ப்ரியங்களுடன் ப்ரியா–24

தரையில் விளையாடிய காலம் மறந்து
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் …

game4

கூட்டாளிய சேத்துகிட்டு 
பச்சக் குதிரை தாண்டி சகதி மண் மன்னர்களாய் 
சடுகுடுவாடி 
மன  சைக்கிள் ஏறி 
போகததேசம் போய் வந்து 
சலிக்காமல்  சோர்வாகி 
வீடு சேர்ந்து 
கோலி குண்டும் கில்லி 
தட்டியும் ஆயுதமாய் 
கபடி கபடி என பாட்டு 
பாடி  
சரடிழுத்து பம்பரம் சுத்தும் 
கைகள் அதை கண்டு 
உற்சாகமும் பம்பரமாய் 
சுத்தும் ! 

Game2

பெண் குழந்தைகள் எல்லாம் 
பாண்டி ஆடும் ! இல்லை 
கால்கள் பாடியே ஆடும் ! 
பல்லாங்குழியில் முத்திட்டு 
தொட்டாங்கல்லில் 
கைகள் தாளமிடும் ! 

game9
எழூரு எழுகடல் தாண்டி 
ஒழிஞ்சிருக்கும் 
முட்டையெடுக்க 
கண்ணா மூச்சியாடும் 
அதற்கு கண்ணனையே 
துணையாக தேடும் 
என அத்தனையும் இரையானது 
இந்த சின்னஞ்சிறு அலைபேசியின் அகோரப்பசிக்கு…
கையளவு திரையில் காரே ஓட்டலாம் 
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே 
தொலைத்தவைகளை தேடி 
மீண்டுமொரு பால்யம் வேண்டி …

Game1

வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்றாற் போன்று ஓடிக்கொண்டேயிருக்கிறோம் இயந்திரம் போல…

இளைப்பாற சற்று அமரலாம் என்று நினைக்கும் போது துரத்தி வரும் வாழ்க்கையை வெல்ல மீண்டும் ஓட்டம் என வட்டமாகி போன பின்னர் மறந்து போன பால்ய விளையாட்டுகள் எல்லாமே கானல் நீர் ஆகி விட்டது…

பெண்ணுரிமை போற்றிய மகாகவி பாரதியை ரசிக்கும் நாமே

ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் வரியை மறந்து போனோமா அல்லது கடந்து போனோமோ என்று தெரியவில்லை…

இப்போ இதை படிக்கிற எத்தனை பேர் நம்ம குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் விளையாட அனுப்புறோம் ??

இல்லை பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி சொல்லி குடுத்து இருக்கோம் ??

Game3

நம்ம  குழந்தைகளுக்கு நாகரிக உலகில் விளையாட கூட நேரமில்லீங்க… புழுதித் தெருக்களில், புரண்ட நாம்தான் இன்னைக்கு  குழந்தைகளை கான்கிரீட் ரோடுகளில் பாதம் பதியாமல் செருப்போடும், வாகனத்துடன் தான் நடத்துகிறோம்..

விலைமதிப்பிட முடியாத பண்பாட்டுப் பொக்கிசங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம். ஒருகாலத்தில் கிராமத்துச் சிறுவர்களும், சிறுமிகளும் விளையாடிய விளையாட்டுக்கள் கூட சமூக அக்கறை சார்ந்ததாக இருந்தது. உழைப்பவர்களின் செல்வத்தை ஏகாதிபத்தியத்தின் வலிய கரங்கள் கவர்ந்து கொள்ளும் காரியம் காலகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கேரளாவில் நான் பாட்டி வீட்டில் இருந்த போது  பள்ளியில் இருந்து நேராக வீட்டுக்கு வந்த உடன் பையை  ஒரு மூலையில் போட்டுவிட்டு தோட்டத்திற்கு   விளையாட சென்று விடுவேன் !

நிறைய  விளையாட்டுக்கள் விளையாடுவோம்
ஓடிபிடிப்பது, மறைந்து விளையாடுவது , உப்புமூட்டை , மணலில் வீடு கட்டுவது , கோலி , பல்லாங்குழி, திருடன் -போலீஸ் ,பரம பதம், கண்ணாமூச்சி , சிறிய சாமான்களை வைத்து  சோறு பொங்குதல் , போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடுவோம்.

game11

இதில் ஒவ்வொரு  விளையாட்டும்  நம் வாழ்க்கையின் ஒரு உணர்வை வெளிபடுத்தும் ..
ஓடிபிடிப்பது –  ஓட்ட பயிற்சி , உப்புமூட்டை – வலிமை சேர்க்கும் , மணல் வீடு – சோறு பொங்குதல்  போன்றவை சிறுவர்களுக்குள்ள ஒற்றுமையை உணர்த்தும், பல்லாங்குழி – சேமிப்பு மற்றும் எண் கணக்கின் அவசியத்தை உணர்த்தும் , . மேலும்  இரவில் ஒரு விளையாட்டு விளையாடுவோம்  அதன் பெயர்  கூட்டாஞ்சோறு   அதாவது ஒவ்வொருவரும் அவரது வீட்டில் செய்த உணவை, அனைவரும் எடுத்துகொண்டு யாருடைய  வீட்டிலாவது  வைத்து பகிர்ந்து உண்ண வேண்டும் !  தினம் ஒரு வீடு வீதம் , ஒவ்வொரு வீடாக சென்று சாப்பிட வேண்டும் ! இந்த விளையாட்டில் விட்டுகொடுத்தல் , சகோதரத்துவம் , போன்ற பண்புகளை  வளர்க்கும்.

நொண்டி,பச்சை குதிரை, மேடு பள்ளம், கில்லி, தாயம், பரமப்பதம், தட்டாங்கல், ராஜா ராணி, பம்பரம், பட்டம் என நாம் மறந்து போன, மறைந்து போன குழந்தைப் பருவ விளையாட்டுகள் ஏராளம்.

game5

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் ஆன்ட்ராய்டு யுகம் நமது நாட்களை களவாடிக் கொண்டது. கூகிள் ப்ளே ஸ்டோரில் தொடுதிரையை கீறியவாறு விளையாடிக் கொண்டிருகிறோம் தன்னந்தனியாக. ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விளையாட்டு என சீர்படுத்தி, அதில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று வகைப்படுத்தி நம்மவர்கள் இதிலும் புத்திசாலித்தனத்தை ஆழமாக பதித்தவர்கள்.

கடைசியாக இந்த விளையாட்டை எல்லாம் விளையாடி மகிழ்ந்தவர்கள் 1990 முன்னர் பிறந்தவர்களாக தான் இருக்க முடியும். 21 ஆம் நூற்றாண்டு நாளுக்கு நாள் மாற்றத்தை பரிசளித்து, நமது நினைவுகளை பேரழிவுக்குள்ளாக்குகிறது. மாற்றம் மட்டுமே மாறாதது என்ற போதிலும். இந்த அதிவேக மாற்றங்கள் கொஞ்சம் ஏமாற்றமும் அளிக்கின்றன…

game7

வீட்டு வாசலிலிருக்கும் 60 வால்ட் பல்ப் வெளிசத்தில் கிச்சுக் கிச்சு தாம்பலாம்….கிய்யான் கிய்யான் தாம்பலம் என்று மணலை குவித்து குச்சியை ஒளித்து வைத்து விளையாடுவோம்..

இன்று எங்கே தொலைந்து போனது அந்த கேளிக்கைகளும் சந்தோசங்களும்…?

இப்படி எல்லாத்தையும் தொலைசிட்டு நம்ம பிள்ளைங்களுக்கு வேற எதை சேர்த்து வைக்க போறோம் ?

முதலில் பிள்ளைங்க மனநிலையை நாம்தான் மாற்றனும்.

விளையாட்டில் வியர்வை வெளியேறினால் உடம்புக்கு என்னன்னா நன்மைகள் என்று நாம்தான் சொல்லி குடுக்கணும்..

அவங்களை விளையாட அனுமதிக்கணும்.

game10

இவ்வாறான விளையாட்டுக்கள் இப்போது அழிய காரணம் புத்தகசுமை,நேரமின்மை , நகரமயமாதல், என ஒரு புறம் இருந்தாலும்  சிறுவர்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசை என நிறைய  வந்தபின் தான் குழந்தைகள் பள்ளி விட்டவுடன்   குழந்தைகளுக்கான அலைவரிசை , வீட்டு பாடம் , சாப்பாடு , தூக்கம்  என அவங்க  வாழ்க்கையே மாறிக்கிடக்கிறது ! இதற்க்கு பின்னால் வரும் தலைமுறையை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது.

இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டை ஆரம்பிப்போம்!

game8

தரையில் விளையாடிய காலம் மறந்து 
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்..

கூட்டாளிய சேத்துகிட்டு 
பச்சக் குதிரை தாண்டி சகதி மண் மன்னர்களாய்
சடுகுடுவாடி 
மன  சைக்கிள் ஏறி 
போகததேசம் போய் வந்து 
சலிக்காமல்  சோர்வாகி 
வீடு சேர்ந்து 
கோலி குண்டும் கில்லி 
தட்டியும் ஆயுதமாய் 
கபடி கபடி என பாட்டு 
பாடி  
சரடிழுத்து பம்பரம் சுத்தும் 
கைகள் அதை கண்டு 
உற்சாகமும் பம்பரமாய் 
சுத்தும் ! 

game6

பெண் குழந்தைகள் எல்லாம் 
பாண்டி ஆடும் ! இல்லை 
கால்கள் பாடியே ஆடும் ! 
பல்லாங்குழியில் முத்திட்டு 
தொட்டாங்கல்லில் 
கைகள் தாளமிடும் ! 
எழூரு எழுகடல் தாண்டி 
ஒழிஞ்சிருக்கும் 
முட்டையெடுக்க 
கண்ணா மூச்சியாடும் 
அதற்கு கண்ணனையே 
துணையாக தேடும்…

என அத்தனையும் இரையானது 
இந்த சின்னஞ்சிறு அலைபேசியின் அகோரப்பசிக்கு 
கையளவு திரையில் காரே ஓட்டலாம் 
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே 
தொலைத்தவைகளை தேடி 
மீண்டுமொரு பால்யம் வேண்டி …

  • ப்ரியா கங்காதரன்

IMG_20160117_163128

ப்ரியங்களுடன் ப்ரியா–23

ஆதலினால்…
மலரை  விட 
மென்மையானவன் அவன்…
தரையில் பாயும்  வேரை விட 
உறுதியானவன் அவன்…
செல்ல  சண்டையை  
சிறு  புயலாய்  செய்பவன் அவன்…
 ஊடல் கொண்டே 
என்னை உளற வைப்பவன் அவன்…
எனக்கு  முகவரி
அளிப்பவன்  அவன்…
தாயின் தழுவல்களை 
போல கதகதப்பானவன் அவன்…
அடக்காது என்னை ஆனந்தமுடன் 
ரசிப்பவன்  அவன்…
மென்மையான பெண்மையை 
உணர்ந்தவன் அவன்…
நட்பு சுடரேற்றி  என் தனிமை 
இருளை விரட்டியவன் அவன் …
என் ரகசியம் அனைத்தையும் 
தன் ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..
காதோர நரையின் பின்னும் 
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல கோவங்களை 
சிரிப்புடன்  எதிர்கொள்பவன்  அவன்…
என் சின்னச் சின்ன தேடலை  கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீராய்  
உடனிருப்பவன் அவன்…
என்  புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
கனவிலும்  என்னை
மறக்காதவன் அவன்…
தூறல்  கண்ட மண்  போல்
மணமானவன் அவன்…
என்னை  சுமக்கும்
மற்றொரு  உயிரானவன் அவன்..
எனக்கே எனக்கு  அழகானவன் அவன்…
எனக்கு  மட்டும் முழுமையானவன் அவன்…
 காதல் சொல்லி தந்தவன்  அவன்…
 என்னை எனக்கே  அறிமுகப்படுத்திய உயிரானவன் …
அவனே நானாக 
நானே அவனாக ..
அவனில் தொலைந்தே …
ஆதலினால் காதல் செய்வீர் …
l4
காதலர் தினத்திற்கு  வாழ்த்து சொல்ல காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை…. அனைவருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். காதல் அழிவது இல்லை….. இரு இதயங்கள் இணைகின்ற நாள்..உண்மையான காதலினை ஏற்று கொள்வதில் தவறு ஏதும் இல்லை..
காதல் என்றுமே காதலிக்க படும் என்பதில் எந்த ஒரு மாற்றுகருத்தும் இல்லையென்றாலும் ஊரோடு ஒத்து வாழ் நிகழ்வில் இந்த ஒரு நாளும் திருநாளாக மாறியதே ..
என் பள்ளி .. கல்லூரி கால கட்டங்களில் காதல் என்பது ஒரு மிக பெரிய பாவ செயல் போல ஒரு மாய தோற்றம் இருந்தது உண்மைதான் ,,
இப்போ இருப்பது போல எந்த ஒரு தகவல் தொழில்நுட்பமும் மிகுதியாக இல்லாத காலங்களில் என்னோட கல்லூரி தோழர்களின் காதல் பயணங்களை இப்போது நினைத்து பார்த்தாலும் சிரிப்பும் சந்தோசமும் என்னை சுற்றி வந்து விடும் ,,
காதல் கடிதங்கள் … ரோஸ் வாங்கி கையில் வச்சுக்கிட்டு காத்திருப்பது ,,, கடைக்கண் பார்வைக்கு காலையில் இருந்தே காத்திருப்பது …
வார இறுதியில் கோவிலில் சந்திக்க வாரத்தின் முதல் நாளே திட்டமிடல் …  செமஸ்டர் லீவ் 60 நாளையும் தினமும் சபிச்சே கழிச்சது ,,’
அந்த 60 நாளும் அவங்க அவங்க காதலி / காதலன் வீடு . தெரு பக்கம் சுத்துவது … அவன் / அவ வீட்டுக்கு போன் செஞ்சு வேற யாரவது எடுக்கும்
பொழுது பூமியே பிளந்து விடுவது போல உணர்வு …
எல்லோரும் சேர்ந்து ஒரு படம் போக ஒரு மாசமா திட்டம் போட்டும் கடைசியில் மாறி விடுவது ,,
ஹா ஹா ,,, இப்படியே கழிந்து போன எங்கள் கால கட்டங்களை ஒப்பிடும் பொழுது இன்றைய தலைமுறை ரொம்ப குடுத்து வச்சவங்க …
விரல் நுனியில் காதலை வைத்திருக்கிறார்கள் …
வாட்ஸ் அப் … ஐமோ ..FB .. கால் … என 24 மணிநேரமும் காதலும் கையுமாக கலந்து இருக்காங்க ,, அது எவ்வளவு சந்தோசமோ அதே அளவு
கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் சிலரும் இருக்கிறார்கள் என்பதும் கொஞ்சம் வருத்தம் கலந்த உண்மைதான் …
எங்க வீட்டில் படத்துக்கு போகலாம் என்று சொன்னால், வீட்டிலே ஒரு தணிக்கை குழு கூடி அந்த படத்தில் காதல் காட்சிகள் இருக்கா ?? போக கூடிய படமா என்று ஒரு பெரிய ஆலோசனையே   நடந்து எல்லாம் இருக்கு ,,,
இப்போ நடுவீட்டிலே எல்லா கண்றாவியும் வந்திரிச்சு நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ..
நம்மதான் எல்லாத்தையும் சரி செஞ்சு நமக்கான சரியான பாதையை தேர்வு செய்து போகணும்…
l6
காதல் எப்போவுமே தேன்தான்…. இயற்கை சுவையில் என்றுமே திகட்டாது  …
காதலையும் ஒரு வியாபார வணிக நோக்கமாக்கி பணம் சம்பாதிக்க வலி செய்தது இந்த நாகரிக வளர்ச்சி என்றும் கூட சொல்லலாம்.
காதலர் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14ம் நாள் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இது காதலைப் புனிதப்படுத்தும் தினம் என்று காதலர்கள் சொல்ல, இது ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் பாய்ந்திருக்கும் மேல் நாட்டு விஷம் என்று இன்னொரு தரப்பினரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. மற்ற தினங்களிலெல்லாம் பரிசுகளோடும் வாழ்த்துக்களோடும் முடிந்து போகும் கொண்டாட்டம் காதலர் தினத்தில் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கிறதோ..? எனும் அச்சம் சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே உண்டு..
காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடவில்லை எனில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.
l8
நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல்,  கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது.  டிஸ்கோதே, இரவு விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கென்று குத்தகைக்கு விடப்பட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் மழைகாளான்கள் போல் தோன்றி மறையும் காதலாக உள்ளன..
காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை.
பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ….
கம்ப ராமாயணத்தில் கம்பரின் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகு சேர்ப்பதாய் தான்  இருக்கிறது . காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது. அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் இருக்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பது தான் உண்மை..
l2
காதலர் தினம் தோன்றிய வரலாறு..
கி.பி இருநூறாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த மன்னன் கிளாடியஸ் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். இவருடைய  ஆட்சி காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.
மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது..
ரோமில் பிப்ரவரி மாதம் என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம், வசந்த காலத்தின் ஆரம்பம் தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.எனினும் வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக இருந்திருக்கிறது..
சீனர்களிடம் ‘ஏழின் இரவு’ என்று சொல்லப்படும்  இந்த காதலர் தினம் ஏழாவது மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள்..
l1
1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல், அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்திலும் ‘நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் வருகிறது..
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும், பூக்கள் கொடுப்பதும், சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது..
காதலர் தினக் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய்,  அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள். நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது. இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் புலப்படும்.
அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 180 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் க்கு அடுத்தபடியாக காதலர் தினம் அமெரிக்காவில் மிகப் பிரபலம்..
l3
ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள சுமார் முப்பதாயிரம் நகைக்கடைகளில் சுமார் மூன்று பில்லியன் மதிப்புள்ள நகைகள் இந்த கொண்டாட்டக் காலத்தில் மட்டுமே விற்கப்படுகின்றனவாம். சுமார் 36 மில்லியன் இதய வடிவ சாக்லேட் பெட்டிகள் காதலர் தினத்துக்காக மட்டுமே விற்பனையாகின்றன என்பது கூடுதல் தகவல்..
காதல்  எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நொடியாவது தீண்டாமல் போவது இல்லை…
ஒவ்வொரு நொடியும் உணர்ந்து சுகித்து ரசித்து வாழுவோம்.
l9
காதலை காதல் செய்து ,,,
ஆதலினால் காதல் செய்வீர் …
மலரை  விட 
மென்மையானவன் அவன்…
தரையில் பாயும்  வேரை விட 
உறுதியானவன் அவன்…
செல்ல  சண்டையை  
சிறு  புயலாய்  செய்பவன் அவன்…
 ஊடல் கொண்டே 
என்னை உளற வைப்பவன் அவன்…
எனக்கு  முகவரி
அளிப்பவன்  அவன்…
தாயின் தழுவல்களை 
போல கதகதப்பானவன் அவன்…
அடக்காது என்னை ஆனந்தமுடன் 
ரசிப்பவன்  அவன்
மென்மையான பெண்மையை 
உணர்ந்தவன் அவன்…
நட்பு சுடரேற்றி  என் தனிமை 
இருளை விரட்டியவன் அவன் ..
ரகசியம் அனைத்தையும் 
ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..
காதோர நரையின் பின்னும் 
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல கோவங்களை 
சிரிப்புடன்  எதிர்கொள்பவன்  அவன்…
என் சின்னச் சின்ன தேடலை  கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீராய்  
உடனிருப்பவன் அவன்…
என்  புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
கனவிலும்  என்னை
மறக்காதவன் அவன்…
தூறல்  கண்ட மண்  போல்
மணமானவன் அவன்…
என்னை  சுமக்கும்
மற்றொரு  உயிரானவன் அவன்..
எனக்கே எனக்கு  அழகானவன் அவன்…
எனக்கு  மட்டும் முழுமையானவன் அவன்…
 காதல் சொல்லி தந்தவன்  அவன்…
 என்னை எனக்கே  அறிமுகப்படுத்திய உயிரானவன் …
அவனே நானாக 
நானே அவனாக ..
அவனில் தொலைந்தே …
– ப்ரியா கங்காதரன்
IMG_20160117_163128

தினம் தினம் தந்தையர் தினம்

father

ஒவ்வொரு தந்தைக்குள்ளும்

ஒரு மகன்

ஒவ்வொரு மகனுக்குள்ளும்

ஒரு தந்தை

தந்தையல்ல மகன்

தந்தையினால் மகன்

அதே மண்தான்

தாவரம் வேறு

அதே கடல்தான்

அலை வேறு

அதே சூரியன்தான்

கிரணம் வேறு

அதே காற்றுதான்

மூச்சு வேறு

அதே ஆகாயம்தான்

அண்டம் வேறு

அணுவுக்குள் திணிந்த உயிர்ச்சங்கிலியை

உடல் மாற்றி

மூலவித்தின் முடிச்சவிழ்க்கும்

முன்மனிதன்

தாயின் கருப்பைக்கு உயிர்தானம் தந்து

தந்தையாகிறான்

தாயினும் சிறந்து.

  • நா.வே.அருள்

Image courtesy: http://ngm.nationalgeographic.com

நூல் அறிமுகம் – 9

இலைகள் பழுக்காத உலகம் 

Wrapper

ராமலக்ஷ்மி

ளைத்தளத்தில் பிரபலமான கவிஞர் ராமலக்ஷ்மி 1987ல் இருந்து தொடர்ந்து எழுத்துலகில் இயங்கி வருபவர். ‘முத்துச்சரம்’ என்ற வலைப்பூவை உருவாக்கி, தொடர்ந்து பதிவுகள் இடுபவர். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளியானவை.

‘‘அன்பையும், பாசத்தையும், கவலைகளையும் வெளிப்படுத்துகிற எந்தக் கவிதையிலும் வலிந்து திணிக்கப்பட்ட பாசாங்கோ, வார்த்தைகளின் ஆர்ப்பாட்டமோ இல்லை. இயல்பாக, உண்மையின் மையப் புள்ளியிலிருந்து இதைப் பதிவு செய்கிறார். அதனால்தான் இந்தக் கவிதைகள் மென்மையையும் முரண்பாட்டையும் ஒருங்கிணைத்துச் செல்கின்றன.

கவிதையை உச்சநிலைக்கு எடுத்துச் செல்வதில் முதன்மையானது ரசனை சார்ந்த அனுபவம். ரசனைக்குக் கூர்மையான கவனிப்பு அவசியம். யாரும் நுழையாத கவிதைப் பாதைக்குள் வாசகனைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிற போது, வாசகன் காணும் உலகம் ஆச்சரியங்கள் விரியும் வண்ண உலகமாகிறது. ‘அரும்புகள்’ கவிதையில் ராமலக்ஷ்மியின் கவிதைப் பார்வை நேர்த்தியும் அழகும் மிக்கதாக இருக்கிறது. நாம் கவனிக்கத் தவறி விட்டோமே என்று வியக்கத் தோன்றுகிறது…’’ என்று இந்நூல் மதிப்புரையில் குறிப்பிடுகிறார் கவிஞர் க. அம்சப்ரியா. ராமலக்ஷ்மியின் ‘அரும்புகள்’ கவிதை மட்டுமல்ல… பல கவிதைகள் ரசனை சார்ந்த அனுபவத்துக்கு நம்மை உட்படுத்துபவை.

எளிமையான வரிகளில், மிரட்டாத சொல்லாட்சியில் மிளிர்கின்றன இத் தொகுப்பில் உள்ள கவிதைகள். உதாரணத்துக்கு சில கவிதைகள்…

அரும்புகள் 

moon

என்றைக்கு

எப்போது வருமென

எப்படியோ தெரிந்து

வைத்திருக்கின்றன

அத்தனைக் குஞ்சு மீன்களும்

அன்னையருக்குத் தெரியாமல்

நடுநிசியில் நழுவிக்

குளம் நடுவே குழுமிக் காத்திருக்க

தொட்டுப் பிடித்து விளையாட

மெல்ல மிதந்து

உள்ளே வருகிறது

பிள்ளைப் பிறை நிலா.

***

எல்லாம் புரிந்தவள் 

mother and daughter

மகளின் மழலைக்கு

மனைவியே அகராதி

அர்த்தங்கள் பல

முயன்று தோற்று

‘அப்பா அம்மாவாகவே முடியாதோ…’

திகைத்து வருந்தி நிற்கையில்

புரிந்தவளைப் போல்

அருகே வந்தணைத்து

ஆறுதலாய் முத்தமிட்டு

எனக்கு

அம்மாவாகி விடுகிறாள்

அன்பு மகள்.

***

கடன் அன்பை வளர்க்கும் 

coin

‘வேறு எந்தக் கடனும் இப்போது இல்லை’

புதுக்கடனுக்கு விண்ணப்பிக்க வந்த இட்த்தில்

வங்கி மேலாளர் கேட்கும் முன்னரே சொன்னான்

முந்தைய கடன்களை

காலத்தே அடைத்த்தற்கான

நற்சான்றிதழ்களை பெருமையுடன் முன்வைத்தான்.

சிணுங்கியது அலைபேசி

‘அப்பா எனக்கு நீ பத்து ரூவா தரணும்’

அறிவித்தாள் அன்பு மகள்

முன் தினம் கடற்கரையில் கடலை வாங்க

சில்லறை இல்லாதபோது

தன்குட்டிப் பையைக் குலுக்கித் தேடி

எடுத்துத் தந்த இரு ஐந்து ரூபாய்

நாணயங்களை நினைவூட்டி.

***

நூல்: இலைகள் பழுக்காத உலகம்

ஆசிரியர்: ராமலக்ஷ்மி

வெளியீடு: அகநாழிகை பதிப்பகம், எண் 33, மண்டபம் தெரு, மதுராந்தகம் – 603 306.

தொலைபேசி: 9994541010.

விலை: ரூ.80/-

பிற நூல்கள்…

நூல் அறிமுகம் – 1 

நூல் அறிமுகம் – 2

நூல் அறிமுகம் – 3

நூல் அறிமுகம் – 4

நூல் அறிமுகம் – 5

நூல் அறிமுகம் – 6 

நூல் அறிமுகம் – 7

நூல் அறிமுகம் – 8

Image courtesy:  

ww.chinese.cn

http://api.ning.com/

http://www.circlevillegifts.com/

காதல்… காதல்… காதல்…

Snow-Love-Wallpaper

காதல் குளிர்

ஓர் எலியைப் போல

முதுகு மடங்கி உட்கார விருப்பம்

எனக்கும்

உன் உள்ளங்கைப் போர்வைக்குள்

இத்தனை பாந்தமாய்

‘மவுஸ்’.

1120

புள்ளி இல்லாத கோடுகள்

என்னால் உன்னை

வாசித்தறிய முடியவில்லை

புத்தகத்தின் பின்புறமுள்ள

கணிப்பொறி விலைக்கோடு

நீ.

Red_Rose_flowers

வழுக்கு ஏணி

ஒருமுறை

ஏணி எடுத்து வந்து

ஏறச் சொன்னாய்

மெல்ல மெல்ல

இறங்கிக் கொண்டிருந்தேன்

உன் இதயத்திற்குள்.

rose_buds-normal

காதல் பயணம்

ஒரு டிக்கெட்தான்

எடுத்துச் சென்றேன்

பாவம்

கடைசி வரையிலும்

நீ என் பக்கத்திலேயே

பயணம் செய்ததை

பார்க்கவேயில்லை

பரிசோதகரும் கண்டக்டரும்…

valentines-heart-in-water-free-hd-wallpaper-t2

காதல் வெடிகுண்டு

அவசரமாய் நீ திரும்புகையில்

குவிகிற அழகை

என் செல்போன் கேமராவில்

சேமித்திருக்கிறேன்

விம்மிப் புடைக்கும் அது

எப்போது வெடிக்குமோ?

rose 1

உரிமை ஆசிரியருக்கு

உன் செல்போனுக்கு அனுப்பிய

குறுஞ்செய்திகளையெல்லாம்

தொகுப்பாய் வெளியிட எனக்கு

விருப்பம்தான்

உன் பெற்றோர் பிரசுரிப்பார்களா?

3d-abstract_widewallpaper_red-rose_26213

பொய்யாய் பழங்கதையாய்…

சங்க காலத்தில்

நம் தாத்தா பாட்டிகள்

வெயிலில் மரநிழலில்

இரவில் நிலவடியில்

காதலித்தார்களாமே

நமக்கு

கணிப்பொறி சாட்டிங்

காதல் போதுமா?

water-lillies-x4dq

பிரளயம்

நீ

குளம் சென்று வந்த பிறகு

அலை அடங்கவேயில்லை.

– நா.வே.அருள்

heart_in_sand_1600x1200

Image courtesy:

http://www.afloralaffairpa.com

http://www.hdwallpapers.in

http://wondrouspics.com

http://stuffkit.com

http://www.wallpapersdb.org

http://www.hdwallpapersfree.eu

http://hdwallpaper.freehdw.com

http://www.gebs.net.au

திறந்து கிடந்த இரு ரகசிய அறைகளும் பூட்டிஇருந்த ஓர் இதய அறையும்

Bedroom-Doors

அவளுக்காக அவன் வைத்திருந்த இதய அறையில் வசிப்பதற்காக வந்தவள்தான்.

இருக்கட்டுமே என்று தாராள மனதுடன்
இன்னும் இரண்டு அறைகள் கொடுத்திருந்தான்
அவளுக்கே அவளுக்கானதாக ஒன்றும்…
அவளுடன் சேர்ந்து சந்தோஷம் கொள்ள மற்றொன்றும்…
பிரச்சினைகளைக் குறுக்கி ஒரு அளவீடாக
வைத்துக்கொண்டாலும்
ஒரு அறையில் வெங்காயம் உரிக்கும்போதும்
இன்னொரு அறையில் வேண்டாதபோது சீண்டும்போதும்
வருகிற கண்ணீரை வெளியுலகம் அறிவதில்லை.
இருந்தாலும்
இந்த இரண்டு அறைகளை விட்டு வெளியில் வர
அவளுக்கு நேரமே இல்லை
ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும்…
அவளுக்காக

அவன் வைத்திருந்த இதய அறையில்
கடைசிவரை
அவள் வசிக்கவே இல்லை.
– நா.வே.அருள்
vegetablesbedroom
                            –நா.வே.அருள்

மழை இலவசம்

rain

இன்று கடைத்தெரு பக்கம் போகிறபோது

மழை விற்றுக் கொண்டிருந்தது தெரு…

வாங்க மனசில்லாத பலர்

குடை கொண்டு போனார்கள்!

தெருவின் இருபுறத்திலும்

ஈரச் சாக்கின்மேல்

பரப்பி வைத்துக்

குளித்த காய்கறிகள் மேல்

குடை பிடித்துக்கொண்டிருந்தார்கள்;

விற்றுத்தீருமா எனும்

விசனம்  முகங்களில்…

பத்து ரூபாய் கொடுத்துக்

கொத்துமல்லி வாங்கிய எனக்கு

கை நிறைய கறிவேப்பிலை தந்தார்

வயதான மூதாட்டி.

வாங்கி திரும்புகையில்

என்னை

இருத்தி நிறுத்தியது இன்னொரு குரல்…

“ரெண்டு ரூபாய்க்கு கொத்துமல்லி கறிவேப்பிலை

குடும்மா… கறிக் கொழம்பு வைக்கணும்…”

“ரெண்டு ரூபாய்க்கு வராதும்மா…”

சட்டென்று முகம் சுருங்கித் திரும்பிய பெண்மணியின்

கெஞ்சிய குரல்

நாறும் குப்பையாய் நடுத்தெருவில் கிடக்க

சோ வென்று பெய்ய ஆரம்பித்தது மழை!

இலவசமாக விற்கிற இயற்கைக்கு முன்

மனிதர்கள்

தோற்றுத்தான் போகிறார்கள்!

நா.வே.அருள்

kothumalli

Image courtesy:

http://samaiyalattakaasam.blogspot.in/

எச்சில் ஊறும்

Onions 

காய்கறி மார்கெட்டுக்குள் கால் வைக்கும் போதெல்லாம் 

மனச்சிதைவுக்கு ஆளாக நேர்கிற பயம் தொற்றிக்கொள்கிறது 

 

கிலோவுக்கு விலைசொன்ன காலம்போய் 

கால்கிலோவுக்குச் சொல்வதைக் 

கற்றுக்கொடுக்கிறது காலம் 

கருணையுள்ள கடைக்காரர்களுக்கு. 

 

கடைக்காரர்களின் விடாய்ப்பையும் சடாய்ப்பையும் மீறி 

விரலழுத்திக் காய்கறிப் பொறுக்க ஒப்பவில்லை மனம். 

“காய் பார்த்துப் பொறுக்க தெரவிசிருக்கா”வென 

ஹேமாவதி எத்தனை முறை கடிந்துகொண்டாலும் 

எதிர்க்கட்சியில் இருக்கும்போது எதிர்க்கவும் 

ஆளுங்கட்சியாகிறபோது மேலும் உயர்த்தவும் 

அதே மனிதர்களின் குணாம்சத்தை 

வெவ்வேறு விதமாய் வசீகரித்துவிடுகிறது 

“விசித்திர நெட்டையன்” விலைவாசி!

 

காலாகாலத்துக்கும் நடக்குமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தைக் 

காணமுடியாமல் கட்டப்பட்டிருக்கும் 

கடவுளின் கண்கள்!

 

ஏழாவது நாளாக இன்றைக்கும் 

வாங்காமலேயே வந்துவிட்டேன் 

உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாமல்போகும் வெங்காயத்தையும் 

விரல் பட்டால் நசுங்கிவிடும் தக்காளியையும்.

 

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் 

தோ… இந்தா… என்று தள்ளித் தள்ளிப் போடுவதோ 

ஆசையாய் அப்பி அறைந்து சாப்பிட்டத் தக்காளிச் சட்டினியை!

– நா.வே.அருள் 

 Tomatoes

Image courtesy: .wikimedia.org/wikipedia/commons

மகாபாரதம் ஒரு மறு ஒளிபரப்பு

Image

நாட்கள் கடந்துவிட்டன

வியாசனுக்கே வியப்பு

மகாபாரதமே மாறிப்போய் விட்டது

கோபியர்களுக்கு ஒரே குழப்பம்

குளத்தில் குளிக்கையில் கண்ணன்

ஒளித்து வைத்த புடவைகள்

திரும்பக் கிடைக்குமாவென்றும்

முக்கியமாக…

நவீன கண்ணனை  நம்ப முடியுமாவென்றும்

இப்போது

வெண்ணெய் திருடி உண்டவன்

வாயைத் திறப்பதேயில்லை என்றொரு வதந்தி

யசோதை அதிர்ந்து போய் இருக்கிறாள்…

உலகமே ஒருவனின் வாய்க்குள்

வாயைத் திறந்ததோ கம்சன்!

ஒன்றுமட்டும் மாறாமல்…

துரியோதனின் துகிலுரி சபை தொடர்கிறது

விதுரர்களும் வேடிக்கைபார்க்க

சபை மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது

அலுவலகங்களில்…நீதிமன்றங்களில்…

ஊடகங்களில்…பேருந்துகளில்….

இன்னும்…இன்னும்…

ஆண்கள் புழங்கும் அத்தனை இடங்களிலும்….

  ஆதி பெருந்தேவி  

 Image courtesy: http://commons.wikimedia.org/

தோல்

Image

சாதி சட்டை போன்றது

அன்பு தோலைப் போன்றது

இந்த மனிதர்கள் விநோதமானவர்கள்

சட்டையைக் கழற்ற மறுக்கிறார்கள்

தோலை உரித்துக் கொள்கிறார்கள்.

– நா.வே.அருள்