தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT), அதன் 8வது மாநில மாநாட்டையொட்டி இரண்டு நாள் கருத்தரங்கை நடத்த இருக்கிறது.
இக்கருத்தரங்கில் கலந்து கொள்பவர்கள் கீழ்கண்ட அனைத்துக்குமான ஆலோசனைகளையும் பெறலாம்…
* தொழில் தொடங்குவது எப்படி?
* மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு என்னென்ன தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன?
* தொழில் தொடங்க எங்கு பயிற்சி பெற வேண்டும்? அதற்கான உதவித் திட்டங்கள் என்னென்ன?
* தொழில் தொடங்கத் தேவையான நிதி, இடம், மூலப் பொருட்கள், மார்கெட்டிங், ஏற்றுமதி ஆகியவற்றை தேர்ந்தெடுப்பது பற்றிய தகவல்களை எங்கு பெறலாம்?
* மார்கெட்டிங் இணைக்கப்பட்ட தொழில்கள் எவை?
* வெற்றிகரமாக நிர்வாகம் செய்வது எப்படி?
* மத்திய, மாநில அரசுகளின் மானியத் திட்டங்கள் மற்றும் ஏற்றுமதிக் கொள்கைகள் – அவற்றைப் பெறும் வழிமுறைகள்?
* ஒரு தொழிலைத் தொடங்கி அதில் தொடர்ந்து நீடித்திருப்பது எப்படி?
* பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், நிதி நிறுவன அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், தனியார் துறை தொழில் அதிபர்கள், வெற்றிகரமாகச் செயல்படும் மகளிர் தொழில் முனைவோர்கள், இயற்கை சுற்றுப்புறச்சூழல் வேளாண் சார்ந்த கிராம வளர்ச்சிக்கான தொழில்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து பெண்கள் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தொழில்கள், நிதியைக் கையாளும் முறை, தொழிலில் நிலைத்திருக்க ஆலோசனைகள் பெறலாம்.
மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்துத் தகவல்களும் அடங்கிய மாநாட்டு மலர், கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். இலவச தொழில் ஆலோசனைகளும் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம்.
கருத்தரங்கு நடைபெறும் நாட்கள்: ஜூன் 27 மற்றும் 28, 2014.
கருத்தரங்கில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டிய முகவரி:
135-B, செயிண்ட்பால்ஸ் காம்ப்ளக்ஸ்,
பாரதியார் சாலை,
திருச்சிராப்பள்ளி – 1.
தொலைபேசி எண்: 0431-4200040, 9488785806.
Image courtesy: http://wallpoper.com/