ஷர்மிளா ராஜசேகர்
இங்க மட்டும் ஏன் இப்டி?
பாண்டிச்சேரில இருந்து வீட்டுக்கு வந்த கெஸ்ட்… கேட்ட ஒரு முக்கியமான கேள்வியும் கிடைத்த பதிலும்!
‘பாண்டிச்சேரிலயும்தான் தெருவுக்கு தெரு தண்ணி கடை இருக்கு. ஆனா, அங்க குடிச்சுட்டு ரோட்டுல விழுந்து கிடக்கறதெல்லாம் இல்ல. இங்க மட்டும் ஏன் இப்டி இருக்கு?’
அங்க கிடைக்கறதெல்லாம் தரமானதா இருக்கும். குவாலிட்டியானது மட்டும்தான்… இங்க கிடைக்கறதெல்லாம் பட்ட சாராயம்… லிவர் அஃபெக்ட் ஆகும். டைரக்ட்டா சிறுமூளையை பாதிக்கும். அதனாலதான்!!!
என்ன பண்றது… குடிச்சுட்டு கிடங்க ‘போற’ வரைக்கும்.
ஒரே ஒரு டவுட்!!!
ஒரு டீச்சர் போட்டோ போட்டு இஷ்டத்துக்கு ஸ்டேடஸ் வந்தாச்சு. இன்னும் கூட வருது… ஓகே..!
அந்த போட்டோவைப் பார்க்கும் போதே நம்ம பொண்ணு மாதிரி இல்லைன்னு யாருக்கும் தோணலையா?
சரி… நம்ம தமிழ் பொண்ணு… உலகம் முழுதும் பரவும் செய்தியாச்சே… தப்பே பண்ணினாலும் அதை அசிங்கப்படுத்தறது தப்புன்னு யாருக்கும் நினைக்க தோணலையா?
அடுத்த நாட்டு பொண்ண பத்தி கூட நம்ம தொப்புள் கொடி உறவு அது இதுன்னு டயலாக் பேசினவங்க எல்லாரும்… நம்ம வீட்டு பொண்ணு தப்பு பண்ணினா மறைக்கறோம்… சரி! நம்ம தமிழ்ப் பொண்ணு ஆசைப்பட்டுடுச்சு, இருக்கட்டும்ன்னு நினைக்க கூடாதா? நல்ல விஷயங்களை பரப்பலாம்… நம்ம வீட்டு விஷயத்தை உலக அளவில் நாமே அசிங்கப்படுத்திக்கறது சரியா?
ஏன் எல்லோருக்கும் இப்படி ஓர் எண்ணம் வரலை?
இதுதான் இந்தியா?
‘இந்தியா என்பது நம் தாய்நாடு. இந்தியர் அனைவரும் உடன்பிறந்தவர்கள். உணவு, மொழி, உடை வேறு வேறு என்பதைத் தவிர நம் எண்ணங்கள் ஒன்றே. இதுதான் இந்தியா’ என்று தாரக மந்திரம் போல சொல்லப்பட்டது.
நாட்டுக்குள்ளேயே கொடூரமாக அடித்து தீ இட்டு கொன்று போடும் அளவுக்கு கொடூர புத்தி கொண்டவர்களா உடன்பிறந்தவர்கள்! அப்படி கொடூரமாக தாக்கும் அளவில் தேச துரோகிகளாகவோ, தீவிரவாதிகளாகவோ இல்லாத பட்சத்தில் இவ்வளவு கொடுமைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?
இதைக் குறித்து கேட்கவோ கண்டிக்கவோ அக்கறை இல்லாத மத்திய அரசு… இது குறித்தான முன்னெச்சரிக்கை ஆந்திர அரசின் சார்பில் அளிக்கப்பட்டும் அதை கிராம மக்களிடம் சரியான வகையில் கொண்டு சேர்க்கத் தவறிய கையாலாகாத மாநில அரசு.
சரியான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இயலாத அரசின் தலைமையின் கீழ் இருக்கும் மக்கள் பிழைப்புக்கு வழி தேடி கொடூரமான நிலையில் உயிரை விடும் நிலையில் தள்ளப்பட்ட கொடூரம்.
எதுவாக இருந்தாலும் முதலில் இழப்பீடு என்ற பெயரில் பணத்தை கொடுத்து மக்களை வாய் மூட வைக்கும் அரசின் தந்திரம்… ஓட்டுக்காக இன, ஜாதி வெறியைத் தூண்டி விட்டு மக்களை பிரித்தே வைத்திருக்கும் கட்சிகள்… எந்த வகையில் அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற கட்சிகளே வளர்ந்திருப்பது மிகப்பெரிய சாபம்.
வேற்று நாட்டில் இப்படி ஒரு கொடுமை நடந்ததற்க்கு பொங்கிய மக்கள் சொந்த மக்கள் அடிபடுவதை கண்டும் அரசினை எதிர்த்து ஒரு வார்த்தை பேச இயலாத சூழ்நிலை.
அதிகாரத்தில் இருக்கும் அரசினை கேட்க திராணி இல்லாத மக்கள் இருக்கும் போது இது போன்ற பொம்மை அரசுகளுக்கு முடிவே இல்லை..!
Image courtesy: