ப்ரியங்களுடன் ப்ரியா–20

குளிர்

winter2..

நீ…நான்…

பின் நமக்கான குளிர் …

நீயும் நனைய நானும் நனைய 

நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து

நடுங்கியது குளிர் ..

மழை குளிரை  மட்டும் கொணர்வதில்லை

சில நேரங்களில் காதலையும் …

குளிர் உன் அருகாமையில்

அருமையாகவும்

தூரத்தில் அவஸ்தையாகவும் ..

சிறுமழை, பெருமழை

எதுவும் குளிரை  மட்டும் 

கொண்டுவருவதில்லை

உன் நினைவுகளையும் சேர்த்தே ..

நீ மழையாக

நான் துளியாக

மெல்ல பொழியட்டும்

குளிர் சாரல் …

நம் உலகில்

நான்

நீ

பின், நமக்கான குளிர்…

குளிர் காலம்… உடலின் உட்புற செல்களையும் உறைய வைக்கும் குளிரையும்,, நெருப்பில்லாமலேயே புகைய வைக்கும் பனியையும்   சூழ்ந்து கொண்டு, இந்த பருவத்திற்கே உரிய அழகுடன் மிளிரும் காலம்… ஏழைகளும்  இலவசமாக ஏசியை அனுபவிக்கட்டும் என பெருந்தன்மை காட்டும் இயற்கை.. பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் பழையகாலத்தைப் போல முன்பனி கொட்டத் தொடங்கி இருக்கிறது. குளிர்காலம் என்றால் என்ன என்பதே மறந்து போய் விட்ட போது, காலம் தான் இன்னும் இருப்பதை இப்போது உணர்த்தி இருக்கிறது..குளிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும்…

.

என் சிறு வயதில் குளிர்காலத்தில் காலையில் எழுந்திருக்கவே பிடிக்காது.. அதிலும்  படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே, சூடான காப்பியின் நறுமணத்துடன் கண்ணை மூடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடிக்கும் சுகமே தனிதான்..காப்பியை குடித்து விட்டு மறுபடியும், கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும்.. யாராவது எழுப்பினால் நேரே செல்வது சமையலறைதான்.. பாட்டி வீட்டில் விறகடுப்புதான்.. அடுப்பின் முன்னால் அமர்ந்து கொண்டு, ஊதுகுழலால் நெருப்பை என்று ஊதிவிட்டு, லேசாக எழும் புகையை சுவாசித்துக்கொண்டே, உள்ளங்கைகளை நெருப்பின் முன்னர் நீட்டி குளிர் காய்வது மிகவும் பிடிக்கும்.

வீட்டின் வெளியில் வந்து பேசும் போது, புகைபிடிக்காமலே எல்லோருடைய வாயிலிருந்தும் புகை வருவதை பார்க்க  வேடிக்கையாக இருக்கும். வெறும் விரல்களை வாயில் வைத்து, புகை பிடிப்பதைப்போன்று  அக்கா,, அண்ணன் களுடன் சேர்ந்து செய்ததும் உண்டு.

கடவுளின் தேசத்தில்  நானிருந்த வீட்டின் பின் புறத்தில் பலா மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்து இருக்கும், சுற்றிலும் செடிகள் இருந்தாலும்  அந்த  மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து கம்பிரமாய் இருக்கும் ,, குளிர் காலங்களில் பாட்டி பேச்சை கேட்க்காமல் ஆட்டம் போட்டு திட்டு வாங்கி பலா  மரத்தடியில்   உக்காந்து அதோட இலையை கன்னத்தில் வைத்து உரசும் போது சவரம் செய்யாத அப்பாவின் 5 நாள் தாடை  முடியின் சொரசொரப்பும் கத கதப்பும் எனக்கு கிடைக்கும் ..   அந்த மரத்தின் கீழே வந்து உட்கார்ந்தவுடன் எங்கிருந்தோ வந்து குதித்து என் மனத்தை வானத்தில் மிதக்கும் மேகக்கூட்டங்களைப் போல இலேசாக்கி எல்லையற்ற கற்பனைகளுக்கூடாக எட்டமுடியாத உலகங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றுவிடும் ..

குளிர் அதிகமாக இருக்கும்  நாட்களில், வைக்கோல்போரை கொஞ்சம் அள்ளிக்கொண்டு வந்து போட்டு . வைக்கோல் போரைக்கொளுத்தி, அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக வைக்கோல் போரை எரித்து குளிர்காய்ந்ததையும் மறக்கத்தான் முடியுமா..? உள்ளங்கைகளை பரபரவென தேய்த்துக்கொண்டே, நெருப்பில் கை வைப்பதும், பின்னர் அப்படியே கன்னத்தில் வைத்து குளிர்காய்வதும் குளிருக்கு  எவ்வளவு இதமாக இருக்கும் தெரியுமா..?

நம் ஊரில் எப்பொழுதும் வெயில் காலம் . மழைக் காலம், குளிர் காலம் என்று காலநிலை மாறி,மாறி வந்தாலும், பெரும்பாலான நாட்கள் வெய்யிலிலும், வியர்வையிலும் தான்.. குளிர்காலம்… மனதுக்கும் உடலுக்கும் குளிரூட்டக் கூடிய காலம் தான். இதோ குளிர்காலம் தொடங்கிவிட்டது…ஆனாலும்,பனிக்காலம் தொடங்கும் போதே நமது தலை முதல் கால் வரை ஒவ்வொருவிதமான தொல்லைகள் ஏற்படுகின்றது.கொஞ்சம் கவனமாக இருந்தால் எந்தவித பிரச்சனையும் இன்றி பனிக்காலத்தையும் ரசிக்கலாம்.

winter1

குளிர்காலத்தை சமாளிப்பது எப்படி :

குளிர் காலத்தில் நாம் உண்ணும் உணவு நிறைய ஊட்டச்சத்து நிரம்பியவையாக இருக்கவேண்டும்.

இதன் மூலம், குளிர் காலங்களில் ஏற்படும் ஜல தோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக உடல்வளத்தை பெறலாம். குளிர்காலம் தொடங்கி விட்டதால், அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய நேரம் இது.. கம்பளிகளையும், ஸ்வெட்டர்களையும் எடுத்து தயாராக வைத்திருங்கள். வெளியே பனியில் செல்ல நேர்ந்தால் முக்கியமாய் குழந்தைகளுக்கு காதுகளை மூடும் குரங்குக்குல்லா போட வேண்டும். பெரியவர்கள் மப்ளர் கட்டிக் கொள்ளலாம். தலை காது வழியே பனி விரைவில் உடலுக்குள் சென்று பிரட்சனை தரும். ஆகவே இப்படிச் செய்வது வரும்முன் காப்பது போலாகும்..

.

பனிக்கால பராமரிப்பு:-

இந்த குளிர்காலத்தில் சருமமும் தலைமுடியையும் வறண்டு போகச் செய்யும். பனிக்காலம் வந்து விட்டாலே உடலில் ஒரு வறட்சித் தன்மையும் வந்து விடுகிறது. சருமம் வறண்டு போகாமல் இருக்க கிரீம்கள் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன்பாக இலேசாக எண்ணை தடவிக் கொண்டு குளித்தால் குளித்த பின் தோலில் வறட்சியால் வரும் சுருக்கங்கள் தவிர்க்கப்படும்.

சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறும், சிறிதளவு தேனும் கலந்து குடிக்க புத்துணர்ச்சியாய் இருக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தின் உள்சூடு பாதுகாக்கபடும். கால்பாதங்கள் வெடித்து விடுவது பனிக்காலங்களில் சகஜம். இதற்கு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைத்து நீரில் உப்பு சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து. 15 நிமிஷம் கழித்து ப்யூமிக்ஸ் கல்லில் நன்கு தேய்க்கவும். பிறகு பாதங்களை அழுந்தத் துடைத்து லேசாக க்ரீம் தடவவும். பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் நல்லது அது வாசிலைனுக்கு சமம். தோலுக்கு சிறந்த பாதுகாப்பை தரும்.

உதடுகளுக்கு அவ்வப்போது சிறிது வெண்ணை பூசவும். வாசிலைன் அல்லது உதடுகளுக்கென்றே உள்ள

பிரத்தியேகக் க்ரீம்களையும் பயன்படுத்தலாம்.

பாதாம்

பாதாம் பருப்பு  பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.  இது சர்க்கரை நோய்க்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும். வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்திற்கும் சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவாகும்.

தேன்

இந்த குளிர்காலங்களில்  தேனை சேர்த்து கொள்ளுவது நல்லது . இது ஜீரண சக்தியை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

ஒமேகா 3

கொழுப்பு அமிலங்கள் இந்த ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்த ஒன்றாகும். மீன்களில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது குளிர்காலங்களில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவும்

இதில் அதிக அளவில் ஜிங்க் நிறைந்துள்ளதால் உங்கள் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். இந்த வெள்ளை ரத்த அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் தான் நாம் பலவகை நோய்களிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றோம்.

இஞ்சி

அதிக மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.

வேர்க்கடலை

குளிர்காலங்களில் பிராண வாயுவின் அளவு குறைவாக இருக்கும். அதனால், இந்த குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும், இந்த வேர்க்கடலைகளை உணவில் சேர்த்துக் கொள்லலாம். இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுவகைகளில் ஒன்றாகும்.

winter4

குளிர் காலத்தில் நோய்களைத் தடுக்கும் முறைகள்

எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கி விடலாம். ஆனால் மழையையும், குளிரையும் தாங்க முடியாது. குளிர்காலத்தில் தான் உடல் பலவீனமானவர்களுக்கு பாதிப்புகள் வரும்.

தும்மல், அலர்ஜி, ஆஸ்துமா, தோல் பாதிப்பு, ரத்த அழுத்தம், காலில் வெடிப்பு, காய்ச்சல், கை-கால் மூட்டு வலி, முழங்கால் வலி என அனைத்து விதமான உடல் கோளாறுகளும் எட்டிப் பார்க்கும். குறிப்பாக ஆஸ்துமாவுக்கு குளிர்காலம் தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக் குழாய் சுருங்கி மூச்சு விட முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும்.

அவர்கள் கோடை காலத்தைப் போல் நினைத்து வெளியில் சென்று வர முடியாது. டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் எச்சரிக்கையாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் இதய பாதிப்பு உள்ளவர்களையும் குளிர்காலம் சிரமப்படுத்தும். காரணம் குளிர் காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி விடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குளிர்காலத்தில், பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். ரத்தத்தில் முக்கியமாக உள்ள கார்டிசால் சுரப்பது குறையும்.

வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும். இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது. குளிர் காலத்தில், அதிகாலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால் ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும் மாறுபடும். அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவு குறையும்.

அந்த காலகட்டத்தில், வைரஸ் தொற்று நோய் மூலம் இதய பாதிப்புள்ளவர்களுக்கு பிரச்சினை வரலாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக, டாக்கடர் சொல்படி நடப்பதே நல்லது. அறுபது வயதை கடந்தவர்கள் குளிர் காலத்தில்அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை `மூட்டை’ கட்டி வைக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக்கூடாது.

அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக் கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் குளிரை தடுக்க முடியாது. ஆனால், இதய பாதிப்பை தவிர்க்க சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வெயில் வந்தவுடன் செய்யலாம். காய்கறிகள், பழங்கள், அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம். அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும். பெரும்பாலானவர் களுக்கு தூங்கி எழுந்ததும் கை-கால்களில் மூட்டு வலி இருக்கும். அவர்கள் எழுந்ததும் சுடு நீரில் கை, கால்களை வைக்க வேண்டும். படுக்கை அறையின் வெப்ப நிலை சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

குளிரை தாங்கும், போர்வை, கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை உடலில் தேய்க்கலாம். குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால் ஏற்படும் ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பசை இழப்பை ஈடு செய்ய உதவும்.

மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும். வெதுவெதுப்பான சுடுநீரை பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் பெருபாலா னவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை உதடு வெடிப்பு, இதற்கு, பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண் ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.

தோல் வறட்சி உள்ளவர் கள் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம். கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் யூரியா மற்றும் ஆண்டிபயாட்டிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். காலுறைகளை தவறாது இரவு முழுவதும் அணிந்தால் கால்வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும். உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் போன்றவைகளை அதிகமாக சாப்பிடலாம்.

தேவைப்படுவோருக்கு ஏ வைட்டமின் கலந்த மாத்திரைகளும் கொடுக்க வேண்டும். குளிர் சிறுவர்கள், குழந்தைகளையும் பாதிக்கும். அவர்களுக்கு ஐஸ்கிரீம், மற்றும் குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்க கூடாது. குழந்தைகள் தூங்கும் போது கைகள், கால்களில் ஷாக்ஸ் அணிந்து கொள்ளச் செயலாம்.

குளிர் தாங்கும் ஆடைகளையும், படுக்கைகளையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் தும்மல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவதை தடுக்கலாம். குளிர்காலத்தில் நம் உடல் நலனை பாதுகாக்க பொதுவான சில வழிமுறைகள்:- வெளியில் போகும் போது காதுகளை ஸ்கார்ப் அல்லது காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெது வெதுப் பாகவும் உலர்ந்தும் இருக்கும்.

தொற்று ஏற்பட வழியில்லை. சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுவதை தடுக்க பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். குளிர் காலத்தில் வயதான வர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். உங்கள் உடம்பை ஸ்வெட்டர் போட்டு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ளவும். சளியை வெளியேற்றுவதற்காக அடிக்கடி மூக்கை வேகமாக சிந்த வேண்டாம்.

இப்படி செய்வது காதுகளை கடுமையாக பாதிக்கும். சளித்தொற்று காதுகளை தாக்கும். குளிர் காலத்தில் நீச்சல் வேண்டாம். குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். மருத்துவரின் வழிகாட்டு தல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும். சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும்.

குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும். அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் காது, மூக்கு போன்றவற்றில் குளிர்காற்று உட்புகாமல் இருக்க தகுந்த கவசங்கள் அணிந்து கொண்டு செல்லலாம். இவற்றையெல்லாம் கடைப்பிடித்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.

இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.

இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்..

winter5

நீ…நான்…

பின் நமக்கான குளிர் …

நீயும் நனைய நானும் நனைய

நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து

நடுங்கியது குளிர் ..

மழை குளிரை  மட்டும் கொணர்வதில்லை

சில நேரங்களில் காதலையும் …

குளிர் உன் அருகாமையில்

அருமையாகவும்

தூரத்தில் அவஸ்தையாகவும் ..

சிறுமழை , பெருமழை

எதுவும் குளிரை  மட்டும்

கொண்டுவருவதில்லை

உன் நினைவுகளையும் சேர்த்தே ..

நீ மழையாக

நான் துளியாக

மெல்ல பொழியட்டும்

குளிர் சாரல் …

நம் உலகில்

நான்

நீ

பின், நமக்கான குளிர்

– ப்ரியா கங்காதரன்

IMG_20151029_123940

ப்ரியங்களுடன் ப்ரியா–19

மழை போலவே வாழ்க்கையும்!

rain4

பல துளிகள் நிறைந்த

மழை போலவே வாழ்க்கையும்…

கொண்டாடப்படுவதுமாக
சபிக்கபடுவதுமாக
மாறிய மழையை போலவே …

யாருமில்லா பெருவெளியில்
ஒற்றை மழைத் துளி
ஒரே ஒரு பூவின்
இதழின் இடைவெளியில்
உட்புகுந்து வெளியேறும் தருணம் போலவே..

இருள் சூழ்ந்த இரவில்
மெல்லிய வெளிச்சக் கீற்றலின் மின்னல்
இருளை வெளியேற்றும்   தருணம் போலவே..

நீல வானத்தின் கருமை மேகங்கள்
மழையின் பெரு சீற்றத்தை தந்து
அடுத்தநாள் வெயில்
முதல் நாளின் மழையை
மறக்க செய்யும் தருணம் போலவே..

ஒவ்வொரு முறையும் மழை
என் முகத்தில் விழுந்து எழுந்து
என் இதழை முத்தமிடும் முயற்சியில்
விலகி செல்லும்  தருணம் போலவே..

வாழ்க்கையும் பல துளிகள் நிறைந்த
மழை போலவே ….

rain3

மழை பற்றிய நினைவுகள் சற்று சின்னதாக இருந்தாலும் மனதைவிட்டு
நீங்காதவை.. எப்போதும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது..

மழை விரும்பாதவரோ ரசிக்காதவரோ இருக்க முடியுமா?

ஒவ்வொருவருக்கும் மழை ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு வயதிலும், மழை ஒவ்வொரு பார்வையை விட்டுச் செல்கிறது.

ப்ரியா குட்டி  மழைல நனையாத .. சளிப்பிடிச்சுக்கும்னு எங்க ஆத்தா ( பாட்டி) சொன்னது தான் எனக்கு இன்றளவும் மழை பற்றிய சிறு வயது நினைவு… நாஞ்சின்னப் பொண்ணா இருந்தப்ப, ஆலங்கட்டி மழை பேஞ்சு எங்க வூட்டு ஓடெல்லாம் உடைஞ்சு போய்ருக்கு னு எங்க ஆத்தா சொன்னப்ப என் தலைல விழுந்தா என்ன ஆகும்..?னு யோசிச்சிருக்கேன்..

கடவுளின் தேசத்தில் தான் என்னோட பால்ய பள்ளி வாழ்க்கை தொடங்கியது .. விழித்திருக்கும் நேரம் முழுதும் மழையும் மழை சாரலும் மட்டுமே காணும் தேசம் என்பதால் இப்போ வரை என்னால மறக்க முடியாது என் பாட்டி எனக்கு முதல் முதலில் வாங்கி தந்த சின்ன குடை ..

இப்போதும் என் கைபையில் எப்போதுமே ஒரு சிறு குடை இருக்கும் ,, அதை விரிக்கும் போதெல்லாம் கேரளா மழை சாரல் நினைவில் விரிவதும் தவிர்க்க முடியாது.

rain1

பருவ மழையை விட வசந்தகாலத்தின் தொடக்கத்தில் பெய்யும் கோடை மழைக்கு  தனி விஷேசம் உண்டு. வெய்யிலின் தாக்கத்தை  குறைக்க பெய்யும் மழை அது.

கோடை காலத்தில் பொதுவாக மாலை அல்லது இரவில்தான் மழை, இடியும் மின்னலுமாய் வானத்தில் தனியாய் ஒரு ராஜாங்கம் அரங்கேறும்..

சில நேரங்களில் ஆலங்கட்டி மழை கூட பெய்யும்.. அதை பொறுக்கி பாட்டிலில் சேகரிப்பது கூட தனி சுவாரஸ்யம்தான்.  மழையில் நனைய வேண்டாம் காய்சல் வரும் என்பவர்கள் கூட  கூட கோடை மழையில் நனைய சம்மதம் சொல்லிவிடுவார்கள்.

rain2

மழை காலமென்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம்.. காளான், ரயில் பூச்சி, மற்றும் தும்பி, எங்க பாட்டியுடன் காளானைப் பிடுங்க,தோட்டத்தில் சுற்றி வருவதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.

காளான் எல்லாரு கண்ணுக்கும் தெரியாதுனு சொல்லுவாங்க எங்க ஆத்தா.. அதைப் பிடிங்கும் பொழுது வரும் மண் வாசனைக்கு எதுவும் ஈடாகாது.

எங்கள் தோட்டத்தில் மழைக்காலத்தில் தும்பிக்கும்,ரயில் பூச்சிக்கும் பஞ்சமே இருந்ததில்லை. தும்பியின் வாலைப் பிடித்து விளையாட பிடிக்கும்..

சிறு வயதில் பூச்சிகளுடன் விளையாடியது பதின்ம வயதை அடைந்தவுடன் சலித்துவிடுகிறது. ஆனால் தும்பியும் ரயில் பூச்சியும் அப்படியே தான் இருக்கின்றன. கொஞ்சம் வயதாக வயதாக மழை மீதிருந்த பயம் மறைந்து மழையில் நனைத்து ரசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.
rain6

மனசு வளர வளர மழை மீதான காதல் அதிகம் ஆகிடுச்சு.

ஒஹோ மேகம் வந்ததோ ஏதோ தாகம் தந்தடோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்
பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ

இந்த பாடல் வெளியான நாளில் இருந்து இப்போ வரைக்கும் மழை வரப்ப ஒரு குடை எடுத்து போயிட்டு ரேவதி ஆடியது போல

மழையில் ஆட மனசு துள்ளுவது எனக்கு மட்டுமல்ல .. இதை வாசிக்கும் எல்லோருக்குமே என்பது உண்மையே ..

எங்கள் ஊரில் மழை பெய்வதை விட மண் வாசனையும் மழைச் சாரலும் வரும் நாட்களே அதிகம். வருடத்தில் பாதி நாட்கள் மழை நாட்களே பாலக்காடு, பொள்ளாச்சி வரை பெய்யும் மழை அதீத காற்றினால் வலுவிழந்து ஈரக்காற்று மட்டுமே வரும்.. விசுவிசுவென வீசும் ஈரக்காற்றில் வாய்க்கால் மேட்டிலும் ஆற்றோரத்திலும் சுற்றி திரிந்த நாட்களை நினைத்தால் இன்றும் இதமாக இருக்கிறது…

ஆற்றில் குளிக்கும் பொழுது மழையில் நனைந்திருக்கிறீர்களா?

அது ஒரு அற்புதமான அனுபவம். ஆற்றின் நீரோட்டம் சூடாகக் கீழே செல்ல குளுகுளுவென மழை மேலிருந்து விழ என ஆறுகளிலும் வாய்க்கால்களில் மட்டுமே இது போன்ற அனுபவத்தைப் பெற முடியும். எத்தனை கோடிகளைச் செலவு செய்தாலும் செயற்கையாக இந்த அனுபவத்தைத் தர முடியாது. அது தான் இயற்கையின் வரம்.

கிராமங்களில் இது போன்ற நினைவுகளென்றால் கோவை போன்ற நகரங்களில் வேறு மாதிரியான நினைவுகள்..

மழைக்காலம் எனக்கு வேறு மாதிரி அனுபவங்களைத் தந்தது. காலையில் பள்ளிக்கு செல்லும் பொழுது, மழைக்காலத்தில் மழையின் இன்னொரு முகத்தைக் காண முடிந்தது.

சாலையெங்கும் தேங்கிக் கிடிக்கும் தண்ணிரும், ஈவு இரக்கமின்றி சேற்றை வாரி இரைக்கும் வாகனங்களும், கூடவே வந்துவிடும் கொசுக்களும் என மழையை ஒரு திகிலுடன் எதிர்நோக்குவோர் தான் அதிகம். மேட்டுப்பாங்கான இடங்கள் என்றால் கூட பரவாயில்லை தாழ்வான பகுதிகளென்றால் படகுகளிலும் முழங்கால் அளவு தண்ணீரிலும் செல்லும் நிலையில் உள்ளதை என்ன வென்று சொல்ல? இது போன்ற இடங்களில் வாழ்வோருக்கு மழைக்காலம் என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்திருக்கும்? எங்கே வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடுமோ என்றும், சட்டையில் சேறடிக்காமல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கும் பொழுது எப்படி மழையை ரசிக்க முடியும்?

வள்ளுவர் முதல் மழையையும் மழைக்காலத்தையும் போற்றாதவர்களே இல்லையெனலாம். சிறு வயது முதலே மழையுடன் உறவாடிய எனக்கு கோவையில் கிடைத்த அனுபவம் வருத்தத்தை ஏற்படுத்தியது. பல கோடி ஆண்டுகளாக மழையை ரசித்த நாம் மழையை ரசிக்க முடியாமல் போவது எதனால்?

யார் காரணம்?

நாம் தான் காரணம் என்றால் ஏற்றுக் கொள்ளவோமா?

நம் வீட்டு மாடியில் விழும் மழையை நம் வீட்டில் சேகரிக்கும் மனம் கூட நமக்கு இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தமானது. வீட்டை உயர்த்திக் கட்டுவதும், மழை பெய்ய ஆரம்பித்த 10 நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பதும் எப்போதும் மழை காலத்தில் நிகழ்வது தான் ..

ஒன்று மட்டும் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ..

மூன்றாம் உலக போர் என்று ஒன்று உருவானால் அது நிச்சயம் தண்ணிர்க்காக மட்டுமே என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்று ஆராய்ச்சி யாளர்கள் சொல்கிறார்கள் …

நமக்கு கடவுள் தரும் தண்ணிரை சேமிக்காமல் வீணாகி விடுவது நாம் கடவுளுக்கு செய்யும் துரோகம் என்பதில் யாருக்காவது மாற்று கருத்து இருக்கா ?

ஆறு ..குளம் ,, ஏரி .. இப்படி எல்லா நீர்நிலை தேக்கமும் கான்கிரட் கட்டிடமா மாறி போனால் நம்மோட எதிர்காலம் .. நம்ம சந்ததிகள் எதிர்காலம் என்னவாகும் ??

சென்ற மாதம் காரைக்குடி செட்டிநாடு பகுதிக்கு சுற்றுலா  போனப்ப எங்க குடும்ப நண்பர்  மூலமா செட்டிநாடு நகரத்தார் வீடுகளை காண சென்றோம் ..

நாம எல்லோரும் அவங்க வீடுகளின் பிரமாண்டம் ,, கலைநயம் மட்டுமே பார்க்கிறோம் .. ஆனா அவங்க எவ்வளவு தொலைநோக்கு பார்வையோட ஒவ்வொரு விசயமும் பார்த்து பார்த்து கட்டி இருக்காங்க என்று நண்பர் விளக்கி சொல்லும் போது தான் புரிந்தது ..

பல ஆண்டுகளுக்கு முன்பே செட்டிநாடுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிக்கவென்று சிறப்பான அமைப்புகள் வைத்து கட்டப்பட்டிருக்கின்றன.

இப்போ மழைநீர் சேகரிப்புக்கு சில வழிமுறைகளை காண்போம் ..

2 முக்கியமான முறைகளில் மழை நீரை சேமிக்கலாம்.. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல்..

வழிந்தோடும் மழைநீரை சேமித்தல் என்பது பராம்பரிய முறையாகும். நிலத்தடித் தொட்டிகள், குட்டைகள், தடுப்பணைகள் போன்றவை இதில் அடங்கும் நிலத்தடிநீர் மட்டத்தை உயிர்த்துதல் என்பது புதிய முறையாகும்.

நிலத்தடி நீர்வளம் குறித்த சில உண்மைகள்..
ஒரு கிணறு என்பது தண்ணீரை சேமிக்கும் இடமல்ல. கிணறுகள், நிலத்தின் மேல் பகுதியை,  நிலங்களுக்கடியிலுள்ள நீருற்றுகளுடன் இணைக்கின்றன. நிலத்தடி நீர்வளத்தை பொறுத்து, மழைகாலங்களில், கிணறுகளில் நீர் மட்டம் உயரும் அல்லது தாழும்.

மழை பெய்வது நின்று விட்டால், கிணற்றுக்கு நிலத்தடியில் உள்ள நீரூற்றுகளிலிருந்து ஓரளவிற்கு நீர் கிடைக்கும்.

வற்றிவிட்ட ஆழ்குழாய் கிணறுகளை, நிலத்தடி நீர் ஊற பயன்படுத்தலாம். வற்றிவிட்ட கிணற்றின் மேல் பகுதியில், ஆழ்குழாய் வடிநீர் குளங்களை அமைத்தால், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உண்டு.

மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படம், வீடியோ படங்கள்

மழைநீர் சேகரிப்பு  குறித்த குறும்படம், வீடியோ படங்கள் பார்க்க, http://in.youtube.com/profile_play_list?user=indiawaterportal என்ற இணையதளத்தை உபயோகியுங்கள்/பாருங்கள்.

மழைநீர் சேகரிப்பின் நன்மைகள்:-

நிலத்தடியிலிருந்து கிடைக்கும் நீருற்று மற்றும் அரசு வழங்கும் தினசரி குடிநீருடன், மழைநீரும் உபயோகப்படும்

கிடைக்கும் மழைநீரை பயன்படுத்தி கட்டிடம் கட்டலாம், விவசாயமும் செய்யலாம்.

அதிக தரமான நீர். எவ்வித நச்சுக்களோ, ரசாயனப் பொருட்களோ கலக்காத சுத்தமான நீர் இந்த மழைநீர்.

இதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு..

மழை நீரை சேகரிப்போம்
மண்ணில் வாழும்
உயிரினம்
மரித்து போகாமலிருக்க

IMG-20151107-WA0018

ஒவ்வொரு மழைத்துளிக்குள்ளும்
ஓர் உயிர் ஒளிந்திருக்கிறது

அது
நீங்கள் நேசிக்கும்
உயிராகவும் இருக்கலாம்…

பல துளிகள் நிறைந்த
மழை போலவே வாழ்க்கையும் ..
கொண்டாடப்படுவதுமாக
சபிக்கபடுவதுமாக 
மாறிய மழையை போலவே …

யாருமில்லா பெருவெளியில்
ஒற்றை மழைத் துளி
ஒரே ஒரு பூவின்
இதழின் இடைவெளியில்
உட்புகுந்து வெளியேறும் தருணம் போலவே..

இருள் சூழ்ந்த இரவில்
மெல்லிய வெளிச்சக் கீற்றலின் மின்னல்
இருளை வெளியேற்றும்   தருணம் போலவே..

நீல வானத்தின் கருமை மேகங்கள்
மழையின் பெரு சீற்றத்தை தந்து
அடுத்தநாள் வெயில்
முதல் நாளின் மழையை
மறக்க செய்யும் தருணம் போலவே.. 

ஒவ்வொரு முறையும் மழை
என் முகத்தில் விழுந்து எழுந்து
என் இதழை முத்தமிடும் முயற்சியில்
விலகி செல்லும்  தருணம் போலவே..

வாழ்க்கையும் பல துளிகள் நிறைந்த
மழை போலவே ….

-ப்ரியா கங்கா தரன்

ப்ரியங்களுடன் ப்ரியா–18

மழை தீபாவளி… மழலை தீபாவளி!

d1

மழலையாய்
புத்தாடை அணிந்து
அப்பாவின் கைப்பிடித்து
சாட்டை சுற்றிய 
மத்தாப்பூ தீபாவளி.,!

இளம் வயதில் 
அதிகாலை குளித்து
தன் விருப்பமான உடை அணிந்து
தங்கைக்கு தராமல் 
பட்டாம்பூச்சி  பிடிக்கிற பாவனையில் 
பட்டாசு பற்ற வைத்து தானே வெடித்து 
வேகமாய் ஓடிய தித்திப்பு தீபாவளி..!

கொட்டும் மழையில்
நனைந்தும் நனையாமலும் 
முடிந்த வரை வெடித்து தீர்த்த
மழை தீபாவளி..!

ஆயிரங் கனவுகளோடு அடியெடுத்து வைத்து 
ஆயிரத்தை தாண்டிய ஆழ்மனக் கனவுகளையும் கூட
அழகாய் நிறைவேற்றும் ஆருயிரானவன் 
உடன் இருக்க தலை தீபாவளி..!

தாய்மை தந்து என்னை முழுமை செய்த 
என் முழுமதி வைஷுவின்  முதல் தீபாவளி  …

எனக்கொரு அன்னையாய் மாறிப்போன 
என் மகள் இன்று வெடி வெடிக்க பாதுகாப்பாய் நின்று
கடந்த கால  நினைவுகளை அசை போடும்
ஆனந்த தீபாவளியாய் …

உறவெல்லாம் ஒன்று கூடி 
பிரிவெல்லாம் வெடித்து சிதற 
ஒளி சிந்தும்  சுடரின் நடனம்
தொடரட்டும்  தீபங்களில் ….

என் மகள் இன்று வெடி வெடிக்க பாதுகாப்பாய் நின்று
கடந்த கால  நினைவுகளை அசை போடும்
ஆனந்த தீபாவளியாய் …

உறவெல்லாம் ஒன்று கூடி 
பிரிவெல்லாம் வெடித்து சிதற 
ஒளி சிந்தும்  சுடரின் நடனம்
தொடரட்டும்  தீபங்களில் ….

d3

தீபம் என்றால் விளக்கு, ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்துக்  ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசியன்று தீபாவளியாக   கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்னும் இத்தெய்விகப் பண்டிகை, தீபாலங்காரப் பண்டிகையாக மனைதோறும் மங்களகரமாகக் கொண்டாடப்படுகிறது.

நாகரிக உலகின் நவீன கோமாளிகளாய் நாம் மாறிய பின்னர் நாம் பண்டிகைகள் கொண்டாடும் முறைகளே நிறைய மாறி விட்டன ..

எனக்கு தெரிஞ்சு எங்க வீடுகளில் தீபாவளி என்றால் அதோட கொண்டாட்டங்கள் எல்லாம் ஒரு மாதம் முன்னேரே ஆரம்பிச்சுரும் ..

பாட்டி ,,  அம்மா ,, பெரியம்மா ,, சித்தி ,, அத்தைகள் .. என எல்லோருமே சேர்ந்து ஒரு மாசம் முன்னாடியே பலகார தயாரிப்புகளில் ஈடுபட

வீடே களை கட்டிவிடும் … பள்ளிகூடத்தில் எடுக்க போற துணிகளை பற்றிய கற்பனைகளும் வெடிக்க போகும் வெடிகளை பற்றிய சிந்தையுமே

ஒரு மாதமாய் மனதை கொள்ளை கொள்ளும் ,,,

துணிக்கடைக்கு போறதே ஒரு திருவிழா போலத்தான் எங்களுக்கெல்லாம் … அம்மா இதை எடுத்துக்கவா ,,அப்பா இது நல்லா இருக்கா ? சித்தி இங்கே பாருங்களேன் என்று அங்கையே ஒரு தீப விழா எங்க கண்களுக்குள் நடந்து முடிஞ்சிரும் …

தீபாவளி நெருங்க நெருங்க அதும் முத நாள் இரவில் தூங்காம முழிச்சுவாசலில் அழகாய் கோலமிட்டு  எப்போடா விடியும் என்று விடிஞ்சும் விடியாம நம்ம தெருவில் நாமதான் முத வெடியை வெடிச்சு தீபாவளியை தொடங்கணும் என்று தெருவுக்கு ஓடுவதும் ஒரு சுகம்தான் …

அப்புறம் சுத்தமான தண்ணீரை எடுத்துக் அண்டாவில்  நிரப்பி, சந்தன, குங்கும அட்சதைகளாலும் மலர் களாலும் அலங்கரித்து

பிறகு ஆல், அரசு, புரசு, அத்தி, மாவலிங்கம் ஆகிய ஐந்து மரங்களின் பட்டைகளை யும் தண்ணீரில் சேர்த்துக் கலந்து பாட்டி வெந்நீர் தயார் செய்ய

வீட்டில் உள்ள எங்க எல்லோருக்கும்  நாயுருவிச் செடியினால்  தலையை மூன்று முறை சுற்றி, பிறரது காலடி படாத இடத் தில் அந்தச் செடியினை அப்பா எறிந்துவிட

( இதற்குக் காரணம் என்ன வென்றால், ஒரு சமயம் வேத புருஷனான பிரம்ம தேவனிடம் இருந்து அரக்கர்கள் வேதத்தைத் திருடிச் செல்ல எண்ணினார்கள். உடனே நான்முகன் “அபாமார்க்கம்’ என்று அழைக்கப்படும் நாயுருவிச் செடிகளாக மாறித் தன்னை மறைத்துக் கொண்டார். ஹரி நாராயணன் தோன்றி அரக்கர்களைக் கபடமாக வதம் செய்தார். தீபாவளி புண்ணிய தினத்தில்தான் மேற்படி நிகழ்ச்சியும் நடைபெற்றது. வேத புருஷனையே ரட்சித்த காரணத்தால்தான் நாயுருவிச் செடியை தீபாவளியன்று அதிகாலையில் நாமும் நமது ரட்சையாகப் பயன்படுத்துகிறோம்

இவ்விதம் செய்வதால் நமக்கு ஆத்ம ரக்ஷையும் ஐஸ்வர்யமும் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன )

d2

பிறகு தீபம் ஏற்றி, தைலம், வாசனாதி திரவியப் பொடிகள், லேகியம், புத்தாடைகள், ஆபரணங்கள் முதலியவற்றை பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். கடவுளுக்கு  பூமாலை சார்த்தி நிவேதனம், கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு எண்ணெய் தேய்த்துக்கொண்டு, வெந்நீர் கலசத்தை ஒரு பலகையில் வைத்து, மலர்களை சமர்ப்பித்து கைகளைக் கூப்பியபடி கீழ்க்கண்ட சுலோகத் தைக் சொல்லுவோம்

“விஷ்ணோ: பாத ப்ரஸூதாஸி வைஷ்ணவீ விஷ்ணு தேவதா
த்ராஹி நஸ்த்வேனஸஸ் தஸ்மாத் ஆஜன்ம மரணாந்திகாத்
திஸ்ர: கோட்யோர்த்த கோடீச தீர்த்தானாம் வாயுரப்ரவீத்
திவி புவ்யந்தரிக்ஷே ச தானிமே ஸந்து ஜாஹ்னவி’.

இதன் பொருளாவது, “ஹே மாதா! கங்கா தேவி! நீ விஷ்ணுவின் பாதத்தில் தோன்றியதால் வைஷ்ணவியாகவும், விஷ்ணுவை அதிதேவதை யாக உடையவளாகவும் இருக்கிறாய். பிறப்பு முதல் மரணம் வரை உள்ள பாவங்களிலிருந்து எங்களைக் காத்தருள வேண்டும். தேவலோகம், பூமி, அந்தரிக்ஷம் ஆகிய எல்லாவற்றிலுமாக மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ள தாக வாயு பகவான் கூறியுள்ளார். அவை எல்லாம் தங்கள் கருணையால் எனக்காக இங்கு வந்து அருள வேண்டும்’ என்பதாம்

இதன் பிறகு ஆரம்பம் ஆகும் பாருங்க எங்களோட கொண்டாட்டம் எல்லாம் , புது ட்ரெஸ் போட்டிட்டு பாட்டி ,, அப்பா அம்மா என் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதமும் தீபாவளி காசும் வாங்கிட்டு ,, தெரிஞ்சவங்க ..சொந்தகாரங்க வீடுங்க எல்லாத்துக்கும் பலகாரம் கொண்டுபோய் குடுத்துட்டு அங்கயும் தரும் பலகாரங்கள் சாப்பிட்டு ஆசிகளை வாங்கிட்டு ,, வெடிகளை அள்ளிகிட்டு போய்ட்டு வெடிச்சு  ,, மறுநாள் தீபாவளி லேகியம் சாப்பிடும் வரை உள்ள அனுபவங்களை இப்போ நினைச்சாலும் நெஞ்சில் தித்திப்பு வருது ,,,

ஆனா இப்போதைய கால கட்டத்தில் தீபாவளி என்பது கடந்து போகும் நாட்களில் ஒரு விடுமுறை தினமாக மாறியதில் மிகவும் வருத்தமே ..

இன்ஸ்டன்ட் பலகாரம் .. ஆன்லைன் துணிகள் .. சம்பிராதய குளியல் … தொடந்து விடுமுறை தின சிறப்பு நிகழ்சிகள் என சுருங்கி போனது நமது கலாச்சாரம் எல்லாமே ..

வாழ்க்கையில் பலவித சோதனைகளும், இன்ப துன்பங்களும் மாறி மாறி வருவதால் நம்ம எல்லோருக்குமே வாழ்க்கை அலுத்துவிடுகிறது. வழிநெடுக நடந்து களைத்துப் போனவன் தாகசாந்தி செய்து சற்றே இளைப்பாறுவது போலத்தான் வருடத்தில் சில ,பண்டிகைகள் என்று மனித குலம் குதூகலித்துக் கொள்கிறது.

வாழ்க்கையில் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்கும், அதே சமயத்தில் ஆன்மிகத்திலும், இறைபக்தியிலும் மனம் ஈடுபடுவதற்காகவுமே பல பண்டிகைகளை நமது ஆன்றோர்களும், சான்றோர்களும் நிர்ணயித்து உள்ளனர். அதை இப்போதெல்லாம் வியாபார யுக்தியில் மட்டுமே பயன்படுத்துவது கொஞ்சம்  கஷ்டமாகதான்  இருக்கிறது..

நம்ம இந்தியாவில் நாம் கொண்டாடும் ஒவ்வொரு விழாவிற்கும் பின்னால் ஒரு வரலாறு இருப்பது இப்போதைய தலைமுறை தெரிந்து கொள்ளாமல் இருப்பது பெரிய தவறு ..

அதை தெரியபடுத்தாமல் நாம் இருப்பது மிக பெரிய தவறு …

நினைச்சாலும் நெஞ்சில் தித்திப்பு வருது ,,,

ஆனா இப்போதைய கால கட்டத்தில் தீபாவளி என்பது கடந்து போகும் நாட்களில் ஒரு விடுமுறை தினமாக மாறியதில் மிகவும் வருத்தமே ..

இன்ஸ்டன்ட் பலகாரம் .. ஆன்லைன் துணிகள் .. சம்பிராதய குளியல் … தொடந்து விடுமுறை தின சிறப்பு நிகழ்சிகள் என சுருங்கி போனது நமது கலாச்சாரம் எல்லாமே ..

வாழ்க்கையில் பலவித சோதனைகளும், இன்ப துன்பங்களும் மாறி மாறி வருவதால் நம்ம எல்லோருக்குமே வாழ்க்கை அலுத்துவிடுகிறது. வழிநெடுக நடந்து களைத்துப் போனவன் தாகசாந்தி செய்து சற்றே இளைப்பாறுவது போலத்தான் வருடத்தில் சில ,பண்டிகைகள் என்று மனித குலம் குதூகலித்துக் கொள்கிறது.

வாழ்க்கையில் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்கும், அதே சமயத்தில் ஆன்மிகத்திலும், இறைபக்தியிலும் மனம் ஈடுபடுவதற்காகவுமே பல பண்டிகைகளை நமது ஆன்றோர்களும், சான்றோர்களும் நிர்ணயித்து உள்ளனர். அதை இப்போதெல்லாம் வியாபார யுக்தியில் மட்டுமே பயன்படுத்துவது கொஞ்சம்  கஷ்டமாகதான்  இருக்கிறது..

நம்ம இந்தியாவில் நாம் கொண்டாடும் ஒவ்வொரு விழாவிற்கும் பின்னால் ஒரு வரலாறு இருப்பது இப்போதைய தலைமுறை தெரிந்து கொள்ளாமல் இருப்பது பெரிய தவறு ..

அதை தெரியபடுத்தாமல் நாம் இருப்பது மிக பெரிய தவறு …

தீபாவளி கொண்டாட  வேறு பல காரணங்களும் உள்ளதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றது..

1. திருப்பாற்கடலை அமிர்தம் பெறுவதற்குக் கடைந்தபொழுது தோன்றியவர் இலட்சுமி. இவர் செல்வத்தைத் தரும் தேவி. விஷ்ணுவின் சத்தியாக அமைந்தவர். இவர் இவ்வாறு திருப்பாற்கடலில் இருந்து இலட்சுமி தோன்றிய நாள் தீபாவளி என்று கூறுவர்.

2. பாண்டவர்கள் வனவாசம் முடிந்து பாரத யுத்தத்தில் வெற்றி பெற்று மீண்டும் தமது அத்தினாபுரம் மீண்ட நாள் தீபாவளி என்று கூறுவர்.

3. விக்கிரமாதித்த மகாராஜா முடி சூடிய நாள் தீபாவளி என்பர்.

4. சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் பரிநிர்வாணம் அடைந்த நாள் தீபாவளி என்று சமணர்கள் கொண்டாடுகின்றார்கள்.

5. சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த சிங் அவர்கள் அவுரங்க சீப் மன்னனுடைய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாள் தீபாவளி என்பர்.

6. இதேபோல இதற்கு முந்திய சீக்கிய குருவான ஹார்கோபிந்த் சிங் அவர்கள் ஜஹாங்கீர் மன்னனுடைய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாள் கி.பி. 1619ம் ஆண்டின் தீபாவளி தினமாகும்.

7. இதேபோல இந்தியாவில் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் கி.பி 1577ம் ஆண்டு தீபாவளி நாளாகும். இவ்வாறு பல காரணங்களுக்காக சீக்கிய மதத்தவர்களும் தீபாவளியைச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தீபாவளிக்காக சீக்கியர்களின் பொற்கோவில் ஒவ்வொரு வருடமும் விளக்குகளால் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்படுவது வழமை.

8. இந்தியாவில் உள்ள பௌத்தர்களும்கூட கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி விளங்குகின்றது.

9. 1999 இல் கத்தோலிக்க மதத்தின் புனித போப்பாண்டவர் இந்தியாவிக்கு விஜயம் செய்தபோது அவர் பிரசங்கம் செய்த தேவாலயம் தீபாவளிப் பண்டிக்கைக்காக தீப அலங்காரங்களால் அலங்கரிக்ப்பட்டிருந்ததுடன் போப்பாண்டவர் நெற்றியில் திலகமிட்டு வரவேற்கப்பட்டார். அவருடைய உரையிலும் போப்பாண்டவர் தீபாவளியைக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

10. வட இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளியை இராமர் வனவாசத்தில் இருந்து மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளாகக் கொண்டாடி அதையே புது வருடப்பிறப்பாகக் கொண்டாடுவர். ஆங்கில புதுவருடம் போலவே இதற்கும் எந்தவிதமான வானியல் கணித விஞ்ஞான அடிப்படையோ ஆதாரமோ அல்லது ஆகம நூல்களின் ஆதாரமோ இல்லை என்பது இங்கு நோக்கத்தக்கது. உண்மையில் இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி நகருக்குத் திரும்பியது சித்திரை மாதத்து வளர்பிறை சஷ்டி நாள் என்றும் அதற்கு அடுத்த நாளான சப்தமியில் அவர் முடி சூடினார் என்றும் வான்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 127ம் சர்க்கம் கூறுகின்றது. இராமர் மீண்டும் நாடு திரும்பிய நாள்தான் புதுவருடப் பிறப்பு என்றால் இது நாம் புதுவருடம் கொண்டாடுகின்ற சித்திரை மாதத்தில்தான் வர வேண்டும்…

அப்படியே வெடி வெடிப்பதை பற்றியும் ஒரு பார்வை பார்த்து விடுவோமா ??

முன்னாடி எல்லாம்  மாடி வீடுகள் அதிகம் இல்லை. திறந்த வெளிகள் நிறைய இருந்தன, அதனால புகை வானத்தில் போக வசதியாக இருந்தது. இப்போது பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் வந்து அடைத்துக் கொண்டு விட்டன. சில பதினாறு மாடிகள் வரை உயர்ந்து நிற்கின்றன. ஆகையால் இந்தப்ப புகை மண்டலம் கீழேயே அதிகம் சூழ்ந்து கொள்கிறது. ஆனாலும் திருநாள் என்றால் வெடி இல்லாமலா ?

தீபாவளிப் பண்டிகைக்குக் காரணாமான நரகாசுரனே தன் மரணத்தை வாண வேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படிக் கேட்டுக் கொண்டானாம், ஏன் என்றால் அவனுக்குக் கடைசியில் கண்ணன் அல்லவா காட்சி அளித்தார்?

 பட்டாசு கொளுத்தும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் விபத்து நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச்சுற்றி இருப்பவருக்கும் வருவது உண்டு. மகிழ்ச்சியுடன் இருக்கும் வேளை வருத்தத்தைக் கொடுத்து விடும். பெரிய வெடிகளை   பெரியவர்கள் துணையுடன் அல்லது அவர்கள் மேற்பார்வையில் தான் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது நீண்ட ஊதுவத்தி ஏற்றி நேருக்கு நேர் நிற்காமல் சாய்ந்தவாட்டில் நின்று கொளுத்த வேண்டும். நைலான் ஆடை அல்லது பட்டாடை தவிர்க்க வேண்டும். பட்டாசு விடும் போது ஒரு கர்ச்சீப்பை நனைத்து முகத்தில் முகமூடி போல் கட்டிக் கொள்வது நல்லது, ஆஸ்த்மாகாரர்களுக்கு இப்படிச் செய்வது மிகவும் அவ்சியம். எதை ஏற்றினாலும் அது முடிந்தவுடன் ஒரு பக்கெட் தண்ணீரில் போட்டுவிட வேண்டும். சுடச்சுடக் கீழே போட்டுவிட்டு அதைத் தவறிப் போய் யாராவது மிதித்துப் பின், “ஆ சுட்டுவிட்டதே எரியறதே!” என்று அலறுவதைத் தவிர்க்கலாமே. பட்டாசு வெடிக்கும் போது அருகில் கார், ஸ்கூட்டர் இல்லாமல் இருப்பது நல்லது. பெட்ரோல், டீசல் போன்றதிலிருந்து தூரமாக இருப்பது நல்லது தானே! வீட்டில் நோயாளிகள் அல்லது வயதானவர்கள் இருந்தால், அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அங்கு வெடிக்காதீர்கள். பாவம், நோயால் அவதிப் படும்போது இதனால் இன்னும் சிரமம் ஏற்படலாம். அதே போல் சின்னப் பாப்பா இருந்தாலும் அந்த வெடிச் சத்தத்தில் அதன் உடல் தூக்கித் தூக்கிப் போடும், அதன் அருகில் வேண்டாமே!

சில ஏழைக் குழந்தைகள் ஏக்கமாகத் தானும் விடமாட்டோமே என்று பார்த்துக் கொண்டு நிற்பார்கள். அவர்களுக்கும் திறநத மனதுடன் பாட்டாசுகளைக் கொடுங்கள். உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள், அவர்களுக்கு நாம் மகிழ்ச்சி கொடுக்க நம் மனமும் மகிழும்.

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 முதல் இரவு 10 வரை. பொது இடங்களில் பொது வழிகளில் வெடிக்கக்கூடாது. சுற்றுப்புறச்சூழல் விதிப்படி வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசை வெடிக்கக் கூடாது.

தவறிப்போய் உடையில் தீப்பற்றினால் ஓடக்கூடாது. ஒருவரையும் பயத்தில் அணைக்கக்கூடாது. உடனே கீழே படுத்து உருள வேண்டும். தீப்புண் மேல் குளிர்ந்த நீரை ஊற்றி மெல்லிய காட்டன் துணியினால் மூட வேண்டும். பின் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும். தன் இஷ்டப்படி மருந்துகளை அதன் மேல் தடவக்கூடாது …

நம் பாதுகாப்பை நாம்தான் உறுதி செஞ்சுக்கணும் .. முடிஞ்சா பட்டாசு வெடிப்பதை குறைச்சு நம்ம ஊரு மாசுபடாமல் வச்சுக்குவோம் ..

இப்படியே எல்லோரும் நினைச்சு  ஊரு, நாடு முழுதும் புகையில்லாத தீபாவளி கொண்டாடினால் நாட்டுக்கும்.. நம்ம நலனுக்கும் ரொம்ப நல்லது ..

உலகத்தில்  உள்ள ஒளிகள் அனைத்தையும்விட, நம் உள்ளத்தில் ஒளிஏற்றுவதே உண்மையான தீபாவளியாகும். வாழ்வில் எத்தனையோ தீபாவளிகள் போய்விட்டாலும் நம் மனதில் இருளைப் போக்க முயற்சிக்காவிட்டால் புறத்தில் ஏற்றப்படும் விளக்குகளால் பயனில்லை.

நம் இதயங்களில் இருக்கும் அறியாமை இருளை அகற்றி, அறிவாகிய ஒளிச்சுடரை ஏற்றி வைப்பதே பயனுடையதாகும். தீபாவளி நன்னாளில் நம் அறிவு கடவுள் அருளால் ஒளிமயமானதாகட்டும் , வாழ்வியலுக்குத் தேவையான பொருள் வளத்தையும், ஆன்மிகத்திற்கு தேவை யான அருள் செல்வத்தையும் இந்நாளில் பெற்று மகிழ்வோமாக.

d4

மழலையாய்
புத்தாடை அணிந்து
அப்பாவின் கைப்பிடித்து
சாட்டை சுற்றிய
மத்தாப்பூ தீபாவளி.,!

இளம் வயதில்
அதிகாலை குளித்து
தன் விருப்பமான உடை அணிந்து
தங்கைக்கு தராமல்
பட்டாம்பூச்சி  பிடிக்கிற பாவனையில்
பட்டாசு பற்ற வைத்து தானே வெடித்து
வேகமாய் ஓடிய தித்திப்பு தீபாவளி..!

கொட்டும் மழையில்
நனைந்தும் நனையாமலும்
முடிந்த வரை வெடித்து தீர்த்த
மழை தீபாவளி..!

ஆயிரங் கனவுகளோடு அடியெடுத்து வைத்து
ஆயிரத்தை தாண்டிய ஆழ்மனக் கனவுகளையும் கூட
அழகாய் நிறைவேற்றும் ஆருயிரானவன்
உடன் இருக்க தலை தீபாவளி..!

தாய்மை தந்து என்னை முழுமை செய்த
என் முழுமதி வைஷுவின்  முதல் தீபாவளி  …

எனக்கொரு அன்னையாய் மாறிப்போன
என் மகள் இன்று வெடி வெடிக்க பாதுகாப்பாய் நின்று
கடந்த கால  நினைவுகளை அசை போடும்
ஆனந்த தீபாவளியாய் …

உறவெல்லாம் ஒன்று கூடி
பிரிவெல்லாம் வெடித்து சிதற
ஒளி சிந்தும்  சுடரின் நடனம்
தொடரட்டும்  தீபங்களில் ….

வாழ்க வளமுடன் …
இனிய தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்…

  • ப்ரியா கங்காதரன்

IMG-20151107-WA0021

ப்ரியங்களுடன் ப்ரியா–17

உலகம் அழகாகும்

ஒரு பெண்குழந்தை பிறந்தால்!

10505507_712368662134116_517736864291242019_n

எனதுலகம்  அழகாகுதடி
நீ விழி விரிக்கையிலே…
எனது  சிறகுகள் விரியுதடி
நீ தேவதை கனவு காண்கையில…
என் கண்மணி கூட உனை காக்குதடி
நீ மெல்ல அடி வைத்து பழகுகையில் …
என் முத்தாரம் கூட விகசிக்குதடி
நீ முத்தமிடுகையில்…
என் தாய் மொழி அழகு மறக்குதடி
நீ மழலையிலே மிழற்றுகையில்…
என் பாதங்கள் காற்றில் மிதக்குதடி
நீ பாடி ஆடுகையில்…
என் கனவு உன் காவியம் பாடுதடி
நீ கண்ணயர்கையில்…
என் உயிருக்குள் வலிக்குதடி
நீ விழி நீர் சுரக்கையில்…
என் கைகள் தீண்டும் காற்றை கூட வடிகட்டுதடி 
நீ என் கைகளுக்குள் உறங்கையில் …
என் ஆன்மா சிலிர்க்குதடி
நீ அம்மா என்றழைக்கையில் …
என் தாய்மை சிப்பிக்குள்ளிருந்து
தரை தீண்டிய வெண்முத்து நித்திலமே..
என் மழலை சித்திரமே..
கடவுளின் பரிசடி 
நீயெனக்கு என் செல்லமே …

10687199_743530039017978_1219088183025069879_n
உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு!
எல்லா  அப்பாவுக்கும்  இது ஒரு தெய்வீக வார்த்தை. அதுவும் அது பெண் குழந்தையெனும் பட்சத்தில் அவரை விட அதிர்ஷ்டக்காரர் யாருமிருக்கமுடியாது.

நான் பிறந்தும் என் அப்பாவும் அதிர்ஷ்டக்காரர் ஆனார். வைஷு பிறந்தும் என் கணவரும் அதிர்ஷ்டக்காரர் ஆனார்.
இப்படிதான் நானும் அதிர்ஷ்டக்காரி ஆனேன்!

ஆமாங்க…

உங்கள் குழந்தை மகளாக இருக்க நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருக்க வேண்டும். காரணம்…

பெண்குழந்தைகள் தேவதைகள். அந்த தேவதைகள் எல்லா வீட்டிலும் வாசம் செய்வதில்லை…

அதிர்ஷ்ட தேவதைகள் வெள்ளுடையணிந்து, வெண்சிறகடித்து, எப்போதும் வானிலிருந்து வந்திறங்குவதில்லை.

வீடுகளில் மகள்களாகவும் வந்து பிறக்கிறார்கள்!
11008563_835877473116567_5100451327705142025_n

நாம்  எங்காவது வெளியூர் போயிருந்தால் மகள் “எப்பமா  வருவீங்க” என்றும், மகன் ‘என்ன வாங்கீட்டு வருவீங்க’ என்றும் கேட்பதை பொதுவாக எதிர்கொண்டிருக்கலாம். பெண் குழந்தைகள் பொருட்களால் ஆளப்படுவதை விட பாசத்தால் ஆளப்படுபவர்கள்.

எங்க வீட்டில் நான் தீபா – ரெண்டு பேர்தான். நாங்க ரெண்டுபேருமே பெண்ணாகப் பிறந்தில் எங்க உறவுமுறையே சந்தோஷக் கடலில் மூழ்கியது உண்மை. நான் தலைப்பிள்ளை என்பதால் நெறைய சலுகை, சந்தோஷம் என்னைச் சுற்றியே எப்போவுமே இருக்கும்.

இப்போ கூட அப்பா வியாபார, குடும்ப ரீதியாகவோ ஏதேனும் முக்கிய முடிவு செய்வாதாக இருந்தால் எங்க ரெண்டு பேரையும் கலந்து கொள்ளாமல் செய்வது இல்லை. திருமணம் ஆகி 17 வருடம் ஆகியும் இன்னும், ‘சாப்டியா பிரி… எப்படிமா இருக்கே” என்று தினமும் தொலைபேசி அழைப்பு வருவது தவறுவது இல்லை.

10552428_714905481880434_7405080986481281981_n

நான் புகுந்த வீட்டில் பெண்குழந்தைகள் இல்லை. என் கணவரும் அவரின் தம்பியும் மட்டுமே… அந்தக் குடும்பத்திலும் நான்தான் மகள்… செல்ல மகள்!
‘மருமகளாகச் சென்று மகளாக ஆனேன்… கடவுளின் பரிசாக எங்களுக்குப் பிறந்தும் தேவதைதான்…

‘வந்தாள் மகாலட்சுமியே!
இனி என்றும் அவள் ஆட்சியே…’

இப்படி பெண்குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு ஏற்படும் குதுாகலத்தை யாராலும் அளவிட முடியாது.பெண்குழந்தைகளை ‘மகாலட்சுமி’ எனவும் ‘ஆதி பராசக்தி’ எனவும் பலவகை பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு.

10552361_713227718714877_5647803810278893506_n

பழமைவாத உணர்வுகளை ஒரு காலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டு பயணிக்காமல், பெண்ணுக்குப் பெண்ணை எதிரி ஆக்காமல், அவர்களையும் அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் நாமும் பயணிக்க வேண்டும்.

இந்தப் பதிவின் நோக்கம் பெண்குழந்தைகளின் சிறப்பை சொல்ல மட்டுமல்ல… அவர்களுக்கான உரிமைகளை பற்றியும் பேசத்தான்!
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் பரவலாக எல்லா நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. பெண்குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது படைப்புகளை அங்கீகரிக்கும் விதமாகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாட ஐ.நா சபை 2012ல் முடிவு செய்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவுகட்ட பதின்பருவ பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது இந்த ஆண்டு பெண் குழந்தைகள் தினத்தின் மையக்கருத்தாகும்.
10478536_707577309279918_1817993399449361569_n
நமது அரசின் கீழ் பெண்குழந்தைகள் பயன்பெறும் திட்டங்கள்…
சமூக நலத்துறையின் கீழ் திட்டங்கள் என்னென்ன?
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம், ஈவெரா மணியம்மையார் ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவை மறுமண உதவி திட்டம், தமிழக அரசின் கலப்பு திருமண நிதி உதவி திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், குழந்தைகள் காப்பகம், அரசு சேவை இல்லம் போன்றவை சமூக நலத்துறையின் கீ்ழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?
பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டத்தில் ஒரே ஒரு பெண் இருந்தால் ரூ. 22 ஆயிரத்திற்கான வைப்புத் தொகை பத்திரம் சமூக நலத்துறை மூலம் அரசு வழங்குகிறது. இரண்டு பெண் இருந்தால் தலா ரூ.15 ஆயிரத்து 200 வீதம் சம்பந்தப்பட்ட குழந்தையின் பெயரில் வைப்பு தொகை பத்திரம் வழங்கப்படும்.
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற நிபந்தனைகள் என்னென்ன?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்க கூடாது. ஆண் குழந்தையை தத்து எடுக்க கூடாது. பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை இருந்தால் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இரண்டு இருந்தால் ஆண்டு வருமானம் ரூ. 12 ஆயிரத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற எங்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்? என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சமூக நல அலுவலகம் அல்லது அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுக வேண்டும். விண்ணப்பத்துடன் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்று, சாதிச் சான்று, பெற்றோர் வயது சான்று, ஆண் வாரிசு இல்லை என்ற சான்று, குடும்ப அட்டையின் நகல், குடும்ப புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
10460347_707949835909332_1835426729873613230_n
பெண் குழந்தைகளுக்கு முதலீடுகள்…
* சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts ) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஜனவரி 22  அன்று தொடங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ, பாதுகாப்பாளரோ குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 9.1 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வுத் தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.
* ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலிடு செய்யலாம்.
  • குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பாளர் இக்கணக்கினை தொடங்கலாம்.
* குழந்தைக்கு 10 வயது வரை இந்த கணக்கினை தொடங்கலாம்.
baby 3
பெண் குழந்தைகளுக்கு நாம் கற்று தர வேண்டிய முக்கிய விஷயங்கள் …
மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்..
கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இப்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவளுடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.
வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார் என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

கடை, ஷாப்பிங் என்று அழைத்துச் செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்குச் சொல்லிக்கொடுங்கள்.

நீங்கள் எவ்வளவு தூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள்?
அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள்? அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர்? இதையெல்லாம் அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.
நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னோர் சிறப்புகளையும் அவர் தெரிந்து கொள்ளட்டும் .
உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.
புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.
உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.
இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும்!
10479077_704671519570497_4127134574686631643_n
எனதுலகம்  அழகாகுதடி
நீ விழி விரிக்கையிலே…
எனது  சிறகுகள் விரியுதடி
நீ தேவதை கனவு காண்கையில்…
என் கண்மணி கூட உனை காக்குதடி
நீ மெல்ல அடி வைத்து பழகுகையில்…
என் முத்தாரம் கூட விகசிக்குதடி
நீ முத்தமிடுகையில்…
என் தாய் மொழி அழகு மறக்குதடி
நீ மழலையிலே மிழற்றுகையில்…
என் பாதங்கள் காற்றில் மிதக்குதடி
நீ பாடி ஆடுகையில்…
என் கனவு உன் காவியம் பாடுதடி
நீ கண்ணயர்கையில் …
என் உயிருக்குள் வலிக்குதடி
நீ விழி நீர் சுரக்கையில் …
என் கைகள் தீண்டும் காற்றை கூட வடிகட்டுதடி 
நீ என் கைகளுக்குள் உறங்கையில் …
என் ஆன்மா சிலிர்க்குதடி
நீ அம்மா என்றழைக்கையில் …
என் தாய்மை சிப்பிக்குள்ளிருந்து
தரை தீண்டிய வெண்முத்து நித்திலமே..
என் மழலை சித்திரமே..
கடவுளின் பரிசடி 
நீயெனக்கு என் செல்லமே…
– ப்ரியா கங்காதரன்
20150414_093124

ப்ரியங்களுடன் ப்ரியா–16

சேமிப்பும் செல்லங்களும்!

sav5

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!

sav3

இனிமையான இல்லறத் தலைவியின் பண்பாக அறியப்படும்

‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசார்ந்த
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

என்ற வள்ளுவனின் வரியை இன்றைய கால சூழலில் இவ்வாறுதான் கையாள வேண்டும் ,

தனது சொத்துகளையும் பாதுகாத்து தனது கணவனின் சொத்துகளையும் வளர்த்து , குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்கு வேண்டிய பாதுகாப்பை சோர்வில்லாமல் செயல் செய்பவளே நல்ல குடும்ப தலைவி.

”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ என்று பள்ளியில் படிக்கிற காலத்தில் ,மண்டையில் இடித்து, இடித்து சொல்லிக் கொடுத்துவிட்டு, படிப்பு முடிந்தபிறகு “ கடன் வாங்காத குடும்பம் கரையிலேயே நிற்கிற கப்பல்” என்று வாழ்க்கைக்கு தலைகீழ் பாடம் நடத்துவது யாருடைய தவறு? வரவுக்குள்ளாக செலவு செய்கிறபொழுது வாழ்க்கை கடினமாக இருக்குமே தவிர , கஷ்டமா மாறாது ; வரவை மீறி , கடன் வாங்கியாவது செலவு செய்வது , வழக்கத்தில் நமக்கு கஷ்டம்  மட்டுமல்ல…  பெரும்பாலும் நஷ்டமே ..

இதை தடுக்க தவிர்க்க நமக்கு ஒரே வழி சேமிப்புதான்.

sav1

சேமிப்பை முதலில் நம்ம குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் தான்!

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட நம்ம குழந்தைகளின்  சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். ஏதோ ஒரு ரூபாய்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் நம்ம குழந்தைகளின் மனம், சிறு சேமிப்பு பெட்டி நிரம்பியவுடன் ஆச்சரியமாகிறது. காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை நமது செல்லங்களுக்கு உணர்த்தும்…

sav7

நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை தெளிவாக உணர்த்தும். நாம் உண்ணும் உணவு ஒரே பருக்கையால் ஆனது அல்ல. எண்ணிலடங்கா அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது. சிறு சிறு நீர்த்துளிகள் இணைந்து  தாகம் தீர்க்கும் அமிர்தமாக மாறுகிறது. அதுபோன்றுதான் சேமிப்பும். சிறு சிறு தொகைகள் இணைந்து, சில காலத்திற்குப் பிறகு பயன் தரும் பெரும் தொகையாக நமக்கு  உதவுகிறது. கிடைக்கும் கால அளவு குறைவாக இருப்பது போன்று தோற்றம் அளிக்கும் நிகழ்கால சூழலில், வீணாக்கும் ஓவ்வொரு நிமிடமும் நட்டமே. எனவே சேமிப்பு எனும் நல்லதொரு பழக்கத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்வோம்.

ஏனெனில், நிகழ்காலம் பொருளாதார நோக்கம் கொண்ட காலமாகவே இருக்கிறது. நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானம் தேவைப்படுகிறது. எதிர்பாராமல் வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கு சேமிப்பு எனும் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வோம்.

சேமிப்பின் முதல் படி. ஒரு எளிய வழியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அன்றாடம் வரவு -செலவு கணக்கு எழுதுவது. இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, நம் வீட்டில் உள்ள அனைவரும் இதில் ஈடுபடுவதால், குடும்பப் பொருளாதாரம் எல்லாருக்கும் தெரிய வரும். அதனால், அவரவரின் செலவுகள் ஒழுங்குபடுத்தப்படும். பொதுவாக குழந்தைகளுக்கு குடும்பப் பொருளாதார நிலை தெரிந்தால் அவர்களது பொருளாதார அறிவு வளரும். மாறும் சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயாராவார்கள். இரண்டாவது, பல நேரங்களில் பயனற்ற செலவுகளை கண்டறிந்து நீக்க இது உதவும்.

sav2

‘சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன‘ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 31ம் தேதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது.

இவ்வுலகம் யாருக்கு இல்லை என்பதை திருக்குறளில் வள்ளுவர் பின்வருமாறு விளக்குகின்றார். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” (குறள் 247). அதாவது இவ்வுலகில் வாழ பணம் முக்கியமானது.

பணமில்லாவிட்டால் இவ்வுலகம் இன்பம் பயக்காது. எனவே, இந்நிலையைக் கருத்திற்கொண்டு வள்ளுவர் மேலும் குறிப்பிடுகின்றார். “செய்க பொருளை” என்று (குறள் 759).

sav7

செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை இனங்காட்டலாம்.

(1) கஞ்சத்தனம்

(2) சிக்கனம்

(3) ஆடம்பரம்

(4) ஊதாரித்தனம்.

கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகைக்கும்போது  மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம்.

சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும், சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மழையின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும்.

ஆடம்பரம் என்பது, அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக, வகையறியாமல் நடை உடைபாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவ வாயிலாக நாம் காண்கிறோம்.

ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றி, கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது.ஒருமுறை அமெரிக்க ஃபோர்டு கார் நிறுவன அதிபர் ஹென்றிபோர்டு, மாநாடு ஒன்றுக்காகச் சென்றிருந்த இடத்தில், ஹோட்டலில் இரண்டாம் தரமான அறையை எடுத்தார். ஹோட்டல் பணிப்பெண் கேட்டார், ‘சற்று நேரத்துக்கு முன்னால் வந்த தங்கள் மகன், முதல் தர அறையை எடுத்திருக்கிறார், தாங்கள் ஏன்?‘’

உடனே ஹென்றிபோர்டு சொன்ன பதில் இதுதான். “”அவனுக்குப் பணக்கார அப்பா இருக்கிறார். எனக்கு அப்படி இல்லையே!

”சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை போதுமென்ற மனம் இவைதாம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்து விட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றாக அவற்றை இழந்துவிட நேரும்.

sav6

உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி அழகாகக் கூறியுள்ளார்…

Neither a borrower nor a lender be;
For loan oft loses both itself and friend,
And borrowing dulls the edge of husbandry.

கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில், பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அதோடு  வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள்.

தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு, சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும், சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை, சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான வட்டி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம், பாதுகாப்பு, சலுகைகள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன..

எதிர்கால செலவுகளை திட்டமிடுவது சேமிப்பைத் தூண்டும் மற்றொரு வழி. உங்களது எதிர்கால செலவுகள் என்ன என்பதை எழுதிப் பாருங்கள். குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுகால செலவுக்கு பணம் என பல இருக்கின்றன. இவற்றைத் தோராயமாக அளவிட்டுப் பார்த்தால், வருங்கால செலவின் தொகை மிகப்பெரிதாக இருக்கும். மிரளாதீர்கள்! உங்கள் வருவா யைக் கூட்டவேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தும். வழி பிறக்கும்.

sav4

மீண்டும் யோசித்துப் பார்த்தால், சேமிப்பு என்பதே வருவாயைக் கூட்டும் இன்னொரு வழிதானே. சேமித்த பணத்தை சரியாக முதலீடு செய்யும்போது அதுவே உங்களுக்கு கூடுதல் வருவாயைப் பெற்றுத் தரும்…

பல நேரங்களில் எது அவசியமான செலவு என்பதில் குழப்பம் இருக்கும். புலன்களின் பேச்சைக் கேட்காமல், கற்பனையான சமுதாய நிலையைப் பார்க்காமல், அறிவு சொல்லும் தீர்ப்பே இதில் சரியாக இருக்கும்…

சேமிப்பு என்பது இப்போதைய காலத்தில் பணம் தவிர … மழை நீர், குடிநீர், மின்சாரம் , எரிசக்தி , என எல்லாவற்றிலும் அவசியம் ஆகி விட்டது.

சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே எதிர்கால வாழ்வில் சிறப்படைய முடியும் என்பது நிதர்சனம்!

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!

  • ப்ரியா கங்காதரன்

20150414_093124

பேலியோ டயட் – உண்மையா? உதாரா?

உணவியல் நிபுணரும் மருத்துவருமான தாரிணி கிருஷ்ணனும் பேலியோ குழுவைச் சேர்ந்த சங்கரும் விவாதிப்பதன் வீடியோ வடிவம்…

(குங்குமம் டாக்டர் அக்டோபர் 1-15, 2015 இதழில் இதன் சுருக்கமான வடிவம் வெளியாகியுள்ளது)

பயணங்கள் மறப்பதில்லை !

ப்ரியங்களுடன் ப்ரியா–15

செப்டம்பர் 27

உலக சுற்றுலா தினம்

tour101

இருவரும் பகிர அதோ மற்றொரு நிலவு .. .

எடுத்துவை  பகிர்ந்து கொள்வோம்…
சிறகுகள் விரித்துப் பறக்க
அதோ அந்த பறவையை 
துணை சேர்த்து கொள்வோம்…
பாதையில் தெளித்துச் செல்ல
அதோ அந்த வாடா மலர் வாசனையை 
பறித்துவிடு…

நல்ல கவிதை தெரிகிறது 

மடித்துவை 

நேரம் போக உதவும். . . 

நம் கண்களில் அணிய 

அதோ அந்த வானவில்லை 
சுருட்டிவை …
உன்முகம் துடைக்க 
அதோ அந்த
புல்லின் பனித் துளியை 
அள்ளியெடுத்துவிடு …

காதலாகக் கைகோர்த்து 

உலகை பவனி வருவோம்..
பயணங்கள்
மறப்பதில்லை…
முடிவற்ற அன்பில்
தொடர்கிறது நமக்கான  பயணம்!
tour7

நம்மோட  மனசு  ஒரு ஓயாத பயணி. தான் சென்று வந்த இடங்களை மட்டுமல்ல… செல்லாத இடங்களுக்குக் கூட பயணிக்கும் வல்லமை கொண்டது. பார்த்த இடங்களைக் குறித்து நாலு பேரிடம் சொன்ன பிறகே சிலரது மனசு அமைதியாகும். இன்னும் சிலருக்கு அதைப் பத்தி எதாவது குறித்து வைத்தால்தான் தூக்கமே வரும்!

நானும் அப்படிதான்… பார்த்ததை பகிர்வதில் உள்ள பரவசம் மிக மிக இனிமையானது…

24 மணிநேரத்திற்கும் மேலாக தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வேறொரு இடத்தில் ஓய்வாக மன மகிழ்ச்சிக்காக தங்குபவர்களே சுற்றுலா பயணிகள்.சுற்றுலாவின் அடிப்படையே ‘பயணங்கள்’தான்.

tour10

1814ல் தாமஸ் குக் இங்கிலாந்தின் லாபரோ என்ற நகரில் இருந்து லீசெஸ்டர் வரை 570 நபர்களுடன் ரயில் பயணம் சென்றார். இதுவே உலகின் முதல் விளம்பரப்படுத்தப்பட்ட தொழில்முறை சுற்றுலா. இப்பயணம் வெற்றிகரமாக இருந்ததால் பல சுற்றுலா பயணங்களை தாமஸ்குக் ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பயணிகளை இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து சென்றதால் தாமஸ் குக் ‘சுற்றுலாவின் தந்தை’ என்றும் ‘உலகின் முதல் பயண முகவர்’ என்றும் கருதப்படுகிறார்.
இப்போது உலக நாடுகள் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்னிய செலாவணியை குவிக்கிறது. இதுவரை போர் சத்தங்களை கேட்டிராத சுவிட்சர்லாந்தின் (ராணுவமே இல்லாத நாடும் கூட!) முதன்மை வருவாயே சுற்றுலாதான்.
tour4
சுற்றுலா…
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனிதர்களுக்கான ‘ரீ சார்ஜ்’ செய்யும் கருவி. கம்ப்யூட்டர் யுகத்தில் மனிதர்கள், கடிகார முள்ளைவிட வேகமாக சுழன்று கொண்டு, 24 மணிநேரம் போதவில்லை என்கின்றனர்.
மனதிற்குள் ஏதாவது ஒரு லட்சியத்தை சுமந்துகொண்டு இயந்திரங்களைக் காட்டிலும் வேகமாக ஓட முயன்று, துவண்டு விடுகின்றனர். எனவேதான் ஓய்வு நேரங்களில் இயந்திரமயமற்ற, ‘ஆணையிடும் மனிதர்’ இல்லாத இடங்களை நோக்கி பயணிக்கின்றனர்
கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்க முடியும்.
tour1
அன்றாட நிகழ்வுகளில் கரைந்துபோகும் வாழ்வை ஒருசில கணங்களே உயிர்ப்பிக்கின்றன. மழலையின் சிரிப்பு, மகிழ்வூட்டும் திருவிழா, பிடித்த புத்தகம், மலைக்க வைக்கும் மலைகள், கலையின் உச்சமான சிலைகள், உற்சாகமூட்டும் வீதிகள் என இப்படிப் பல விஷயங்கள் நம் வாழ்வைப் புதுப்பிக்கின்றன. மனம் ஓரிடத்தில் நில்லாமல் கவலைகளில் உழன்று, இன்பங்களில் திளைத்து தொடர்ந்து சஞ்சாரம் செய்து கொண்டே இருக்கிறது. அதனூடாகத்தான் இந்த பயணங்களும் பயணம் சார்ந்த  வாசிப்பும்.
tour8
இன்னைக்கு எவ்வளவோ சுற்றுலா  பயணங்கள் சென்றாலும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது ஐந்தாவது படிக்கும் போது பள்ளியில் போன   என் முதல் சுற்றுலா பயணம்தான்.

மருதமலை… சின்ன வயதிலே வீட்டில் எல்லோருடன் பல முறை சென்று இருந்தாலும் முதல் முதலாக தனியாக சென்றது…

‘பயண அனுபவங்களை கட்டுரையாக எழுதணும்‘ என்று டீச்சர் சொன்னதும் பார்க்கும் இடத்தை எல்லாம் வார்த்தையாக வருடி வந்தது…

அதிகாலையிலேயே  எழுந்து அம்மா எங்க எல்லோருக்கும் மதியம் சாப்பிட புளி சாதமும், பருப்பு சட்னியும்  அம்மா கட்டி தந்தது…

25 பேருடன் போன என்னை வழியனுப்ப எங்கள் வீட்டில் இருந்து வந்த 35 பேர் … இன்னும் மனசை விட்டு மறையாத நினைவுகள்!

தொடர்ந்து எத்தனையோ நாடுகள், மாநிலங்கள், ஊர்கள் சென்றாலும் முதல் பயணம் என்னால் என்றுமே மறக்க முடியாது.

நான் ஈடுபட்டுள்ள விற்பனை துறையில் சிறந்த முறையில் செயல்பட்டதால் இரண்டு முறை மலேசியா சுற்றுலா.

என்னை நானே புரிந்துகொள்ள  வருடம் இருமுறை திருப்பதி…

இயற்கையுடன் பேச வருடம் இரு முறை கொடைக்கானல், ஊட்டி,

கடவுளின் தேசமும் எனக்கு சொந்த தேசம் ஆனதால் மனது வலிக்கும் போதெல்லாம் கேரளா பாட்டி வீடு…

இப்படி தமிழகத்தின் தென்கோடி முதல் வடக்கு வரை பயணம் செஞ்சாச்சு.

ஆனாலும் இன்னும் தேடல் குறையவில்லை … மனசு இன்னும் தேடுது. எதையுமே தொலைக்காமல் தேடுவதும் சுகம்தான்!

விமானம்… ரயில்… பஸ் என ஒவ்வொன்றிலும் வித விதமான ஆசான்கள் சக பயணியாக…

tour3

பரந்த பாலைவனமும், அழகு நீலக்கடல்களும், வானுயர்ந்த பனி மலைகளும் பசுமை மாறாக் காடுகளும், பள்ளத்தாக்குகளும், பக்தி மணம் பரப்பும் ஆன்மிக தலங்களும்… ஏன் பல இனக்குழுக்களும் கொண்ட நாடு நமது இந்தியா. ‘உலக புவியியலாளர்களின் சொர்க்கம்’ என வர்ணிக்கப்படும் மன்னார் வளைகுடா, பசுமையான இமயமலை சிகரங்கள், இயற்கை ஆர்வலர்களையும் பல்லுயிரின ஆராய்ச்சியாளர்களையும் பெருமளவில் ஈர்க்கிறது. கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாரம்பரிய கட்டிடங்களும், கலாசாரத்தின் அடையாளங்களை காட்டும் இசையும் நடனமும், கண்ணாடியாக மிளிரும் ஓவியங்களும், நவீன பொறியாளர்கள் வியக்கும் சிற்பங்களும் நமது நாட்டில் உண்டு. நாம் நமது நாட்டிலே ரசிக்க உணர நெறைய இருக்கு…

tour2

ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் கண்ட காட்சிகள் வாழ்வியலை அழகாக ரசிக்க வைத்தது ..

ஒரு புறம் வாழ்வை தேடி அயல்நாடு பயணிக்கும் சகோதர்களின் கண்ணீர்… ஒரு புறம் வாழ்வை வென்று தாயகம் திரும்பும் சகோதர்களின் சிரிப்பு…

இப்படி இரண்டு துருவங்களை சந்தித்தாலும் அந்த இரு துருவங்களும் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் சந்தித்து கண்ணீர் சிரிப்பாகவும், சிரிப்பு கண்ணீராகவும் மாறும் என்ற நிலையை உணரும் போது பயணங்கள் என்றுமே முடிவதில்லை என்பது கண் முன்னே வந்து போனது…

tour6

என் ஒவ்வொரு சுற்றுலாவும் எனக்கு வாழ்வியல் பாடங்கள்தான்…

கலாசாரம், உணவு முறைகள்,  உழைக்கும் முறைகள், அப்பப்பா .. எல்லாமே பாடம்தான் …

‘பொங்கிவரும் கடல் அலைகளும், மலை முகடுகளின் ஊடே வந்து நம்மை தழுவி செல்லும் மேகக் கூட்டமும் இதமான தென்றல் காற்றும், மனிதனின் கோபம், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தன்னுள் இழுத்து செல்லும் ஆற்றல் கொண்டவை’ என கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எனவேதான் சோர்வுற்ற மனித மனங்கள் அந்த இடம் நோக்கி பயணிக்கின்றன. புத்தகப்புழுவாய் புரண்டு கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களை விட சுற்றுலா பயணங்களே நடைமுறை அறிவை தரும். ‘அறிவை விரிவு செய்… அகண்டமாக்கு…’ என்றார் பாரதிதாசன். அத்தகைய விசாலமான அறிவை பெற ஒரே வழி, அர்த்தமுள்ள சுற்றுலா பயணங்களே!
tour5

இரவிற்கும் பகலைப் போல பல வண்ணங்கள் உண்டு. நாம் காகத்தின் கண் கொண்டு நோக்காமல் கூகையின் கண் கொண்டு பார்க்க வேண்டும். விழித்திருப்பவனின் இரவு நீளமானது என்கிறார் புத்தர். அப்படித்தான் பயணங்களை பார்க்க வேண்டும்.

எதிர்பாராத கணங்களில் ஒளிந்திருக்கும் அழகை தரிசிக்கத் தொடங்கும்போது வாழ்க்கை இன்னும் அழகாகிவிடுகிறது.

ஏதோ  ஒரு வகையில் பயணங்கள்  ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா? இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடையதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா? வாழ்வின் எந்தத் திரவ நிலையைத் தொட்டுத் தொட்டு நாம் பயண பட்டுத்தான்   போகிறோம்?

tourm
மலைகள் எப்போதும் மனதை மயக்குபவை. மலைவாழிடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் இங்கேயே தங்கிவிடலாமா என்ற எண்ணம் எனக்கு தோன்றிவிடும்.

மலைமுகட்டில் நின்று நீங்களே பேசி பாருங்களேன்… நம் மனதில் தோன்றும் எல்லா வினாக்களுக்கும் கடவுளே பதில் சொல்வது போல இருக்கும்.

அதான் நிஜமும் கூட … ஒருவனை உருவாக்குவதில் இயற்கைக்கு முக்கிய பங்கு உண்டு.

மனித வாழ்க்கையே ஒரே ஒரு வினாடிதான் என்ற புத்தர், அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார், ‘வாழ்வு ஒரே ஒரு நொடி என்று அர்த்தமில்லை. ஆனால், ஒவ்வொரு நொடியாக வாழ வேண்டும்; ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ வேண்டும்’ என்பதுதான் அது.

இனி, இதுமாதிரியான அனுபவத்திற்காகவாவது, சின்ன சின்ன சுற்றுலாக்களை அமைத்துக் கொள்வோம்!

tour9

இருவரும் பகிர அதோ மற்றொரு நிலவு . . 

எடுத்துவை , பகிர்ந்து கொள்வோம் …

சிறகுகள் விரித்துப் பறக்க

அதோ அந்த பறவையை 
துணை சேர்த்து கொள்வோம் …

பாதையில் தெளித்துச் செல்ல

அதோ அந்த வாடா மலர் வாசனையை 
பறித்துவிடு …

நல்ல கவிதை தெரிகிறது 

மடித்துவை 
நேரம் போக உதவும். . . 

நம் கண்களில் அணிய 

அதோ அந்த வானவில்லை 
சுருட்டிவை …

உன்முகம் துடைக்க 

அதோ அந்த
புல்களின் பனித் துளியை 
அள்ளியெடுத்துவிடு  …

காதலாகக் கைகோர்த்து 

உலகை பவனி வருவோம் ..
பயணங்கள்
மறப்பதில்லை …
முடிவற்ற அன்பில்
தொடர்கிறது நமக்கான  பயணம்!
– ப்ரியா கங்காதரன்
IMG_20150721_070238

ஏய் வாசகா !!! உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்!!!

ப்ரியங்களுடன் ப்ரியா–14

book1

விரல்களற்றவன் கையில் கிடைத்த 
வீணை போலவீணாகக்கழியும்.
கைகளில் புத்தகம் 
இல்லாத மாலைகள்…
எழுத்தை இனித்து 
புசிக்கும் வேளைதனில் 
வயிற்றுப் பசி
எட்டி நின்றுவிடும்…
நானே என்னை தொலைக்கவும் 
நானே என்னை கண்டெடுக்கவும் 
புத்தகம் மட்டுமே
துணை  வருகின்றன…
விதைந்த வரிகளில்
கவிதையாக கருவாகி 
பக்கங்களில் உயிர்த்து 
சுவாசம் செய்யும் பொழுது 
விடிந்தது மனமும் வானமும்…

 book2

ஏய் வாசகா !!!  உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்!!!

என்று நகுலனின் ஒரு கவிதை…

இந்த வரி ஒன்றே போதும் , வாசிப்பவனும் , வாசிப்பதுவும் எவ்வளவு பெரிய வரம் என்பதற்க்கு.. எப்போதெல்லம் நாம்  தொலைந்து போனோமோ அப்போதெல்லாம் நம்மை மீட்டு கொடுப்பதும் ,எதையெல்லாமோ நாம்  தொலைத்தோமோ அதையெல்லாம் இப்போதும் தேடித்தருவதும் புத்தகங்கள்தான் .அப்படி இருந்தும் ஏன் வாசிக்கும் பழக்கம் தொடர மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணுகிறதே இந்த மனம் எனும்போது மனசின் மேல் அறிவு கொஞ்சம் கோபம் கூட படுகிறது

புத்தகம் படிப்பது என்பது  நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்க படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் குறித்து  ஆயிரம் கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன…

 book

எனது வாசிப்பு …

உயிர்ப்பாக எழுத்தை நான் சுவாசிக்க ஆரம்பித்தது கடவுளின் தேசத்தில் தான்.. ஆம்… நான் வாசிப்பை தொடங்கியது கேரளாவில்தான்!

நான்காம் வகுப்பு வரை மழலை தமிழை மலைமுகட்டில் வாசிக்க ஆரம்பித்தேன் ..

அம்மா அப்பாவின் வருகை அவர்களின் அருகாமை அன்பை விட அவர்கள் எனக்கு கொண்டுவரும் சிறுவர்மலர் .. பூந்தளிர் ..எதிர்நோக்கியே இருந்தது …

காமிக்ஸ் கதைகள் .. அம்புலிமாமாவில் தொடங்கிய எனது வாசிப்பு இன்றுவரை தடையற்ற வெள்ளமாக பல்கி பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.

கொங்குவாசியான நான் எங்க ஊர் எழுத்தாளார் ராஜேஷ் குமார் அவர்களின் தீவிர வாசகியாகி ஒரு கால கட்டத்தில் க்ரைம் நாவலும் நானுமாகி போனதும் நிஜமே.

அதனை தொடர்ந்து வாசிப்பின் பக்கம் குடும்ப நாவல் பக்கம் திரும்பிய பொழுது கல்கியில் தொடராக வெளியான லக்ஷ்மி அம்மாவின்  எதற்காக என்ற நாவல் வாசிப்பின் மறுபக்கத்தை எனக்கு அழகாகக் காட்டியது.

இதுவரை படிக்கணும் என்று ஆசைப்பட்டு வாங்கியும் இதுவரை படிக்கச் முடியாத நாவல் ** கங்கை கொண்ட சோழபுரம் ** 2 ,3 , 4 பகுதிகள் மட்டுமே.

அதை போல பலமுறை படித்த நாவல்கள் என்றுபார்த்தால் ரமணிச்சந்திரன் அம்மா அவர்களின் நாவல்கள் ** காதெலெனும் சோலையிலே , மாலை மயங்குகிற நேரம், வளையோசை, விடியலை தேடும் பூபாளம் , மானே மானே ,,, புதுவைரம் நான் உனக்கு ** இதுவரை எத்தனை முறை வாசிச்சு இருப்பேன் என்று தெரியலை ,, எத்தனை முறை வாசிக்க போறேன் என்றும் தெரியலை …

ஆதர்ச எழுத்தாளர் வரிசையில் நான் நெறைய பேரை சந்தித்து இருந்தாலும் இதுவரை நிறைவேறாத விரைவில் நிறைவேற வேண்டிய ஆசை என்று ஒன்று இருந்தால் அது ரமணிச்சந்திரன் அம்மா அவர்களை சந்திக்கணும்… சந்திச்சே ஆகணும்…

எல்லோருக்கும் வாசிப்பின் மேல காதல் வர எதாவது ஒரு காரணம் இருக்கும். எங்க வீட்டில் எங்க அம்மா அப்பா குமுதம்,விகடன் என்று படிக்கப் படிக்க எனக்கும் வாசிப்பின் மீதான காதல் வளர ஆரம்பித்தது …

சிறுவயசில் மளிகை கடையில் பொட்டலம் கட்டி தரும் தாளை வீட்டில் வந்து பிரிச்சு படிக்கக் கூட பொறுமை இல்லாமல் இடப்புறம் வலப்புறம் என்று அந்த பொட்டலத்தை தலைகீழாக வாசித்துதான் வீடு வந்து சேர்வேன் ..
 book5

வாசிக்கும் சமுகமே வளரும் சமுகம் என்ற வார்த்தையை மனதார பின்பற்றுவள் நான். இந்த நாகரிக கணினி உலகில் என் மகளையும் வாசிக்க வைக்கணும் என்று சிறுவயதிலே நீதிக்கதைகளில் ஆரம்பித்து இப்போ போன மாதம் கல்பனா சாவ்லா பற்றிய புத்தகம் வாங்கி கொடுத்தேன்.

வாசித்தலில் வருடியவர்கள்.. ( இதை முன்னமே நமது ஸ்டார் தோழி பகுதியில் எழுதி இருந்தேன். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். ஆகச்சிறந்த படைப்புகள் நீங்களும் இதை வாசிக்கணும் என்று)

சில நேசிக்கும் எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லி விளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும்… கதகதப்பான சாம்பலில் கண்திறக்க மனமின்றி எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துகளின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும்… அப்படி என்னை மடியில் கிடத்தி தலை கோதி வருடிய சிலரின் வரிகள்…

1. எஸ் ரா ..எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி.

s-ramakrishnan
வரிகளை வாசிக்கும் பொழுதே உடன் பயணித்த அனுபவம் .. ஒவ்வொரு பக்கமும் ஒவொரு தேசமாய் ஒவ்வொரு மனிதராய் சந்தித்த போது பயணத்தின் சுகானுபவம். படிக்கும் பொழுதே பலரை சந்திக்கும் அனுபவம்.

இவரின் விழி வழியே வரிகளை கடக்கையில் அட ஆமாம் !!.எப்படி நாம் இதை ரசிக்காமல் விட்டோம் அல்லது நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார் ?” என மனசு கேக்காமல் இருபதில்லை . , தேசாந்திரி புத்தகத்தின் சில தேன் துளிகளை சொல்கிறேன் ..தித்திப்பை நீங்களும் ரசியுங்கள் ..

சாரநாத்தில் ஒரு நாள்…. சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது..

நிலமெங்கும் பூக்கள்…

பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.

நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்…. எத்தனைவிதமான மலர்கள்…! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும் ..

உறங்கும் கடல்…

தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன….

2. எழுத்துச் சித்தரின் வரிகளை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை .. பாலா ஐயாவின் வரிகளை புத்தகங்களை வரிசை செய்து வகை செய்யும் அளவிற்கு எனக்கு பக்குவம் இல்லை என்றாலும் ஐயாவின் வரிகளில் வாழ்க்கையை உணரலாம்.

 balakumaran

மனசோ உடம்போ சோர்வாவும் பொழுது ஐயாவின் புத்தகம் போன்ற மருத்துவன் வேறு யாரும் இல்லை ..

ஐயாவின் வரிகளில் எனது அடி நாதம் வென்றவை …

மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை.

அக்கறைக்குப் பெயர் காதல் காதலுக்கு பெயர் அக்கறை, வேறு வார்த்தையில் மதித்தல் காதல் என்பது மதித்தல்.

உலகத்தில் எந்த உயரினமும் ஒன்றை விட ஒன்று உயர்ந்ததே இல்லை. சகலமும் ஒரே விஷயம். உண்ணும் உணவால், வடிவத்தால் இயற்கை சூழ்நிலையால் உருவங்கள் மாறலாமே ஒழிய இலையில் இருக்கும் புழுவும், மனிதனும் ஒன்றே. இதில் கர்வப்பட ஒன்றுமில்லை. — குன்றிமணி

விவேகம் என்பது திமிர் அல்ல. விவேகம் என்பது அடக்கமும் அல்ல, சூழ்நிலையின் உண்மையை தனது வலிமையை பற்றித் தெளிவாக யோசிப்பதே விவேகம்.

ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன்.தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.- சுழற்காற்று

நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒரு ஆண் இருந்துவிட்டால் அதை விடப் பெரிய நிம்மதி ஒரு பெண்ணுக்கு எதுவுமில்லை. -உத்தமன்….

பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, எந்த இடத்தில் அன்பும், மரியாதையுமாய் நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும் சிறந்து விளங்கும்.–என் கண்மணித்தாமரை

3. குடும்ப உறுப்பினர்களின் மூலம் அறிமுகமானவர். ரமணிசந்திரன் என்ற பெயர் மனதில் பதியவும், சந்தர்ப்பம் வாய்த்தபோது தேடிப்பிடித்து படிக்கவும் தொடங்கினேன்..

 ramanichandran

இவர் கதைகளில் கதாநாயகிகளை அத்தனை கண்ணியமாக காட்டி, அவருடைய எண்ண ஓட்டங்களை சொல்லும் போது படிக்கும் பலருக்கும் புத்தி சொல்லும் விதமாக, எது நல்லது, எது கெட்டது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது, எது தப்பு, எது சரி, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்மைக்கு உதாரணம் தருவது அருமை.

சில நேரங்களில் அந்த கதாநாயகிகள் ஆகவே கற்பனை செய்து பார்ப்பதும் உண்டு … படிக்கும் போதே நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மில் இருக்குமோ என்றே எண்ண வைக்கும் எழுத்து இவருடையது….

4. விகடனில் தொடராக வந்து படித்ததுதான் என்றாலும் மீண்டும் புத்தகமாக வாங்கி படிக்க ஆரம்பித்தேன்… இன்று வரை மீள இயலவில்லை!

 vairamuthgu

திரைப்படங்களிலும் நாடகத்திலும் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ மட்டும் எப்படி இவ்வளவு சோகம் என்று நான் நினைத்தது உண்டு. அது சினிமாவில் மட்டுமே சத்தியம் என்று நினைததுவுண்டு. ஆனால் இந்த கருவாச்சி காவியம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.

வைரமுத்து ஐயாவின் வைர வரிகளில் என் கண்களை குளமாக்கிய கருவாச்சி காவியம் பற்றித்தான் சொல்கிறேன் ..

ஒத்தையில கருவாச்சி புள்ள பெத்தது. படிக்கும் போதே உசிரு ஒடுங்கி ஒரு நடுக்கம் வருவது தடுக்க முடியாது

கருவாச்சி, அவ ஆத்தா பெரியமூக்கி, கொண்ணவாயன், கட்டையன், அவனப்பன் சடையதேவர், கருவாச்சி மகன் அழகுசிங்கம், கெடா பூலித்தேவன், வைத்தியச்சி, கனகம், பவளம். இவங்க எல்லார் கூடவும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடிச்ச அனுபவம் இருக்கும் இத படிச்சி முடிச்ச உடனே.

நல்லா காவியம் படிச்ச சந்தோஷமா?.. கதைல உள்ள சோகமா?.. எது விஞ்சி நிக்குது-னு தெரியாது.

எதை சோகங்கள், எதனை வலிகள். படிக்கும் பொழுதே எனக்கு கண்களில் கண்ணீர். காவியங்கள் என்பது இதிகாசங்களில் உள்ள ஒன்று என்று நினைத்திருந்த என் எண்ணங்களை இந்த கருவாச்சி காவியம் முற்றிலும் மாற்றிவிட்டது.

5. நிலவையும் தாளில் கொண்டு வந்த வித்தகக் கவி பா.விஜய். கி.பி, கி.மு நடந்த நிஜங்களை காதல் சோகங்களை கவிதைகளாக கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் கவிஞர் பா.விஜய் . சரித்திர கால காதல் நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட காதல்களை கவிதைகளாகத் தொகுத்து நெய்யப்பட்டது இந்த உடைந்த நிலாக்கள்.

 pavijay
பா.விஜயோட “உடைந்த நிலாக்கள்” ஆகச் சிறந்த கவிதை தொகுப்பு. இதை படிச்சவங்களுக்கு நல்லா தெரியும் பெண்களால எத்தனை ராஜ்ஜியம் எழுந்திருக்கு… எத்தனை ராஜ்ஜியம் வீழ்ந்திருக்குனு…

ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்… இப்படி நீண்டுட்டே போகும். இவங்க வாழ்க்கைல நடந்த பெரும் மாற்றங்களுக்கு பின்னாடி பெண் மட்டும்தான் முக்கிய காரணம்.

“பெண் என்னும் பிஞ்சு பிராவகமே! கனவாக நீயிருந்தால் கண்விழித்தா நான் இருப்பேன்? நிலமாக நீயிருந்தால் நடக்க மாட்டேன். தவழ்ந்திருப்பேன் முள்ளாக நீயிருந்தால் குத்திக் கொண்டு குதூகலிப்பேன் தீயாக நீயிருந்தால் தினந்தோறும் தீக்குளிப்பேன் தூசாக நீயிருந்தால் கண் திறந்து காத்திருப்பேன் மழையாக நீயிருந்தால் கரையும் வரை நனைந்து நிற்பேன்”

எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி. இப்படி படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக்கூடியதில்லை.

ஒரு புத்தகம் வாசிக்கும் பழக்கம் வரும்போது அதை தொடர்ந்து அந்த புத்தகத்தின் ஆரம்பம் ஒருவிசயத்தில் தொடங்கி மெல்ல தன் வசப்படுத்துகிறது ,பிறகு ஒரு இடத்தில் நம்மை யோசிக்க வைத்து விட்டு ஏதோ ஒரு முடிவை சொல்லியதுபோல தந்து விட்டு குழந்தைகளின் யோசிக்கும் திறனை தொடங்கிவிடுகிறது என்பதோடு  சூசன் கிரின்பீல்ட் நிறுத்திவிடவில்லை.அதை படித்து காட்டும் பக்குவத்தையும்  பொறுளையும் நாம் சொல்ல சொல்லும்போது மூளை செல்கள் ஊக்கம் பெற்று படிப்பில் அவர்களுக்கு ஒரு தொடர்ப்பை ( Continuity ) நினைவுறுத்த பயிற்சி தருகிறது என்கிறார்.அது மட்டுமல்ல இது கம்யூட்டரில் செலுத்தும் கவனத்தை விட பல மடங்கு பலன் தருகிறது என்கிறார் .

 book3

மனிதரில் நாம் தரம் பிரிப்பதை போல புத்தகமும் அவ்வளவு சுலபமாக எடை போடுவது தவறான பார்வை .ஒவ்வொரு புத்தகமும் ஒரு புதிர்தான் .அந்த புதிரை அவிழ்க்க பலருக்கும் பொருமை இருந்தாலும் ஏன் இவன் இப்படி எழுதுகிறான் என்று எழுதியவன் தளத்தில் நின்று பார்க்கும் பக்குவம் வரவேண்டும் என்பது ஆரோக்கியமான சிந்தனை .

சமுதாய வளர்ச்சியில் தனிமனித பங்காக வாசிப்பை சொல்வேன் நான் ..

வாசிப்பவன் என்றுமே பிறரை நேசிப்பான் ..

பிறரை நேசிப்பவன் என்றுமே தவறு செய்ய மாட்டான் …

வாசிப்போம் …வளம் பெறுவோம் …

 book4

விரல்களற்றவன் கையில் கிடைத்த 
வீணை போலவீணாய் கழியும்.
கைகளில் புத்தகம் 
இல்லாத மாலைகள்…
எழுத்தை இனித்து 
புசிக்கும் வேளைதனில் 
வயிற்றுப் பசி
எட்டி நின்றுவிடும் …
நானே என்னை தொலைக்கவும் 
நானே என்னை கண்டெடுக்கவும் 
புத்தகம் மட்டுமே
துணை  வருகின்றன.
விதைந்த வரிகளில்
கவிதையாக கருவாகி 
பக்கங்களில் உயிர்த்து 
சுவாசம் செய்யும் பொழுது 
விடிந்தது மனமும் வானமும்.

  • ப்ரியா கங்காதரன்

book6

ப்ரியங்களுடன் ப்ரியா – 13

ஒரு கூட்டு கிளியாக… ஒரு தோப்பு குயிலாக!

நிலவு ஊடுருவ 
முற்றத்தில் 
பாட்டி கதை சொல்ல 
அம்மா சோறு ஊ ட்ட 
அப்பா தலை கோத
தங்கை விரல் நீவ
குடும்பம் ஒரு கதம்பமாக 
அழகான ரோஜா கூட்டம் நடுவில் 
ஆசிர்வதிக்கப்பட்ட 
தேவதையாக நான்!

ஒரு கூட்டு கிளியாக… ஒரு தோப்பு குயிலாக… குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றி , இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும் சிட்டுக்குருவிகள் போல . சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு நமது கூட்டு குடும்பம்.  அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம் நமது குடும்ப முறைகள் . இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழும் நிலை காலத்தின் கட்டாயமாக…

p1

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும்கூட கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என நன்றாகவே இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன.

மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் மெல்ல மெல்ல நம்மையும் மாற்றிவிட்டது.

தமிழ்ச்சமுகம் மற்ற சமுகத்தை போல் சீரழியாமல் இருந்ததற்க்கு காரணம். கூட்டு குடும்ப வாழ்க்கையும் அங்கு உருவான அன்பும் தான்;. கூட்டு குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனையென்றால் ஒடி வந்து உதவும், ஆதரவு தரும் அன்பும், நேசமும் அங்கிருந்தது. குடும்பத்தில் வேலைகள் பங்கிட்டு செய்யும் ஒற்றுமையிருந்தது. மாமியார் கொடுமைகள் கூட்டு குடும்பத்தில் அவ்வளாக இருந்ததில்லை. பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற திட்டமிடல் இருந்தது. கூட்டு குடும்பத்தில் ஆண்கள் போதை, பேதைகளுக்கு அடிமையாக பயந்தனர். பெண்கள் குடும்பத்திற்க்கு தெரியாமல் எதையும் செய்ய தயங்கினர். உற்றார் உறவினர்களுடன் நெருக்கம் வளர்ந்தது. நல்ல நண்பர்கள் யார் என்பதற்க்கான அடையாள படுத்தல் இருந்தது. கூட்டு குடும்பத்தில் வளரும் இளம் வயது இளைஞன் இளைஞிகள் தவறு செய்ய தயங்கினர்.

இப்போதைய நிலைகள் என்ன ?? சிதைவை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது நமது குடும்ப அமைப்பு முறைகள் ..

பொருளாதாரத் தேடலுக்காக உறவுகளை பிரிந்திருந்தாலும், அவ்வப்போது கூடி மகிழ்ந்து உறவைப் போற்றுவோம். அப்படி உறவுகளைப் போற்றும் சந்தோஷ குடும்பங்களின் அனுபவங்களை, பகிர்ந்து கொள்வோம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து குடித்தனம் செய்வது தான் கூட்டுக் குடும்பம். என்னைப் பொறுத்தவரை கூட்டுக் குடும்பத்தில் நிறைய கற்றுக் கொள்ளலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள,ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க, நம்முடைய முன்னோர்களிடமிருந்து நம்முடைய பழக்க வழக்கங்களையும்..நடை முறைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.

வைசு ஸ்கூல்ல மிஸ் எல்லா குழந்தைங்க கிட்டயும் அவங்க குடும்பம் பத்தி கேட்டிருக்காங்க. வைசு சொல்லி இருக்கா எங்க வீட்டுல 7 பேரு இருக்கோம்.. தாத்தா,பாட்டி, சித்தி,சித்தப்பா, நான், அப்பா,அம்மா எல்லாரும் கூட்டுக்குடும்பமா இருக்கோம்னு சொல்லி இருக்கா, கிளாஸ்ல 37 குழந்தைங்க இருக்காங்க நீ மட்டும் தான் கூட்டுக் குடும்பத்தில் இருந்து வர கேட்கவே சந்தோசமா இருக்குனு சொல்லிருக்காங்க…  7 பேர் இருக்க குடும்பத்துக்கே மிஸ் இவவளவு சொல்லி இருக்காங்க.. அப்போ என் சின்ன வயசுல இங்க எப்படி இருந்தாங்கனு தெரிஞ்சா இன்னும் என்ன சொல்லி இருப்பங்கனு தோணுச்சு.. அப்போ யோசிச்சேன் கூட்டு(க்) நம்ம குடும்பம் பத்தி எழுதாமேனு..

சின்ன வயசுல ஸ்கூல் லீவுக்கு ஒவ்வொரு முறையும் பல்லடம் வருவதற்க்கு ரொம்ப புடிக்கும்.. சின்ன பாட்டிகள் இருவருக்கும் ஒரே குடும்பத்தில் திருமணம் அண்ணன், தம்பி என.. ஒவ்வொருக்கும் சுமார் 8 குழந்தைகள், இது போக வீட்டிற்க்கு வரும் விருந்தினர்கள், அம்மா, பெரியம்மா, சித்தி, என லீவுக்கு வரும் குழந்தகள் வேறு… இந்த காலத்தில் ஒரு குழந்தையை வளர்க்கவே ரொம்ப கஷ்டம் அந்த காலத்துல எப்படி தான் இந்தனை குழந்தைகளை வளர்தாங்களோனு நினைச்சா இப்போ கொஞ்சம் பிரமிப்பா தான் இருக்கு..

பாட்டிங்க கிட்ட அந்த காலத்து கதை எல்லாம் கேட்கும் போது ரொம்ப சுவாரஸ்யமா தான் இருக்கும்.. சமையல்ல எல்லாம் இப்போ ஆட்ட,அரைக்கனு எல்லா வசதியும் வந்திடுச்சு அந்தக் காலத்துல இவ்வளவு பேருக்கும் எப்படி சமைச்சிருப்பாங்க..? அந்த பெரிய ஆட்டாங்கல்ல இப்போ ஒரு சுத்து சுத்தரருக்கே இவ்வளவு சோர்வாகி விடுது…

அத்தைங்க சமையலும் அப்படிதான்.. பாட்டிங்க தான் ஒரே வீட்டிலிருந்து வந்தவங்க..  ஆனா அத்தைங்க எல்லாம் அப்படி இல்லையே வேற வீட்டிலிருந்து வந்தாலும் அவ்வளவு ஒற்றுமையா தான் இருப்பாங்க.. எல்லா மாமாங்களுக்கும் திருமணம், அவர்கள் குழந்தைகள்ன்னு இன்னும் அதே ஓற்றுமைதான் அனைவருக்குள்ளும். இன்றும் எங்க வீட்டில் விசேஷம் என்றால் ஒரு நேரத்திற்கு 80 பேருக்கு சமைக்கனும், ஒரு அத்தை அடுப்பு பார்த்து பார்த்துப்பாங்க, இன்னொரு அத்தை காய்கறி எல்லாம் வெட்டி பண்னுவாங்க, நல்ல வேளை எனக்கு எல்லாம் பரிமாறும் வேலை மட்டும் தான்( மருமக அடுப்படியில கஷ்ட படக்கூடாது நினைச்சிருப்பங்க போல ).. சின்ன வயதிலிருந்து பார்ததினாலோ என்னவோ திருமணத்திற்க்கு பின்னும் இயல்பாய் அவர்களுடன் இருக்க முடிந்தது என் வரம்..

இன்றும் வீட்டின் மூத்த மருமகள் இப்படிதான் இருக்கனும்.. பார்த்துக்க எப்படி செய்யறோம் நீயும் நாளைக்கு இப்படி தான் இருக்கனும்னு சொல்லுவாங்க.. தாத்தா, பாட்டிக்கு வயதானாலும் இன்றும் மரியாதையாய்,அன்பாய், பாசமாய் அவர்களுக்கு வேண்டியதை செய்கிறார்கள்… ஊரிலும் எங்க குடும்பத்திற்க்கு இருக்கும் மரியாதையே தனிதான்..

கூட்டு குடும்பம் ஒன்றில் தானே அன்பும் நெஞ்சம் அதிகம் இருக்கும் ..
வீட்டு வேலை குவியும் போதும் ஆளுக்கொன்றாய் செய்தே முடிக்கும்..
மனந்தனை சுமக்கும் அணுக்கள் போலவே..
சின்ன சின்ன வேலைக்கே பிள்ளை உண்டு வீட்டிலே..
தாகம் வந்த நேரத்தில் தண்ணீர் கொண்டு தருவாளே..
தடம் மாறி போகும் போது வழி காட்ட பெரியோர் உண்டு..
பசி என்று சொல்லும் முன்னே பரிமாறும் கைகள் உண்டு..
ஒரு மரக்கூட்டிலே பறவைகள் போலவே வாழ்வதும் ஆனந்தம்.. என்று சொல்வதும் சரிதான்…

கூட்டுக் குடும்பத்தின் நன்மைகள்

என்னைப் பொறுத்த வரையில் நிறைய நன்மையே கிடைத்தது எனலாம். இன்றும் எவ்வளவு வேலை இருந்தாலும், முகம் சுளிக்காமல் , என்னால் வேலை செய்ய முடிகிறது. அடுத்தது, சகிப்புத் தன்மை, இவங்க  இப்படிதான் இவர்களைக் ஏன் குறை சொல்லனும் . ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கத் தான் செய்யும் என்று ,  என்னை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முயற்சிப்பேன், முடியவில்லை என்றால் விட்டு விடுவேன்.. எல்லோருடனும் பேசிக் கொண்டு வேலை செய்வது  வேலை பளுவைக் குறைக்கிறது,

பண்டிகை நாட்களில் பலாரங்கள் செய்ய, பாத்திரங்கள் தேய்ப்பது, வேலைக்காரி இல்லாவிட்டால், தன் கையே தனக்கு உதவி என்றிருப்பது, அவசரத்திற்கு புடவை, நகைகளை, மாறிக்கொள்வது,  வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வது, தாராள குணம், பெருந்தன்மையாக விட்டுக் கொடுப்பது, உறவினர்களுக்கு நல்ல விருந்தோம்பல் செய்வது என இவை எல்லாம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

புதிதாக எந்த ஒரு வேலை செய்ய துவங்கும் போதும் நமக்கு பக்க பலம் இருக்கிறது என்பதே நம்மை ஊக்குவிக்கும்.. எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும் பெரியவர்களை கலந்து பேசி முடிவெடுக்கலாம். அவர்களுடைய அனுபவம் நமக்கு நல் வழிக் காட்டும். ஒருத்தருடைய பலம் , பலவீனம் அறிந்து வேலைகளை செய்யலாம்.முக்கியத்துவம் கொடுப்பதால் , சீக்கிரத்தில் அங்கீகாரம் கிடைக்கிறது. அன்பும்,பண்பும் பரிமாறி , உதவும் வழக்கம் இருப்பதால் சகிப்புத் தன்மை வருகிறது..பெரியவர்கள் எப்படி சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துகிறார்கள் என்று அனுபவத்திலே தெரிந்து கொளவதால், அதை அடுத்து ,அடுத்து வரும் சந்ததியும் அந்த வழி முறைகளைக் கடைப் பிடிக்க முடிகிறது.

ஒரு கலர் ப்பென்சில் பாக்ஸில் எவ்வளவு விதமான கலர்கள்..எல்லாம் தனித்து இருந்தாலும் அவற்றை வைத்து ஒரு படம் வரையும் பொழுது, எல்லா கலருமே தனித்தனியாக பிரதிபலிப்பதைப் போல தான் கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களும்.. தனித்து இருந்தாலும் குடும்பம் ஒன்றாக சேரும் போது ஒப்பற்ற ஓவியமாக திகழும்..

போன வருஷ கோடை கொண்டாட்ட நினைவுகள் :

பள்ளியின் கோடை விடுமுறை ஆரம்பிக்கும் முன்னரே, என் மகள் ஆரம்பித்து விட்டாள். லீவுல போர் அடிக்கும்… நான் என்ன செய்யுறது..?

போன விடுமுறைகளில் காலை 8 மணிக்கு எழுந்து 8.05க்கே ‘ரொம்ப போர் அடிக்குது’ என்று அவள் புலம்பிய ஞாபகங்கள் என் வயிற்றில் புளியைக் கரைத்தன…

போன தலைமுறைப் பிள்ளைகளின் அகராதியில் ‘போர்’ என்ற சொல் இருந்ததேயில்லை.. பரீட்சை முடிந்த நாளே எல்லோரும் கிளம்பி பாட்டி வீட்டுக்கு ஓடிவிடுவோம். எல்லா பேரன் பேத்திகளையும், உட்கார வைத்து, கல் சட்டியில் சுண்ட வைத்த குழம்பில் சோற்றைப் பிசைந்து, உருட்டி, குட்டிக் குட்டியாய் மலர்ந்திருக்கும் உள்ளங்கைகளில் பாட்டி வைக்க, சோற்று உருண்டைகளை விழுங்கும் குழந்தைகளைப் பார்த்தால், புத்துணர்வு முகாமுக்குப் போன யானைகள் கூட வெட்கப்படும்….

வீட்டின் கூடத்தில் தலையணைகளையும் பாய்களையும் பற்றிக் கொண்டு, அனைவரும் படுத்திருப்போம்… பாட்டி வந்ததுமே கதை செஷன் ஆரம்பம்…

’சண்டையில் ஜெயிச்சப்புறம், அனுமார் வந்து சீதையைப் பாத்தாராம்.. இவ்வளவு நாள் கஷ்டப்படுத்தின அரக்கிகளுக்கு ஓங்கி ரெண்டு அடி வைக்கட்டுமா..? ந்னு கேட்டாராம்.. பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ‘நாந்தான் அனுமார்… இவதான் அரக்கி ! ந்னு பக்கத்திலிருக்கும் தங்கையை ஒரு ‘பஞ்ச்’ விட முயற்சித்த அக்காவை செல்லமாக மிரட்டி, நீ அரக்கி இல்லடி… அழகின்னு சமாதானம் சொல்லும் பாட்டியின் மடியில் தலை வைத்து உறங்கி.. வெயிலில் பாழாகாமல் விளையாடி, வயிறு வாடாமல் எதையும் தின்று, கதை கேட்டுக் கண்ணயர்ந்த காலங்களில் போராவது… ஒன்றாவது….

மீண்டும் பாட்டி வீட்டில் சிறு பிள்ளையாக மனம் தவழ நானும் மழலை ஆனேன்.

கூட்டுக் குடும்பத்தில் தியாகம்   விட்டுக்கொடுக்கும் தன்மை பகிர்ந்து உண்ணுதல்  ..மரியாதை, கருணை ,,தலைமை வகிக்கும்  திறன் குழந்தைகளின்  சிறந்த  வளர்ப்பு… இப்படி  எத்தனையோ  நன்மை!

கூட்டு குடும்பம்

எல்லையில்லா  ஆனந்தம் ,
உறவினர்களின் சுற்றம்
உறவை வளர்க்கும்  ஏற்றம்
கூட்டுக் குடும்பம் ,
மனம் கொண்டாட்டம்
இணைந்து செய்யும் செயலே தனிதான்
அதில் இருக்கும் பெருமையும் தனிதான்
தியாக மனப்பான்மை தன்னால் வளர ,
விட்டுக்கொடுக்கும் தனமைப் பெருக ,
பெரியவர்கள் ஆசிகள் தினமும்  சூழ
அன்பு மழையில்  ஓயாமல் நனைய
கூட்டுக் குடுமபம் திரும்ப வரணும்
இன்ப ஊற்று மீண்டும் பெருகணும் ..

வாழ்க்கையும்  ஒரு கொடுக்கல் வாங்கல் போலதான், இந்தக் கையால் கொடுத்தால் அடுத்தக் கையால் பெறலாம் அன்பைகூடி வாழ்ந்தால் கோடி நன்மை…
IMG_20150821_160058

நிலவு ஊடுருவ 
முற்றத்தில் 
பாட்டி கதை சொல்ல 
அம்மா சோறு ஊ ட்ட 
அப்பா தலை கோத
தங்கை விரல் நீவ
குடும்பம் ஒரு கதம்பமாக 
அழகான ரோஜா கூட்டம் நடுவில் 
ஆசிர்வதிக்கப்பட்ட 
தேவதையாக நான்!

  • ப்ரியா கங்காதரன்