமும் வழக்கமாக வரும் டைரி, காலெண்டர், கேக், புத்தாண்டு சபதம் என இயல்பு நிகழ்வுகள் தொடர்ந்தாலும், என்றுமே தொடங்கும் ஒரு நாளாகத்தான் தொடங்கி இருக்கிறது இந்த ஆண்டும்.

நாங்கள் புத்தாண்டை வரவேற்ற முறைக்கும் இப்போதைய தலைமுறை வரவேற்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தோம் என்றால், ஒரு தலைமுறைக்குள் நூற்றாண்டு வேறுபாடுகள்…

காதை கிழிக்கும் இரைச்சல்… உணர்வை மறக்க உற்சாக பானங்கள் என அதி நவீன வாழ்வின் அடிமைகள் ஆன நமது தலைமுறைகளை நினைக்கும் பொழுது மனம் வேதனை அடைவது என்னவோ உண்மைதான்.

பொதுவாக நாம் எல்லோருமே புத்தாண்டை ஒரு விடுமுறை தினமாக தான் பார்க்கிறோம். அதான் உண்மையும் கூட… மேற்கத்திய கலாசாரம் என்று அதை ஏற்றுக்கொண்ட பொழுதிலும், தமிழ் புத்தாண்டுக்கு உரிய மனநிறைவை ஏனோ  அது தருவதில்லை.

dawn2

கடந்து செல்லும் நாட்களில் அதுவும் ஒன்றாக எண்ணாமல் புதிதாகத் தொடங்கும் ஆண்டின் உறுதிகளாக சிலவற்றை தொடர்வோம்…

  • ‘உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.
  • பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதே இல்லை. பெற்றோர்களும் அவர்களிடம் எதையும் கேட்பதே இல்லை. இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்னைகள் உருவாகின்றன. இந்த வயதில் உள்ளவர்களை பெற்றோர்கள் தங்கள் நண்பர்களாக பாவித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்படும்.
  • ‘மீன் கொடுப்பதை விட, மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு எந்த ஒரு விஷயத்தையும் அடிப்படையிலிருந்து தெளிவாக கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ, அந்த துறையில் அவர்கள் திறன் வளர ஊக்கப்படுத்துங்கள். படிப்பிலும் சரி, விளையாட்டுகளிலும் சரி உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது ‘உற்சாக டானிக்’கை கொடுத்துக் கொண்டே இருங்கள்.

dawn1

  • தனித்தன்மையுடன் திகழுங்கள். அதில் பெருமை கொள்ளுங்கள்.
  • நீங்கள் ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் அனைவரின் பார்வையும் உங்கள் மேல் உள்ளதாக எண்ணிக் கொள்ளுங்கள்.
  • வாழ்க்கை உங்களுக்கு அளிக்கவிருக்கும் அரிய அனுபவங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறீர்களா என்பதே உங்கள் முன் இருக்கக் கூடிய மிகப் பெரிய கேள்வி.
  • முடியாது என்று மற்றவர்கள் சொல்வதை நாம் செய்து முடிப்பதன் மூலம் அடையக் கூடிய மகிழ்ச்சி அளவற்றது.
  • கனவுகளைக் காண முடிந்தவர்களால் அடைய முடியாதது என்று எதுவுமே கிடையாது.
  • எந்த ஒரு பொருளையும் முதலாவதாகவோ அல்லது கடைசி முறையாகவோ பார்ப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் மிகவும் அழகாகத் தோன்றும்.
  • எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்கும்.
  • நம் கனவுகளின் தேடல் வேட்டையில், தேடலில் தொலைந்து போய் அதனை விட சிறப்பான ஒன்றை நாம் பெறுகிறோம்.
  • உங்கள் வாழ்க்கைப் பாதைகளில் வரும் தடங்கல்களைக் கண்டு அஞ்சாதீர்கள். ஏனென்றால் நம்முடைய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே அவை ஏற்படுத்தப்படுகின்றன.
  • ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பிரச்னைகள் உண்டு. அவை எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை… அவை ஒவ்வொன்றும் நன்மை தரும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியே அமைகின்றன… பிரச்னைகள் ஒவ்வொன்றும் மனிதனை பட்டை தீட்டும் வலிமை கொண்டவை.
  • இந்த ஆண்டில் தேவைற்ற பொருள்களை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம்தான். உங்களுக்கு அருகாமையில் உள்ள வீட்டு நண்பர்களோ, அலுவலக நண்பர்களோ, நீங்கள் இருக்கும் எந்த இடத்திலும் சுற்றியருப்பவர்களின் நட்பை ஒரு போதும் இழந்துவிடாதீர்கள். உங்கள் வார்த்தைகள் எப்போதும் மென்மையாகவும், இனிமை கலந்தாகவும் இருக்கட்டும்.
    மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற அவர்களுக்கு நீங்கள் முதலில் உதவ வேண்டும்!

DSC01519

  • ப்ரியா கங்காதரன்

ஏய் வாசகா !!! உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்!!!

ப்ரியங்களுடன் ப்ரியா–14

book1

விரல்களற்றவன் கையில் கிடைத்த 
வீணை போலவீணாகக்கழியும்.
கைகளில் புத்தகம் 
இல்லாத மாலைகள்…
எழுத்தை இனித்து 
புசிக்கும் வேளைதனில் 
வயிற்றுப் பசி
எட்டி நின்றுவிடும்…
நானே என்னை தொலைக்கவும் 
நானே என்னை கண்டெடுக்கவும் 
புத்தகம் மட்டுமே
துணை  வருகின்றன…
விதைந்த வரிகளில்
கவிதையாக கருவாகி 
பக்கங்களில் உயிர்த்து 
சுவாசம் செய்யும் பொழுது 
விடிந்தது மனமும் வானமும்…

 book2

ஏய் வாசகா !!!  உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்!!!

என்று நகுலனின் ஒரு கவிதை…

இந்த வரி ஒன்றே போதும் , வாசிப்பவனும் , வாசிப்பதுவும் எவ்வளவு பெரிய வரம் என்பதற்க்கு.. எப்போதெல்லம் நாம்  தொலைந்து போனோமோ அப்போதெல்லாம் நம்மை மீட்டு கொடுப்பதும் ,எதையெல்லாமோ நாம்  தொலைத்தோமோ அதையெல்லாம் இப்போதும் தேடித்தருவதும் புத்தகங்கள்தான் .அப்படி இருந்தும் ஏன் வாசிக்கும் பழக்கம் தொடர மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணுகிறதே இந்த மனம் எனும்போது மனசின் மேல் அறிவு கொஞ்சம் கோபம் கூட படுகிறது

புத்தகம் படிப்பது என்பது  நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்க படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் குறித்து  ஆயிரம் கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன…

 book

எனது வாசிப்பு …

உயிர்ப்பாக எழுத்தை நான் சுவாசிக்க ஆரம்பித்தது கடவுளின் தேசத்தில் தான்.. ஆம்… நான் வாசிப்பை தொடங்கியது கேரளாவில்தான்!

நான்காம் வகுப்பு வரை மழலை தமிழை மலைமுகட்டில் வாசிக்க ஆரம்பித்தேன் ..

அம்மா அப்பாவின் வருகை அவர்களின் அருகாமை அன்பை விட அவர்கள் எனக்கு கொண்டுவரும் சிறுவர்மலர் .. பூந்தளிர் ..எதிர்நோக்கியே இருந்தது …

காமிக்ஸ் கதைகள் .. அம்புலிமாமாவில் தொடங்கிய எனது வாசிப்பு இன்றுவரை தடையற்ற வெள்ளமாக பல்கி பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.

கொங்குவாசியான நான் எங்க ஊர் எழுத்தாளார் ராஜேஷ் குமார் அவர்களின் தீவிர வாசகியாகி ஒரு கால கட்டத்தில் க்ரைம் நாவலும் நானுமாகி போனதும் நிஜமே.

அதனை தொடர்ந்து வாசிப்பின் பக்கம் குடும்ப நாவல் பக்கம் திரும்பிய பொழுது கல்கியில் தொடராக வெளியான லக்ஷ்மி அம்மாவின்  எதற்காக என்ற நாவல் வாசிப்பின் மறுபக்கத்தை எனக்கு அழகாகக் காட்டியது.

இதுவரை படிக்கணும் என்று ஆசைப்பட்டு வாங்கியும் இதுவரை படிக்கச் முடியாத நாவல் ** கங்கை கொண்ட சோழபுரம் ** 2 ,3 , 4 பகுதிகள் மட்டுமே.

அதை போல பலமுறை படித்த நாவல்கள் என்றுபார்த்தால் ரமணிச்சந்திரன் அம்மா அவர்களின் நாவல்கள் ** காதெலெனும் சோலையிலே , மாலை மயங்குகிற நேரம், வளையோசை, விடியலை தேடும் பூபாளம் , மானே மானே ,,, புதுவைரம் நான் உனக்கு ** இதுவரை எத்தனை முறை வாசிச்சு இருப்பேன் என்று தெரியலை ,, எத்தனை முறை வாசிக்க போறேன் என்றும் தெரியலை …

ஆதர்ச எழுத்தாளர் வரிசையில் நான் நெறைய பேரை சந்தித்து இருந்தாலும் இதுவரை நிறைவேறாத விரைவில் நிறைவேற வேண்டிய ஆசை என்று ஒன்று இருந்தால் அது ரமணிச்சந்திரன் அம்மா அவர்களை சந்திக்கணும்… சந்திச்சே ஆகணும்…

எல்லோருக்கும் வாசிப்பின் மேல காதல் வர எதாவது ஒரு காரணம் இருக்கும். எங்க வீட்டில் எங்க அம்மா அப்பா குமுதம்,விகடன் என்று படிக்கப் படிக்க எனக்கும் வாசிப்பின் மீதான காதல் வளர ஆரம்பித்தது …

சிறுவயசில் மளிகை கடையில் பொட்டலம் கட்டி தரும் தாளை வீட்டில் வந்து பிரிச்சு படிக்கக் கூட பொறுமை இல்லாமல் இடப்புறம் வலப்புறம் என்று அந்த பொட்டலத்தை தலைகீழாக வாசித்துதான் வீடு வந்து சேர்வேன் ..
 book5

வாசிக்கும் சமுகமே வளரும் சமுகம் என்ற வார்த்தையை மனதார பின்பற்றுவள் நான். இந்த நாகரிக கணினி உலகில் என் மகளையும் வாசிக்க வைக்கணும் என்று சிறுவயதிலே நீதிக்கதைகளில் ஆரம்பித்து இப்போ போன மாதம் கல்பனா சாவ்லா பற்றிய புத்தகம் வாங்கி கொடுத்தேன்.

வாசித்தலில் வருடியவர்கள்.. ( இதை முன்னமே நமது ஸ்டார் தோழி பகுதியில் எழுதி இருந்தேன். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். ஆகச்சிறந்த படைப்புகள் நீங்களும் இதை வாசிக்கணும் என்று)

சில நேசிக்கும் எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லி விளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும்… கதகதப்பான சாம்பலில் கண்திறக்க மனமின்றி எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துகளின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும்… அப்படி என்னை மடியில் கிடத்தி தலை கோதி வருடிய சிலரின் வரிகள்…

1. எஸ் ரா ..எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி.

s-ramakrishnan
வரிகளை வாசிக்கும் பொழுதே உடன் பயணித்த அனுபவம் .. ஒவ்வொரு பக்கமும் ஒவொரு தேசமாய் ஒவ்வொரு மனிதராய் சந்தித்த போது பயணத்தின் சுகானுபவம். படிக்கும் பொழுதே பலரை சந்திக்கும் அனுபவம்.

இவரின் விழி வழியே வரிகளை கடக்கையில் அட ஆமாம் !!.எப்படி நாம் இதை ரசிக்காமல் விட்டோம் அல்லது நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார் ?” என மனசு கேக்காமல் இருபதில்லை . , தேசாந்திரி புத்தகத்தின் சில தேன் துளிகளை சொல்கிறேன் ..தித்திப்பை நீங்களும் ரசியுங்கள் ..

சாரநாத்தில் ஒரு நாள்…. சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது..

நிலமெங்கும் பூக்கள்…

பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.

நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்…. எத்தனைவிதமான மலர்கள்…! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும் ..

உறங்கும் கடல்…

தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன….

2. எழுத்துச் சித்தரின் வரிகளை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை .. பாலா ஐயாவின் வரிகளை புத்தகங்களை வரிசை செய்து வகை செய்யும் அளவிற்கு எனக்கு பக்குவம் இல்லை என்றாலும் ஐயாவின் வரிகளில் வாழ்க்கையை உணரலாம்.

 balakumaran

மனசோ உடம்போ சோர்வாவும் பொழுது ஐயாவின் புத்தகம் போன்ற மருத்துவன் வேறு யாரும் இல்லை ..

ஐயாவின் வரிகளில் எனது அடி நாதம் வென்றவை …

மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை.

அக்கறைக்குப் பெயர் காதல் காதலுக்கு பெயர் அக்கறை, வேறு வார்த்தையில் மதித்தல் காதல் என்பது மதித்தல்.

உலகத்தில் எந்த உயரினமும் ஒன்றை விட ஒன்று உயர்ந்ததே இல்லை. சகலமும் ஒரே விஷயம். உண்ணும் உணவால், வடிவத்தால் இயற்கை சூழ்நிலையால் உருவங்கள் மாறலாமே ஒழிய இலையில் இருக்கும் புழுவும், மனிதனும் ஒன்றே. இதில் கர்வப்பட ஒன்றுமில்லை. — குன்றிமணி

விவேகம் என்பது திமிர் அல்ல. விவேகம் என்பது அடக்கமும் அல்ல, சூழ்நிலையின் உண்மையை தனது வலிமையை பற்றித் தெளிவாக யோசிப்பதே விவேகம்.

ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன்.தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.- சுழற்காற்று

நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒரு ஆண் இருந்துவிட்டால் அதை விடப் பெரிய நிம்மதி ஒரு பெண்ணுக்கு எதுவுமில்லை. -உத்தமன்….

பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, எந்த இடத்தில் அன்பும், மரியாதையுமாய் நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும் சிறந்து விளங்கும்.–என் கண்மணித்தாமரை

3. குடும்ப உறுப்பினர்களின் மூலம் அறிமுகமானவர். ரமணிசந்திரன் என்ற பெயர் மனதில் பதியவும், சந்தர்ப்பம் வாய்த்தபோது தேடிப்பிடித்து படிக்கவும் தொடங்கினேன்..

 ramanichandran

இவர் கதைகளில் கதாநாயகிகளை அத்தனை கண்ணியமாக காட்டி, அவருடைய எண்ண ஓட்டங்களை சொல்லும் போது படிக்கும் பலருக்கும் புத்தி சொல்லும் விதமாக, எது நல்லது, எது கெட்டது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது, எது தப்பு, எது சரி, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்மைக்கு உதாரணம் தருவது அருமை.

சில நேரங்களில் அந்த கதாநாயகிகள் ஆகவே கற்பனை செய்து பார்ப்பதும் உண்டு … படிக்கும் போதே நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மில் இருக்குமோ என்றே எண்ண வைக்கும் எழுத்து இவருடையது….

4. விகடனில் தொடராக வந்து படித்ததுதான் என்றாலும் மீண்டும் புத்தகமாக வாங்கி படிக்க ஆரம்பித்தேன்… இன்று வரை மீள இயலவில்லை!

 vairamuthgu

திரைப்படங்களிலும் நாடகத்திலும் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ மட்டும் எப்படி இவ்வளவு சோகம் என்று நான் நினைத்தது உண்டு. அது சினிமாவில் மட்டுமே சத்தியம் என்று நினைததுவுண்டு. ஆனால் இந்த கருவாச்சி காவியம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.

வைரமுத்து ஐயாவின் வைர வரிகளில் என் கண்களை குளமாக்கிய கருவாச்சி காவியம் பற்றித்தான் சொல்கிறேன் ..

ஒத்தையில கருவாச்சி புள்ள பெத்தது. படிக்கும் போதே உசிரு ஒடுங்கி ஒரு நடுக்கம் வருவது தடுக்க முடியாது

கருவாச்சி, அவ ஆத்தா பெரியமூக்கி, கொண்ணவாயன், கட்டையன், அவனப்பன் சடையதேவர், கருவாச்சி மகன் அழகுசிங்கம், கெடா பூலித்தேவன், வைத்தியச்சி, கனகம், பவளம். இவங்க எல்லார் கூடவும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடிச்ச அனுபவம் இருக்கும் இத படிச்சி முடிச்ச உடனே.

நல்லா காவியம் படிச்ச சந்தோஷமா?.. கதைல உள்ள சோகமா?.. எது விஞ்சி நிக்குது-னு தெரியாது.

எதை சோகங்கள், எதனை வலிகள். படிக்கும் பொழுதே எனக்கு கண்களில் கண்ணீர். காவியங்கள் என்பது இதிகாசங்களில் உள்ள ஒன்று என்று நினைத்திருந்த என் எண்ணங்களை இந்த கருவாச்சி காவியம் முற்றிலும் மாற்றிவிட்டது.

5. நிலவையும் தாளில் கொண்டு வந்த வித்தகக் கவி பா.விஜய். கி.பி, கி.மு நடந்த நிஜங்களை காதல் சோகங்களை கவிதைகளாக கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் கவிஞர் பா.விஜய் . சரித்திர கால காதல் நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட காதல்களை கவிதைகளாகத் தொகுத்து நெய்யப்பட்டது இந்த உடைந்த நிலாக்கள்.

 pavijay
பா.விஜயோட “உடைந்த நிலாக்கள்” ஆகச் சிறந்த கவிதை தொகுப்பு. இதை படிச்சவங்களுக்கு நல்லா தெரியும் பெண்களால எத்தனை ராஜ்ஜியம் எழுந்திருக்கு… எத்தனை ராஜ்ஜியம் வீழ்ந்திருக்குனு…

ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்… இப்படி நீண்டுட்டே போகும். இவங்க வாழ்க்கைல நடந்த பெரும் மாற்றங்களுக்கு பின்னாடி பெண் மட்டும்தான் முக்கிய காரணம்.

“பெண் என்னும் பிஞ்சு பிராவகமே! கனவாக நீயிருந்தால் கண்விழித்தா நான் இருப்பேன்? நிலமாக நீயிருந்தால் நடக்க மாட்டேன். தவழ்ந்திருப்பேன் முள்ளாக நீயிருந்தால் குத்திக் கொண்டு குதூகலிப்பேன் தீயாக நீயிருந்தால் தினந்தோறும் தீக்குளிப்பேன் தூசாக நீயிருந்தால் கண் திறந்து காத்திருப்பேன் மழையாக நீயிருந்தால் கரையும் வரை நனைந்து நிற்பேன்”

எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி. இப்படி படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக்கூடியதில்லை.

ஒரு புத்தகம் வாசிக்கும் பழக்கம் வரும்போது அதை தொடர்ந்து அந்த புத்தகத்தின் ஆரம்பம் ஒருவிசயத்தில் தொடங்கி மெல்ல தன் வசப்படுத்துகிறது ,பிறகு ஒரு இடத்தில் நம்மை யோசிக்க வைத்து விட்டு ஏதோ ஒரு முடிவை சொல்லியதுபோல தந்து விட்டு குழந்தைகளின் யோசிக்கும் திறனை தொடங்கிவிடுகிறது என்பதோடு  சூசன் கிரின்பீல்ட் நிறுத்திவிடவில்லை.அதை படித்து காட்டும் பக்குவத்தையும்  பொறுளையும் நாம் சொல்ல சொல்லும்போது மூளை செல்கள் ஊக்கம் பெற்று படிப்பில் அவர்களுக்கு ஒரு தொடர்ப்பை ( Continuity ) நினைவுறுத்த பயிற்சி தருகிறது என்கிறார்.அது மட்டுமல்ல இது கம்யூட்டரில் செலுத்தும் கவனத்தை விட பல மடங்கு பலன் தருகிறது என்கிறார் .

 book3

மனிதரில் நாம் தரம் பிரிப்பதை போல புத்தகமும் அவ்வளவு சுலபமாக எடை போடுவது தவறான பார்வை .ஒவ்வொரு புத்தகமும் ஒரு புதிர்தான் .அந்த புதிரை அவிழ்க்க பலருக்கும் பொருமை இருந்தாலும் ஏன் இவன் இப்படி எழுதுகிறான் என்று எழுதியவன் தளத்தில் நின்று பார்க்கும் பக்குவம் வரவேண்டும் என்பது ஆரோக்கியமான சிந்தனை .

சமுதாய வளர்ச்சியில் தனிமனித பங்காக வாசிப்பை சொல்வேன் நான் ..

வாசிப்பவன் என்றுமே பிறரை நேசிப்பான் ..

பிறரை நேசிப்பவன் என்றுமே தவறு செய்ய மாட்டான் …

வாசிப்போம் …வளம் பெறுவோம் …

 book4

விரல்களற்றவன் கையில் கிடைத்த 
வீணை போலவீணாய் கழியும்.
கைகளில் புத்தகம் 
இல்லாத மாலைகள்…
எழுத்தை இனித்து 
புசிக்கும் வேளைதனில் 
வயிற்றுப் பசி
எட்டி நின்றுவிடும் …
நானே என்னை தொலைக்கவும் 
நானே என்னை கண்டெடுக்கவும் 
புத்தகம் மட்டுமே
துணை  வருகின்றன.
விதைந்த வரிகளில்
கவிதையாக கருவாகி 
பக்கங்களில் உயிர்த்து 
சுவாசம் செய்யும் பொழுது 
விடிந்தது மனமும் வானமும்.

  • ப்ரியா கங்காதரன்

book6

ப்ரியங்களுடன் ப்ரியா – 10

புடவை… ரொம்ப பெரிய தலைப்பு …
அழகாக மடித்து கொடுத்தால்
அருமையாக படிக்கலாம்!
 

IMG_7101
பால் நிலவு
பருத்தியை நூலாக்கி …
விண்ணில்  
தறி செய்து…
வானவில்லின் 
வண்ணம் கொண்டு…
ஆதவன்  சாயம் 
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும் 
நெய்தெடுக்க …
நட்சத்திரமாக ஜொலிக்கிறது 
எனது சேலை!
Sundari Silk_Day 2 -09
புடவை ,நம்ம எல்லோருக்கும் ரொம்பபிடிச்ச விஷயம்… பிடிச்ச விஷயத்தை பிடிச்ச மாதிரி நாம எத்தனை பேர் அனுபவித்து இருக்கிறோம்?

அதனால சேலை பற்றி கொஞ்சம் பேசுவோமே…

கடலில் இருக்கும் மீனை கூட எண்ணிவிடலாம்… பெண்கள் நம் மனதில் இருக்கும் புடவை பற்றிய ஆசைகளை மட்டும் எண்ணி விடவே முடியாது!

ஆதிகால  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பதில் ஒரு வரி வருகிறது ..

*பாத்து இல் புடைவை உடை இன்னா*

பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம்.

அப்போவே பாருங்க… நம்ம முன்னோரே சொல்லி இருக்காங்க.. சரியான முறையில் இல்லாத புடவை உடுத்துவது துன்பம் என்று.

அப்போவே அப்படி என்றால் இப்போ நாம எப்படி இருக்கணும்?

நாம்  கட்டுகின்ற தைக்கப்படாத உடையான புடவை  பல்லாயிரம்   ஆண்டுகளுக்கு முன்பே  பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தியாவில் இவற்றின் தொடக்கம் பற்றி முடிவு செய்யக்கூடிய சான்றுகள் ஏதும்  இல்லை. இந்தியாவில் மட்டுமன்றி, உலகின் பண்டைக்கால நாகரிகம் நிலவிய பல இடங்களிலும் புடவைகள்  இருந்திருக்கின்றன.

Sundari Silk_Day 2 -03

புடவைகளின் வகைகள்

பட்டு, கைத்தறி ,சிபான், பனாரஸ், போச்சம் பள்ளி, காட்டன் ,டிசைனர் எம்ப்ராய்டரி,  டிசைனர் பார்ட்வேர் ,  டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா , ஹாஃப் ஆம்ப்,  ஹாஃப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட், டெனிம்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைகின்றன ..

img_02_black copy

புடவைகள் தேர்வு செய்யும் முறை

பொதுவாக நாம் கடைக்குள் நுழையும் வரை இருக்கும் மனப்பான்மை  விற்பனையாளர் சேலையை எடுக்கும் வரைதான் இருக்கும். அவர் ஒன்னு ஒண்ணா எடுக்க எடுக்க நம்ம மனசுல  வரும் பாருங்க ஒரு சுனாமி பேரலை… இதை எடுப்போமா அதை எடுப்போமா என்று!

அங்கேதான் நாம கவனமா இருக்கணும்…. வெறும் கண்ணைப் பறிக்கும் அழகில் மயங்காம, நாம குடுக்கும் பணத்திற்கு வொர்த் இருக்கா? இதை நாம கட்டிய பின்னாடி நல்லா இருக்குமா ? துணியின் தரம் என்ன? இதையெல்லாம் நிதானமா யோசிச்சு தான் தேர்வு செய்யணும்.

எங்கே ப்ரியா. அதையெல்லாம் பார்க்க முடியுது ?? சுத்தி 10 கண்ணாடி வச்சு சேலையை தோளில் வச்சு நம்மை வாங்க வச்சு விடுறாங்களே என்று மட்டும் சொல்லாதிங்க… நம்ம பணம் நாமதான் பொறுமையா தேர்வு செய்யணும்!

தரம் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே தேர்வு செய்யும் புடவையும், எந்த விஷேசத்துக்குக் கட்டப் போகிறோம் என்பதை மனதில் கொண்டு தேர்வு செய்தலும் நலம்..

அதைப் போலவே நம்ம உடல்வாகு, நிறம்பொருத்தும் தேர்வு செய்யணும்.

ஒரு  புடவையை தேர்வு செய்த உடன், ‘இந்த புடவை நன்றாக உள்ளது… எனக்கு பொருத்தமாக இருக்கும்’ என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் ..

‘இந்த நினைவு மாறாது, யார் என்ன சொன்னாலும் , இதற்காக  நான் மன வருத்தப்பட மாட்டேன். இந்தப் புடவையை வாங்கி விட்டேன்…’ என்று, கடையிலேயே, உங்கள் மனசஞ்சலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். பின், வீட்டில் வந்து பார்த்தாலும், யார் எதைச் சொன்னாலும், கவலைப்படாமல் இருக்கலாம்!

img_01 copy
புடவை  கட்டும் முன் நினைவில் கொள்ள வேண்டியவை

பெண்கள் அணியும் புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கிறது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.

சில புடவைகளில்  உள்பக்கம் வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்க வேண்டிய பக்கம் பகட்டாக இருக்கும். மற்ற பக்கம் மங்கலாக இருக்கும். இதனை கவனித்து கொள்ளவும்.

புடைவையின்  ஒரு முனையில் முந்தானையும் மறுமுனையில் சில சேலைகளில்  தைப்பதற்கான ப்ளவுஸ் துணியும் இருக்கும். ப்ளவுஸ் தைப்பதற்கான துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து விடவும். இல்லையேல் நீளம் அதிகமாக இருக்கும். கட்டுவதற்க்கும் கனமாக இருக்கும்..

புதுப் புடவை  கட்டுவதற்கு முன் அதனை மிதமான சூட்டில் தேய்த்து   கொள்ளுங்கள். இது மடிப்பை சரியாக பிளீட் செய்ய  உதவி செய்யும் ..

_DSC4555
சற்று உயரமானவர்களுக்கான புடவை  முறைகள்

பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.

அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.

கொஞ்சம் பருமனானவர்களுக்கு  மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்..

பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.

பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.

உயரம் குறைவான தோழிளுக்கு  புடவை முறைகள்

கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.

டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு. தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது. காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.

கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள உடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.
சாய்வான கோடுகள் உள்ள ஊடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.

இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லைட் வயலட், வெளிர் நீலத்தில் பூக்கள் இதெல்லாம் ஓகே.

ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.

சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.

குண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்த வேண்டாம். மேலும் குண்டாகக் காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும்…

_DSC4454l

புடவைகளை எப்படி பாதுகாப்பது?

ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்…

விலை உயர்ந்த புடவையோ, வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும். விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் ஃபால்ஸ் தைத்து அணியவும். இதனால் புடவையின் ஓரங்கள் பாதுகாக்கப்படும். அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை, கறைகளை ஏற்படுத்தக் கூடும்.

சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.

விலை உயர்ந்த உடைகளை வைக்கும் வார்ட்ரோபில் பூச்சிகளை விரட்ட ஒரு துணியில் ஓடோனில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது வார்ட்ரோபின் வாசனையை தரும். ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாகிறது. பர்ஃப்யூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போகவும் வாய்ப்புண்டு.

டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே, நூல்கண்டு போல சுற்றிதான் வைக்க வேண்டும்.

ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவைகளை வெளளை காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் உருண்டகளைப் பயன்படுத்த வேண்டாம்.

உடையின் மேல் வாசனை திரவியங்களையும் தெளிக்கக் கூடாது. அது புடவையில்  கறை உண்டாக்கும்.

காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும்.
அதே போல நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக்  கூடாது.

ஷிபான் புடவைகளை ஹாங்கரில்தான் மாட்ட வேண்டும்.

நூல் மற்றும் சம்கி வேலைப்பாடு புடவைகளை சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசி காய வைக்கலாம்.

சில நேரம் ஜாக்கெட்டின் உட்புறத்தில் வியர்வை கரை படியும். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து  குறிப்பிட்டப் பகுதியில் துடைத்தால் கறை மறையும்.

புடவையின் நிறம் மங்கினால் மறுபடியும் டை செய்து கொள்ளலாம்.
பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.

இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்..

பால் நிலவு   
பருத்தியை நூலாக்கி…
விண்ணில்  
தறி செய்து ..
வானவில்லின் 
வண்ணம் கொண்டு…
ஆதவன்  சாயம் 
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும் 
நெய்தெடுக்க…

நட்சத்திரமாக ஜொலிக்கிறது 
எனது சேலை!

 

– ப்ரியா கங்காதரன்

v1படங்கள்: சுந்தரி சில்க்ஸ்

தினம் தினம் தந்தையர் தினம்

father

ஒவ்வொரு தந்தைக்குள்ளும்

ஒரு மகன்

ஒவ்வொரு மகனுக்குள்ளும்

ஒரு தந்தை

தந்தையல்ல மகன்

தந்தையினால் மகன்

அதே மண்தான்

தாவரம் வேறு

அதே கடல்தான்

அலை வேறு

அதே சூரியன்தான்

கிரணம் வேறு

அதே காற்றுதான்

மூச்சு வேறு

அதே ஆகாயம்தான்

அண்டம் வேறு

அணுவுக்குள் திணிந்த உயிர்ச்சங்கிலியை

உடல் மாற்றி

மூலவித்தின் முடிச்சவிழ்க்கும்

முன்மனிதன்

தாயின் கருப்பைக்கு உயிர்தானம் தந்து

தந்தையாகிறான்

தாயினும் சிறந்து.

  • நா.வே.அருள்

Image courtesy: http://ngm.nationalgeographic.com