தினமுமே லவர்ஸ் டே தான்!

10834995_852988401426969_8795192751527054828_o
பொண்ணு பாக்க வந்தபோது, வழக்கம் போல (இல்ல கேக்கணுமேன்னு ஒரு ஃபார்மாலிட்டி ஃபில் பண்ண) குருவோட அம்மா, “உனக்கு பாடத் தெரிமா”ன்னு கேட்டாங்க… அப்போ நா கேவலமா திருதிருன்னு முழிக்கிறதைப் பார்த்து, குரு அவசர அவசரமா “அதெல்லாம் வேண்டாம், பாடத் தெரிலன்னா பரவால்ல” என்று அபயமளித்தார் பாருங்க, அப்படியே வயித்துல பூஸ்ட் வார்த்த மாதிரி இருந்துச்சு… அப்போதான் எனக்கு அவுரு மேல லவ்வு ஸ்டார்ட்டிங் !
“இந்த ஏற்பாடுகள் எல்லாம் உன் விருப்பப்படி தானே நடக்குது… உனக்கு சம்மதம் என்றால், நிச்சயாதார்த்தம் செய்ய ‘கோ அஹெட்’ சொல்லிடவா அம்மா-அப்பாகிட்ட” – இதுதான் குரு என்னிடம் முதலில் பேசிய வார்த்தைகள்.
ஆஹா, தானே முடிவு பண்ணாமல் நம்ம கருத்தையும் கேக்குறாரே என்று அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சுட்டேன். அப்புறம் வெச்சாரு டுவிஸ்டு…
“Ok… see you soon… take care … ஹாங்… உன் பேரு என்ன … சாரி… நினைவில்ல” என்றாரே பாக்கலாம். நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்! இருந்தாலும், அவர் நேரடியா கேட்ட சின்சியாரிட்டில இம்ப்ரெஸ் ஆகிட்டேன்.
இப்படியாக, அவர் மேல ஸ்டார்ட் ஆன காதல் ஸ்டிராங்காச்சு.
அப்புறம் என்ன… மறு நாளே நிச்சயதார்த்தம்தான்!
மறு நாள் அவுங்க அண்ணன் வீட்டுல நிச்சயதார்த்தம், தடபுடலா நடந்தது. நிச்சயம் முடிஞ்ச உடனே ஒரு மணி நேரம் பேச டைம் கிடைத்தது. மொட்டை மாடி… சுற்றி நிறைய மரங்கள்… மறைந்து கொண்டிருக்கும் மாலை சூரியனின் இதமான மஞ்சள் வெயில், அழகிய இளம் ஜோடி (அவ்வ்வ்வ்வ்) அப்டின்னு ஒரே ரொமாண்டிக்கா இருந்தாலும், நாங்க என்னவோ கொஞ்சம் மொக்கயாத்தான் பேசிக்கிட்டோம்.
பேச்சுக்கு நடுவுல அவர், “நா ஒரு டீ டோட்டலர்” (அதாவது எந்த கெட்ட(?!) பழக்கமும் இல்லாதவர்) என்று சொன்னார். அதான் கொயந்த புள்ள மாதிரி இருக்குற மூஞ்சைப் பாத்தாலே தெரியுதே, என்று நினைத்துக் கொண்டு, பின்பாதியை மட்டும் கொஞ்சம் டீசன்டா சொன்னேன்… “உங்களைப் பார்த்தாலே தெரியறது” என்று. அவருக்கு ஆச்சரியம். ’’அட அப்படியா… முகத்தைப் பார்த்தே இதெல்லாம் கண்டுபிடிப்பியா, வெரிகுட்’’ என்றார்.
ஆனா, அவர் என்னை நக்கலடித்தார் என்பது பின்னாளில்தான் தெரிந்தது. அடச்சே… சாச்சுப்புட்டாக மச்சான்.
நிச்சயதார்த்தம் முடிந்த 3ம் மாசம் கல்யாணம். அவ்வளவு நாள் ஒழுங்கா போயிட்டிருந்த டைம், நிச்சயத்துக்கப்புறம் ரொம்ப மெதுவா போற மாதிரிலாம் ஒரே ஃபீலிங்கு. எங்கம்மா வேற ’சமைக்கக் கத்துக்கோ’ன்னு ஒரே நச்சரிப்பு. (ஒண்ணும் கத்துக்கல… சும்மா கிச்சனுக்குப் போய் செஞ்சு வெச்ச சாப்பாட்டை தின்னுட்டு வருவேன், அம்புட்டுதான். ஆனா, சமைக்க கத்துண்ட மாதிரி பில்ட்-அப் எல்லாம் ஓவரா கொடுத்தேன். அதான் நமக்கு கை வந்த கலையாச்சே… ஹிஹி)
ஒவ்வொரு ஞாயிறும் இவர் போன் பண்ணுவார். சண்டேன்னாலே எப்போடா போன் வரும்னு வெயிட் பண்ணுவேன். போன் பெல் அடிச்சா இவர்தான்னு தெரியும். ஓடிப்போய் எடுக்கணும்னு கை பரபரக்கும். ஆனா, எங்கப்பா எங்க எல்லாரையும் ஒரு லுக்கு விட்டுக்கிட்டே, தான் ஃபோனை எடுத்து 2 வார்த்தை பேசிட்டு, இந்தா உனக்குத்தான், மாப்பிள்ளை லைன்ல அப்டினுட்டு குடுப்பார். ’டியர் தகப்பா, உங்க அராஜகத்துக்கு எல்லையே இல்லையா, அது இவருதான்னு தெரியாதா?’ என்ற அர்த்தம் பொதிந்த லுக்க அவருக்கு விட்டுட்டு, நா பேசுவேன். வீட்டுல எல்லாரும் என்னையே பாப்பாங்க. என்ன பேசுறது… அல்ப மேட்டர்லாம் பேசிட்டு (ஒரு 2 நிமிஷம்). போனை வைப்பேன். இருந்தாலும், சந்தோஷமா இருக்கும். இனிமே அடுத்த சண்டேதான். அவ்வ்வ்வ்…
என் பர்த்டேக்கு அவர் அப்போ கிரீட்டிங் அனுப்பினார். எனக்கு அவ்ளோ குஷி. எல்லாருகிட்டயும் பெருமையா காட்டிண்டேன். I still have that 🙂
ஒரு வழியா 3 மாசம் ஓடியது. நாளைக்கு கல்யாணம். இன்னிக்கு ஈவினிங் ரிசப்ஷன். (மாப்பிள்ளை அழைப்புக்கு பதிலா) அவுங்க மண்டபத்துக்கு வந்து இறங்கிய சிறிது நேரத்தில், மணப்பெண் ரூமுக்கு (அட எனக்குத்தான் ) ஒரு மிகப்பெரிய நெருக்கமாகக் கோர்க்கப்பட்ட மதுரை மல்லி ஒரு பந்து வந்தது. என்னோட ஸ்பெஷல் அலங்காரத்துக்காக, என்னவர் வாங்கி வந்தது. எப்புடீ… சும்மாவே நா ஆடுவேன். இவரு வேற இப்படிலாம் சலங்கை கட்டி விட்டா, கேக்கணுமா? அப்படியே ஜிவ்வ்வ்னு ஒரு சந்தோஷம்.
இதுதான் என் ரிசப்ஷன் போட்டோ. அவரு எவ்ளோ ஸ்மார்ட்டா இருக்கார் இல்ல. என் மூஞ்சிதான் சரியில்லை. போட்டோகிராபர் நல்லாவே என்ன எடுக்கல… கிர்ர்ர்ர்
10961810_852951438097332_1657014719_n
மறுநாள் பொழுது புலர்ந்தது. காத்திருந்த அந்த நாள் வந்தே விட்டது. முதல் நாள் ரிசப்ஷன் முழுவதும் ஏதேதோ ஜோக்கடித்து சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குத்தான் டென்ஷன்.  நான் கூலாக நெடுநாள் பழகிய நண்பனை சந்திக்கப் போவது போல் ஜாலியாக ரெடியாகிக் கொண்டிருந்தேன்.
பொதுவாக திருமணத்தில் பல சுவையான நிகழ்வுகள் இருக்கும். மாப்பிள்ளை காசி யாத்திரை செல்வது, பெண்ணின் தகப்பனார் போய், ’என் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கிறேன், நீங்கள் திரும்பி வாருங்கள்’ என்று அழைப்பார். ’ஏய் அவரை ரொம்ப தூரம் போக விட்ராதீங்கோடி, சட்டு புட்டுனு கூட்டிண்டு வந்திருங்கோ’ என்று ஜோக்கடித்துக் கொண்டிருந்தேன்.
10979464_852951584763984_1863865551_n
மாலை மாற்றுவது என்பது இன்னொரு குஷியான நிகழ்வு. மணமகன் மற்றும் மணமகளை அவரவர் தாய் மாமன் தோளுக்கு மேல் தூக்கிக் கொள்வார்கள். பெண்ணும் மாப்பிள்ளையும் தன் கழுத்தில் இருக்கும் மாலையைக் கழற்றி, மணமகனுக்குப் போட வேண்டும். அப்போது சரியாகப் போட விடாமல் மணமகனின் மாமன் அவரை இழுத்துக் கொள்வார். இருந்தாலும் சரியாகப் போட்டு விட்டால், ஓஹோ என்று கரகோஷம்தான். அப்புறம் மாப்பிள்ளை, மணப்பெண் கழுத்தில் மாலையிட வரும்போது இதே போல கூத்து நடக்கும். செம்ம ஜாலியாக இருக்கும். நான் அவருக்கு வெரட்டி வெரட்டி மாலையைப் போட்டேனாக்கும். ’சரியா தூக்கு மாமா’ என்று என் மாமாவுக்கு வேறு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்தேன். ஹிஹி…
10927972_852951561430653_933909292_n
10965880_852951568097319_1535254738_n
அப்புறம் ஊஞ்சலில் அமர வைத்து, தம்பதியினருக்கு பாலும் பழமும் கொடுப்பது, பிறகு பச்சைப் பொடி சுற்றுவது என்றெல்லாம் அழகிய சம்பிரதாயங்கள்… ஒரு தட்டு முழுவதும் மஞ்சள், சிவப்பு நிறங்களில் சாதத்தை உருண்டையாக உருட்டி, மணமக்களின் தலையச் சுற்றி, திருஷ்டி கழித்து 4 திசைகளிலும் எறிவார்கள்.
இப்படி எல்லா வைதீக சடங்குகளும் முடிந்து, முகூர்த்த நேரமும் வந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் நிஜமாகவே கூடி நின்று எங்களை ஆசிர்வதித்தது போல் எனக்கு பூரிப்பு. ஓர் அருமையான தேவ கணத்தில் அவரின் மனையாளானேன்.
10979219_852951558097320_313250869_n
திருமணம் என்பது வாழ்வின் ஒரு முக்கிய அத்தியாயம். அது நல்ல படியாக அமையப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். எனக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டத்தைப் பெற வழிவகை செய்த என் பெற்றோருக்கு என் மனமார்ந்த வந்தனங்கள்.
இது பெற்றோர் பார்த்து செய்வித்த திருமணம் என்றாலும், கண்ட நாள் முதல் இன்று வரை அளவற்ற  காதலுடன் வாழ்க்கையைக் கொண்டாடும் எங்களுக்கு, தினமுமே லவர்ஸ் டே தான்!
– வித்யா குருமூர்த்தி

காதல்… காதல்… காதல்…

Snow-Love-Wallpaper

காதல் குளிர்

ஓர் எலியைப் போல

முதுகு மடங்கி உட்கார விருப்பம்

எனக்கும்

உன் உள்ளங்கைப் போர்வைக்குள்

இத்தனை பாந்தமாய்

‘மவுஸ்’.

1120

புள்ளி இல்லாத கோடுகள்

என்னால் உன்னை

வாசித்தறிய முடியவில்லை

புத்தகத்தின் பின்புறமுள்ள

கணிப்பொறி விலைக்கோடு

நீ.

Red_Rose_flowers

வழுக்கு ஏணி

ஒருமுறை

ஏணி எடுத்து வந்து

ஏறச் சொன்னாய்

மெல்ல மெல்ல

இறங்கிக் கொண்டிருந்தேன்

உன் இதயத்திற்குள்.

rose_buds-normal

காதல் பயணம்

ஒரு டிக்கெட்தான்

எடுத்துச் சென்றேன்

பாவம்

கடைசி வரையிலும்

நீ என் பக்கத்திலேயே

பயணம் செய்ததை

பார்க்கவேயில்லை

பரிசோதகரும் கண்டக்டரும்…

valentines-heart-in-water-free-hd-wallpaper-t2

காதல் வெடிகுண்டு

அவசரமாய் நீ திரும்புகையில்

குவிகிற அழகை

என் செல்போன் கேமராவில்

சேமித்திருக்கிறேன்

விம்மிப் புடைக்கும் அது

எப்போது வெடிக்குமோ?

rose 1

உரிமை ஆசிரியருக்கு

உன் செல்போனுக்கு அனுப்பிய

குறுஞ்செய்திகளையெல்லாம்

தொகுப்பாய் வெளியிட எனக்கு

விருப்பம்தான்

உன் பெற்றோர் பிரசுரிப்பார்களா?

3d-abstract_widewallpaper_red-rose_26213

பொய்யாய் பழங்கதையாய்…

சங்க காலத்தில்

நம் தாத்தா பாட்டிகள்

வெயிலில் மரநிழலில்

இரவில் நிலவடியில்

காதலித்தார்களாமே

நமக்கு

கணிப்பொறி சாட்டிங்

காதல் போதுமா?

water-lillies-x4dq

பிரளயம்

நீ

குளம் சென்று வந்த பிறகு

அலை அடங்கவேயில்லை.

– நா.வே.அருள்

heart_in_sand_1600x1200

Image courtesy:

http://www.afloralaffairpa.com

http://www.hdwallpapers.in

http://wondrouspics.com

http://stuffkit.com

http://www.wallpapersdb.org

http://www.hdwallpapersfree.eu

http://hdwallpaper.freehdw.com

http://www.gebs.net.au