தினம் தினம் தந்தையர் தினம்

father

ஒவ்வொரு தந்தைக்குள்ளும்

ஒரு மகன்

ஒவ்வொரு மகனுக்குள்ளும்

ஒரு தந்தை

தந்தையல்ல மகன்

தந்தையினால் மகன்

அதே மண்தான்

தாவரம் வேறு

அதே கடல்தான்

அலை வேறு

அதே சூரியன்தான்

கிரணம் வேறு

அதே காற்றுதான்

மூச்சு வேறு

அதே ஆகாயம்தான்

அண்டம் வேறு

அணுவுக்குள் திணிந்த உயிர்ச்சங்கிலியை

உடல் மாற்றி

மூலவித்தின் முடிச்சவிழ்க்கும்

முன்மனிதன்

தாயின் கருப்பைக்கு உயிர்தானம் தந்து

தந்தையாகிறான்

தாயினும் சிறந்து.

  • நா.வே.அருள்

Image courtesy: http://ngm.nationalgeographic.com

காதல்… காதல்… காதல்…

Snow-Love-Wallpaper

காதல் குளிர்

ஓர் எலியைப் போல

முதுகு மடங்கி உட்கார விருப்பம்

எனக்கும்

உன் உள்ளங்கைப் போர்வைக்குள்

இத்தனை பாந்தமாய்

‘மவுஸ்’.

1120

புள்ளி இல்லாத கோடுகள்

என்னால் உன்னை

வாசித்தறிய முடியவில்லை

புத்தகத்தின் பின்புறமுள்ள

கணிப்பொறி விலைக்கோடு

நீ.

Red_Rose_flowers

வழுக்கு ஏணி

ஒருமுறை

ஏணி எடுத்து வந்து

ஏறச் சொன்னாய்

மெல்ல மெல்ல

இறங்கிக் கொண்டிருந்தேன்

உன் இதயத்திற்குள்.

rose_buds-normal

காதல் பயணம்

ஒரு டிக்கெட்தான்

எடுத்துச் சென்றேன்

பாவம்

கடைசி வரையிலும்

நீ என் பக்கத்திலேயே

பயணம் செய்ததை

பார்க்கவேயில்லை

பரிசோதகரும் கண்டக்டரும்…

valentines-heart-in-water-free-hd-wallpaper-t2

காதல் வெடிகுண்டு

அவசரமாய் நீ திரும்புகையில்

குவிகிற அழகை

என் செல்போன் கேமராவில்

சேமித்திருக்கிறேன்

விம்மிப் புடைக்கும் அது

எப்போது வெடிக்குமோ?

rose 1

உரிமை ஆசிரியருக்கு

உன் செல்போனுக்கு அனுப்பிய

குறுஞ்செய்திகளையெல்லாம்

தொகுப்பாய் வெளியிட எனக்கு

விருப்பம்தான்

உன் பெற்றோர் பிரசுரிப்பார்களா?

3d-abstract_widewallpaper_red-rose_26213

பொய்யாய் பழங்கதையாய்…

சங்க காலத்தில்

நம் தாத்தா பாட்டிகள்

வெயிலில் மரநிழலில்

இரவில் நிலவடியில்

காதலித்தார்களாமே

நமக்கு

கணிப்பொறி சாட்டிங்

காதல் போதுமா?

water-lillies-x4dq

பிரளயம்

நீ

குளம் சென்று வந்த பிறகு

அலை அடங்கவேயில்லை.

– நா.வே.அருள்

heart_in_sand_1600x1200

Image courtesy:

http://www.afloralaffairpa.com

http://www.hdwallpapers.in

http://wondrouspics.com

http://stuffkit.com

http://www.wallpapersdb.org

http://www.hdwallpapersfree.eu

http://hdwallpaper.freehdw.com

http://www.gebs.net.au

திறந்து கிடந்த இரு ரகசிய அறைகளும் பூட்டிஇருந்த ஓர் இதய அறையும்

Bedroom-Doors

அவளுக்காக அவன் வைத்திருந்த இதய அறையில் வசிப்பதற்காக வந்தவள்தான்.

இருக்கட்டுமே என்று தாராள மனதுடன்
இன்னும் இரண்டு அறைகள் கொடுத்திருந்தான்
அவளுக்கே அவளுக்கானதாக ஒன்றும்…
அவளுடன் சேர்ந்து சந்தோஷம் கொள்ள மற்றொன்றும்…
பிரச்சினைகளைக் குறுக்கி ஒரு அளவீடாக
வைத்துக்கொண்டாலும்
ஒரு அறையில் வெங்காயம் உரிக்கும்போதும்
இன்னொரு அறையில் வேண்டாதபோது சீண்டும்போதும்
வருகிற கண்ணீரை வெளியுலகம் அறிவதில்லை.
இருந்தாலும்
இந்த இரண்டு அறைகளை விட்டு வெளியில் வர
அவளுக்கு நேரமே இல்லை
ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும்…
அவளுக்காக

அவன் வைத்திருந்த இதய அறையில்
கடைசிவரை
அவள் வசிக்கவே இல்லை.
– நா.வே.அருள்
vegetablesbedroom
                            –நா.வே.அருள்

மழை இலவசம்

rain

இன்று கடைத்தெரு பக்கம் போகிறபோது

மழை விற்றுக் கொண்டிருந்தது தெரு…

வாங்க மனசில்லாத பலர்

குடை கொண்டு போனார்கள்!

தெருவின் இருபுறத்திலும்

ஈரச் சாக்கின்மேல்

பரப்பி வைத்துக்

குளித்த காய்கறிகள் மேல்

குடை பிடித்துக்கொண்டிருந்தார்கள்;

விற்றுத்தீருமா எனும்

விசனம்  முகங்களில்…

பத்து ரூபாய் கொடுத்துக்

கொத்துமல்லி வாங்கிய எனக்கு

கை நிறைய கறிவேப்பிலை தந்தார்

வயதான மூதாட்டி.

வாங்கி திரும்புகையில்

என்னை

இருத்தி நிறுத்தியது இன்னொரு குரல்…

“ரெண்டு ரூபாய்க்கு கொத்துமல்லி கறிவேப்பிலை

குடும்மா… கறிக் கொழம்பு வைக்கணும்…”

“ரெண்டு ரூபாய்க்கு வராதும்மா…”

சட்டென்று முகம் சுருங்கித் திரும்பிய பெண்மணியின்

கெஞ்சிய குரல்

நாறும் குப்பையாய் நடுத்தெருவில் கிடக்க

சோ வென்று பெய்ய ஆரம்பித்தது மழை!

இலவசமாக விற்கிற இயற்கைக்கு முன்

மனிதர்கள்

தோற்றுத்தான் போகிறார்கள்!

நா.வே.அருள்

kothumalli

Image courtesy:

http://samaiyalattakaasam.blogspot.in/

எச்சில் ஊறும்

Onions 

காய்கறி மார்கெட்டுக்குள் கால் வைக்கும் போதெல்லாம் 

மனச்சிதைவுக்கு ஆளாக நேர்கிற பயம் தொற்றிக்கொள்கிறது 

 

கிலோவுக்கு விலைசொன்ன காலம்போய் 

கால்கிலோவுக்குச் சொல்வதைக் 

கற்றுக்கொடுக்கிறது காலம் 

கருணையுள்ள கடைக்காரர்களுக்கு. 

 

கடைக்காரர்களின் விடாய்ப்பையும் சடாய்ப்பையும் மீறி 

விரலழுத்திக் காய்கறிப் பொறுக்க ஒப்பவில்லை மனம். 

“காய் பார்த்துப் பொறுக்க தெரவிசிருக்கா”வென 

ஹேமாவதி எத்தனை முறை கடிந்துகொண்டாலும் 

எதிர்க்கட்சியில் இருக்கும்போது எதிர்க்கவும் 

ஆளுங்கட்சியாகிறபோது மேலும் உயர்த்தவும் 

அதே மனிதர்களின் குணாம்சத்தை 

வெவ்வேறு விதமாய் வசீகரித்துவிடுகிறது 

“விசித்திர நெட்டையன்” விலைவாசி!

 

காலாகாலத்துக்கும் நடக்குமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தைக் 

காணமுடியாமல் கட்டப்பட்டிருக்கும் 

கடவுளின் கண்கள்!

 

ஏழாவது நாளாக இன்றைக்கும் 

வாங்காமலேயே வந்துவிட்டேன் 

உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாமல்போகும் வெங்காயத்தையும் 

விரல் பட்டால் நசுங்கிவிடும் தக்காளியையும்.

 

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் 

தோ… இந்தா… என்று தள்ளித் தள்ளிப் போடுவதோ 

ஆசையாய் அப்பி அறைந்து சாப்பிட்டத் தக்காளிச் சட்டினியை!

– நா.வே.அருள் 

 Tomatoes

Image courtesy: .wikimedia.org/wikipedia/commons

மவுலிவாக்கம் II

ஓர் ஏரியின் தேடல்

IMG_8124

தண்ணீரால் தளும்பி வழியும்

தாகம் தணிக்கும் ஜீவன் நான்.

தாவர உரோமங்கள் என் தசைகளில்…

 

வானம் தருகிற மழை முத்தம் என் மடியில்.

என்னுள்

சிலிர்த்துயிர்க்கும் ஜீவராசிகள்!

 

தலைப்பிரட்டை, மீன், தவளை

நண்டு, நத்தை, பாம்பு

அட்டை, ஆமை, உள்ளான் என

அத்தனை ஜீவராசிகளும்

அடைக்கலம் என் கர்ப்பத்தில்!

 

புல், பூண்டு, பச்சிலை

ஆம்பல்,கருங்குவளை, தாமரை

நான் அணியும் இயற்கை ஆபரணங்கள் !

 

தினமும் வானம் முகம் பார்க்கும்

வசீகரக் கண்ணாடியாய் என் தேகம்!

 

பறவை, எலி, அணில், முள்ளம் பன்றி, மூஞ்சூறு

சிக்குளுக்காம் மூட்டிச் சேட்டை செய்யும்

என்  மேனியெல்லாம்!

 

ஆல், அரசு, வேங்கை,

தென்னை, தேக்கு, கோங்கிலவம்…

நிழல்களின் ராஜ்ஜியம் என் கரையெல்லாம்!

 

உழவராய், மள்ளராய், வேடராய்

மாடுகள் குளிப்பாட்டிய மனுசனே…..

உயிர்களுக்கெல்லாம் உறைவிடமாகி

பயிர்ப் பச்சிலுக்குப் பாசனமாக

நீ

எப்போது திறந்தாலும்

என் மதகிலிருந்து மதநீர் பாய்ந்ததே!…..

இன்றென்ன ஆச்சு?…

ஏனிந்தப் பேராசை?

 

மாடிகள் இடிந்து மரண ஓலம்

சுவர்க் கோழிகள் ரீங்கரித்த என் செவியோரம்

உயிர்பிழியும்

கடவுளின் தற்கொலை ஓசைகள்!

 

ஜீரணிக்க முடியவில்லை…

செவிகிழியும் மரண கீதங்கள்!

 

அடைந்துபோன என் ஆதி மதகுகளில்

அணை உடைத்துப் போகும்

கருணையைத் தேடி என் கண்ணீர் வெள்ளம்!

 

மனிதர்களை நம்பமுடியவில்லை…

கடவுளை காணவில்லை….

 

– நா.வே.அருள்

 

முகவரியற்ற மரணங்களும் மரணங்களற்ற சில முகவரிகளும் !

IMG_8006

திடீரென இடிந்து நொறுங்கி

சிதிலமாகி

சிதைத்துப் போட்ட கான்க்ரீட் வனமென

காட்சியளிக்கும்

மவுலிவாக்கத்தில்

கண்டுபிடிப்புகளை மீறி நாறும்

முகவரியற்ற மரணங்கள்!

 

கால்குத்திக் கிழிக்கும் கான்க்ரீட் கம்பிகள்

நவீன சாம்பல் நிற சதுர கற்கள்

தகர்ந்து கிடக்கும் சிமெண்டுச் சுவர்கள்

சக்கரங்களில் சிக்கியக் கருப்பஞ் சக்கைகளாய்க்

காட்சியளிக்கும்

முறிந்து கிடக்கும்

கட்டிடத்தின் கணுத் தொடைத் தூண்கள் !

 

பாதாளத்தில்

சுவர்க் குகைகளுக்குள்

மரணத்திலிருந்து தப்பிக்க

வெடித்துக் கிளம்பும் மனிதர்களின் கடைசிக் கேவல்கள்

பூமி கேட்க விரும்பிய

மரணத்தின் நெடுந்துயரப் பாடல்களாக

இருக்க முடியாது…

 

பேராசைகளின் ஜீவநதியாய்ப்

பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில்

சில மனிதர்களில் பணரங்கச் சுழற்சியில்

பாவம்… இந்த

பதினொரு மாடி வளாகம்!

 

இதயத் துடிப்பறியும் நவீன கருவியும்

தெர்மல் கேப்சரிங் கேமராவும்

கண்டுபிடிக்க முடியாமல் திணறும்

துரோகங்களின் மீது கட்டப்பட்ட

“நம்பிக்கை” என்னும் வாசகம் பொறித்த வளாகத்தின்

இடிபாடுகளுக்கு அடியில்

கண்ணாமூச்சியாடும்

முகவரியற்ற மரணங்களும்

மரணங்களற்ற சில முகவரிகளும்!

– நா.வே.அருள்

 

தி.க.சி., சுடலை மாடன் தெரு, திருநெல்வேலி: ஓர் இலக்கிய முகவரி

Image

காகவி பாரதியைத் தன் ஆதர்ச குருவாக வரித்துக் கொண்டு இலக்கிய வாழ்வைத் தொடங்கியவர் மதிப்பிற்குரிய இலக்கிய ஆளுமை தி.க.சி என்கிற தி.க.சிவசங்கரன். இதனாலும் அவர் மீது என் பிரியம் அளவு கடந்திருக்கலாம். மகாகவி பாரதி என் மானசீக குரு. இளம் வயதில் கனவுகளில் மகாகவியுடன் வாழ்ந்திருக்கிறேன். அதே கருப்புக் கோட்டுடன் காட்சியளித்திருக்கிறான்.

கையெழுத்துப் பிரதியிலேயே ‘ஆயுதம்’ என்கிற எனது கவிதைத் தொகுப்பு முதல் பரிசுக்குத் தேர்வாகியிருந்தது. கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டியின் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொள்ள நண்பர் ஜெயராமனுடன் எட்டயபுரம் போயிருந்தேன். மகாகவியின் கருவறை எட்டயபுரம் ஆயிற்றே! அந்த மண்ணில் முதல் விருது பெறுவதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? மகாகவியின் வீட்டில் நாங்கள் இருவரும் மண்ணில் விழுந்து புரண்டோம்.

எட்டயபுரத்துக்கு அடுத்து திருநெல்வேலிதானே!

விருதுப் பட்டயங்களைச் சுமந்தபடியே திருநெல்வேலி போனோம். திருநெல்வேலி என்றால் பலருக்கும் அல்வா. உங்களைப் போலவே எங்களுக்கும் திருநெல்வேலி என்றால் தி.க.சிவசங்கரன். நாங்கள் அனைவரும் வீட்டுக்குப் போயிருந்தோம். மேசை நிறைய புத்தகங்கள். ஒரு ஓரத்தில் தொலைபேசி என்பதாக ஞாபகம். வெள்ளை நிறம் என்று நினைக்கிறேன். எதிரில் ஒரு நாற்காலி. நாற்காலியின் மூலையில் தி.க.சி. அண்ணன் வண்ணதாசன் எங்கள் வருகையைத் தந்தைக்குச் சொல்கிறார். ஒரு குழந்தையைப் போல குதூகலமாக வரவேற்கிறார் தி.க.சி. அப்போது எனக்குத் தோன்றியது இதுதான்… இந்த இமயமலைக்குள் எத்தனைக் கூழாங்கற்கள்!

‘கல்கியிலும் வண்ணக்கதிரிலும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்… தொடர்ந்து எழுதுங்கள்’. முதுகு இல்லாதவர்களைக் கூடத் தட்டிக்கொடுக்க அவரால்தான் முடியும்!

அவரைப் பற்றிப் பேச ஆரம்பிப்போம்… அவர் நம்மைப் பற்றியும் இலக்கிய உலகத்தைப் பற்றியுமே பேசிக்கொண்டிருப்பார்.

அப்போது அவரது துணைவியார் உடல்நலமின்றி இருந்தார். அண்ணன் வண்ணதாசன் அம்மாவுடன் இருக்க, தி.க.சி இடையில் போய்ப் பார்த்துவிட்டு வந்து மறுபடியும் தன் மனைவியின் உடல்நிலை, இலக்கிய உலகத்தின் சுகாதாரம், நாம் பணியாற்றவேண்டிய திசைவழி என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்.

வண்ணதாசன் எங்களைப்பற்றித் தன் தந்தையிடம் சொல்கிற விதம் ரொம்ப நன்றாயிருக்கும். முதலில் சொல்கிறபோது காதில் விழுந்திருக்காது… அல்லது கவனம் சிதறி இருக்கும். அடுத்துக் கொஞ்சம் சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்கிற போது வண்ணதாசனின் முகபாவமும் வார்த்தைகள் வெளிவந்த பிறகு மௌனம் ஆகும் உதடுகளும் பார்க்கப் பரவசமாக இருக்கும். அப்போதும் ஒரு தீவிர அரசியல்வாதியாகவும் இலக்கியவாதியாகவும் பேசிக்கொண்டே இருப்பார் தி.க.சி.

அடுத்து, எங்கள் இலக்கு பத்தமடை தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களைப் பார்ப்பதாக இருந்தது. தி.க.சியிடம் சொன்னோம். உடனே ச.தமிழ்ச்செல்வன் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். அத்தோடு தமிழ்ச்செல்வன், அவர் சார்ந்திருக்கும் இலக்கிய அமைப்பு, அதன் செயல்பாடு என்று அவர் பேச்சு விரிய ஆரம்பித்துவிட்டது.
எழுத்தாளர் சங்க மாநாடுகளுக்குத் தவறாமல் வருவார் தி.க.சி. ஓரிரு நிமிடங்கள்தான் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்றாலும் உணர்வு பூர்வமாகப் பேசுவார். உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை சொல்லியபடியே இருப்பார்.

ஒருமுறை தினமணிக் கதிரில் ‘இலக்கியப் பஞ்ச சீலம்’ என்கிற கருத்தாக்கம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டு இருந்தார். தலித்தியம், தமிழியம், பெண்ணியம், சூழலியம், மார்க்சியம் என்று குறிப்பிட்டு இலக்கியத்தின் நோக்கம் இவற்றைச் சுற்றி இருக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். அதற்கு இலக்கியரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் கருதினேன். சென்னையில் “இலக்கியப் பஞ்ச சீலம்” என்ற தலைப்பில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். அரங்கம் கொள்ளாதக் கூட்டம். என்னைப் பொறுத்தவரை இன்னும் அந்தக் கூட்டம் முடிந்ததாகத் தெரியவில்லை. இப்போதும் அந்த அரங்கில் தி.க.சி. பேசிக் கொண்டிருக்கிறார். அதுதான் தி.க.சி.

இத்தனை பெரிய கூட்டம் இருந்தும் வெறிச்சோடிக் கிடக்கிறது சுடலை மாடன் தெரு.

– நா.வே.அருள்
Image courtesy: nanjilnadan.com

வண்ணம் படிந்த கவிதைகள்

Image

ஒரு சுழலும் மின்விசிறியின் கீழ்…

 வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சியை 

எப்படி வரவேற்பது என்று புரியாமல் விழித்தேன்.

இயல்பான பறத்தல் மறந்த அதன் படபடப்பை மறக்கடிக்க 

நான் என்னதான் செய்யவேண்டும்?

அதன் மொழியில் வார்த்தைகள் கற்காத நான் 

எனது வரவேற்பை எப்படிப் புரியவைப்பேன்?

அதன் மொழியைப் புரிந்து கொள்ள 

நான் இயற்கையின் எந்தப் பாடத்தைப் படிக்கவேண்டும்?

அறையெங்கும் அதன் பயந்த சுவாசம் நிறைந்திட 

என் மார்புக் கூட்டுக்குள் 

காற்றுப் போன பலூன்கள் 

பாறைகளைப்போல அசைகின்றன.

வண்ணத்துப்பூச்சியை வரவேற்பது இருக்கட்டும் 

எப்படி அதை வெளியேற்றுவது 

என்பதுதான் இப்போதைய எனது பிரச்னை! 

வேகமெடுத்த வாகனத்தின் முன் 

திட்டவட்டமாக விபத்தை எதிர்நோக்கிய 

ஒரு  தடுமாறும் நெடுஞ்சாலைப் பயணியைப் போல

சுழலும் மின்விசிறி நோக்கி 

ஏறி இறங்கிப் பறந்துகொண்டிருக்கும் 

வண்ணத்துப்பூச்சியை 

எப்படி அறையை விட்டு வெளியேற்றுவது என்று புரியாமல் விழிக்கிறேன்!

Image
                                             

 காற்றில் பறக்கும் வண்ணங்கள் 

வண்ணத்துப்பூச்சியை 

விழிகளால் நோக்கிடும் துணிச்சலில்லை 

விழிகளில் ஒட்டிக்கொண்ட வண்ணங்களை 

துடைத்தெடுக்க 

மின்பஞ்சு விரல்கள் வாய்க்கவில்லை எனக்கு.

Image 

வண்ணத்துக் கிளி 

வண்ணத்துப்பூச்சியை 

இனி யாரும் பூச்சி என்று சொல்ல வேண்டாம் 

என்று இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் எல்லோரையும்…

பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது என்று 

நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள்…

அதன் பறத்தல் பறவைக்கும் வாய்க்காது என்று 

பரவசப்படுகிறீர்கள்…

அதற்கு சிறகுகள் இருப்பதாக 

நீங்கள்தான் சிலாகிக்கிறீர்கள்…

ஒரு மலரே பறவையானதைப் போல 

வண்ணங்கள் நிறைந்த அதன் பெயரை 

இனி நீங்களும் நானும் சேர்ந்து 

இப்படி மாற்றி வைக்கலாமா..?

” வண்ணத்துக் கிளி” 

– நா.வே.அருள்

Image courtesy:

http://www.pageresource.com

http://img.wallpapergang.com

http://www.mrwallpaper.com/

http://timskellett.com

Image

போன்சாய் கவிதைகள்

Image

கொசு வளரும் சாக்கடையில் 

வளர்கிறது 

வாழையும்!

***

 Image

இலைகள் ஏந்தி… மரங்கள் 

அமுது படைக்க 

ஒருவரேனும்..?

***

Image

அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த 

கோன் ஐஸ்க்ரீம் 

இந்தியா….

*** 

Image

அனேக பசுக்கள் இறந்து கிடந்தன 

அறுந்துகிடந்தது 

ஆராய்ச்சிமணி 

***

Image 

ராமன் ஆண்டாலென்ன ?  ராவணன் ஆண்டாலென்ன?

விட்டுவிட முடியுமா?

சீதை சொல்லட்டும்…

-நா.வே.அருள்